என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கோடையில் பருகும் நீர் ஆகாரம்
    X

    கோடையில் பருகும் நீர் ஆகாரம்

    • ரத்த சோகை தடுப்புக்கு உதவுகிறது.
    • கருவேப்பிலையில் உள்ள இரும்புசத்து மற்றும் போலிக் அமிலம் ஹீமோகுேளாபின் அளவை உயர்த்த உதவுகின்றன.

    கோடை வரப் போகின்றது வழக்கம் போல் வெயில் கொளுத்தும். நாம் வாடி வதங்கி வெயிலால் தவிப்போம். இது வருடம் தவறாது நடக்கும் நிகழ்வுதான். கோடைக் கால பராமரிப்பு, கோடைக்கால நோய்கள் என கோடையை சமாளிக்க பல வழிகளை பின்பற்றுவோம். நன்கு அறிந்தனவற்றினைக் கூட மீண்டும் ஞாபகப்படுத்தி செயல்படுத்துவோம். அந்த வகையில் உடலின் நீர் தன்மை வற்றாது இருக்கவும், கூடவே நீருடன் சில பொருட்களை பயன்படுத்தி உடலுக்குத் தேவையான சில தாதுக்கள் மற்றும் பல நன்மைகளைப் பெறும் வழிமுறைகளை இப்போது பார்ப்போம்.

    நமது உணவு முறையில் நீரே சிகிச்சை தன்மை கொண்டதாக முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. தினமும் 2 முதல் 3 லிட்டர் நீர் பருகுவது அவசியம் என வலியுறுத்தப்படுகின்றது. இத்துடன் இயற்கை மூலிகைகள், பழ சாறுகள் சேரும் போது அது மருந்தாக, ஊட்டச் சத்தாக பயன்படுகின்றது. பல தலைமுறைகளாக நம் நாட்டில் பயன்படுத்தப்படும் முறைகள் இவை. குறைந்த செலவு, நிறைந்த பலன் என்ற முறையிலே பலன் தருபவை. பாதுகாப்பானவை. எளிமையானவை. ஆரோக்கியமானவை.

    எலுமிச்சை நீர்- ஒரு கிளாஸ் வெகு வெதுப்பான நீரில் அரை எலுமிச்சை சாறு பிழிந்து குடிக்கலாம். சிலர் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்வர்.

    எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம், பிளாவரைய்டுகள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன.

    நன்மைகள்- செரிமானத்தினை மேம்படுத்தும். அஜீரணம், வயிற்று வீக்கம் போன்ற பிரச்சினைகள் குறைய உதவுகிறது.

    * நோய் எதிர்ப்பு சக்தி கூடுகின்றது. சளி, இருமல், தொண்டை வலி என்பவர்களுக்கு சிறந்த பலன் அளிக்கும்.

    * உடல் நச்சுகளை நீக்கும். கல்லீரல் செயல்பாட்டினை ஊக்குவித்து உடலில் சேரும். நச்சுக் கழிவுகளை வெளியேற்ற உதவும்.

    கமலி ஸ்ரீபால்


    * சரும ஆரோக்கியம் கூடும், முதுமை கட்டுப்படும், கரும் புள்ளிகள் நன்கு குறையும்.

    உடல் எடை கட்டுப்பாடு- எலுமிச்சை நீர் குடிப்பதால் பசி உணர்வு கட்டுப்படும். அதிக கலோரி உணவுகள் தவிர்க்க உதவுகின்றது.

    சீரக நீர்- ஒரு டீஸ்பூன் சீரகத்தினை நன்கு கழுவி 2 டம்ளர் நீரில் இரவு முழுவதும் நன்கு ஊற வைக்கவும். காலையில் இதனை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.

    சீரகத்தின் மருத்துவத்தன்மை- சீரகம் ஒரு கார்மினேட்டிவ் வாயுவை வெளியேற்றும் என ஆயுர்வேதம் கூறுகின்றது.

    * சீரக நீர் குடிப்பதால் வயிற்றில் தேங்கிய வாயு வெளியேறி வயிற்று வலி, வீக்கம் குறைகின்றது.

    * ரத்த சர்க்கரை கட்டுப்பாடுடன் இருக்க உதவுகிறது- சீரகம் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றது. நீரிழிவு நோயாளிகள் மருத்துவர் ஆலோசனை பெற்று குடிக்கலாம்.

    * ரத்த சோகை தடுப்புக்கு உதவுகிறது. சீரகத்தில் இரும்பு சத்து உள்ளது. தொடர்ந்து சீரக நீர் குடிப்பது ஹீமோகுளோபின் அளவை உயர்த்த உதவும்.

    * மகப்பேறு கால நன்மைகள்- பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்களுக்கு சீரக நீர் பால் சுரப்பை அதிகரிக்கவும், உடல் சோர்வை குறைக்கவும் பயன்படுகின்றது.

    * உடல் அழற்சி குறைப்பு ஏற்படும். மூட்டு வலி, உடல் வலிகளை குறைக்க உதவுகின்றது.

    கொத்தமல்லி நீர்- தனியா விதைகளை கழுவி, நன்கு ஊற வைத்து பின் கொதிக்க வைத்து வடிக்கட்டி குடிக்கலாம்.

    * சீரணத்திற்கு உதவுகின்றது. இதில் உள்ள என்சைகள் அஜீரணத்தை சீர் செய்யும். வயிறு உப்பிசம், வாயு நீங்கும். ஆரோக்கியமான குடல் உருவாகும்.

    * ரத்தத்தில் உயர் சர்க்கரை ஏற்றத்தினை கட்டுப்படுத்தும்.

    * நச்சுகளை நீக்கும்- கல்லீரல், சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவும்.

    * சரும ஆரோக்கியம்- சரும தடிப்பு, பரு, சிகப்பு திட்டுகள் நீங்கும்.

    * வைட்டமின் ஏ, சி, கே. சத்து நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூட்டும். சிறுநீர் போக்கில் எரிச்சலுக்கு துணை மருந்தாக உதவும்.

    * உடலில் அதிக நீர் தேங்காது இருக்கச் செய்யும்.

    * வயிறு உப்பிசம், சதை பிடிப்புகள் நீங்கும்.

    உடல் நல பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை பெற்று பிறகு எடுத்துக் கொள்ளலாம். மற்றவர்களும் அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது.

    வெந்தய நீர்- வெந்தயம் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து நன்கு கழுவி ஒரு கிளாஸ் நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் குடிக்கவும். பொதுவில் அனைவருமே மருத்துவர் ஆலோசனை பெற்று இதனை எடுத்துக் கொள்வது அவசியம்.

    * வயிறு உப்பிசம், மலச்சிக்கல் நீங்கும்.

    * சர்க்கரை நோய் பிரிவு 2 பாதிப்பு உள்ளவர்களுக்கு சர்க்கரை அளவு கட்டுப்படும்.

    மாத்திரை, ஊசி என எடுத்துக் கொள்பவர்கள், சாதாரண உடல் நலத்துடன் இருப்பவர்கள் இரு பிரிவுமே சர்க்கரை ரத்தத்தில் அதிக அளவு குறையாமல் இருக்க மருத்துவர் ஆலோசனை அவசியம் பெற வேண்டும்.

    * கொழுப்பு சத்தினைக் குறைக்கும். இருதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

    * மூட்டு வலி குறையும் என ஆயுர்வேதம் குறிப்பிடுகின்றது.

    * ஹார்மோன் சீராக இயங்க உதவும். மாதவிடாய் கால பிரச்சினைகள், மாத விலக்கு நிற்கும் கால பிரச்சினைகளை குறைக்க உதவும்.

    * சருமம், முடி ஊட்டம் பெறும்.

    கருவேப்பிலை சாறு- நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் கருவேப்பிலை ஒரு மூலிகை என்றே ஆயுர்வேத, சித்த மருத்துவத்தில் குறிப்பிடுகின்றனர். இதனை சாறாக எடுத்துக் கொள்ளும் போது சிறந்த மருத்துவ பலன்களைப் பெறுகின்றோம். சர்க்கரை நோய், செரிமானக் கோளாறு, முடி உதிர்வு போன்றவைகளுக்கு கருவேப்பிலை சாறு சிறந்த பயன் அளிக்கின்றது.

    புதிய பறித்த கருவேப்பிலையினை சிறிதளவு நீர் விட்டு அரைத்து வடிகட்டி சுமார் 20 மி.லி. அளவு எடுத்துக் கொள்வது வீட்டு வைத்தியமாக பரிந்துரைக்கப்படுகின்றது.

    கருவேப்பிலை சாறு இன்சுலின் சுரப்பதனையும், அதன் செயல் திறனையும் மேம்படுத்த உதவுகின்றது. இதனால் சர்க்கரை அளவு சீராக இருக்க உதவுகின்றது. நீரிழிவு நோயாளிகள் இதனை துணை மருந்தாக பயன்படுத்தலாம்.

    'செரிமானத்தினை மேம்படுத்தும்- அஜீரணம், வயிறு வீக்கம், வாந்தி உணர்வு போன்றவை குறைய உதவுகின்றது. கல்லீரல் செயல்பாட்டினை ஊக்குவித்து பித்த சுரப்பை போக்குகின்றது.

    கருவேப்பிலையில் உள்ள இரும்புசத்து மற்றும் போலிக் அமிலம் ஹீமோகுேளாபின் அளவை உயர்த்த உதவுகின்றன. முடி ஆரோக்கியத்திற்கு, முடிவேர் வலுப்படுதலுக்கு கருவேப்பிலை சாறு உதவுகின்றது. உடலில் தேவையில்லாத கொழுப்பு நீங்குகின்றது. கல்லீரலை பாதுகாக்கின்றது. மதுபானம் அல்லது மருந்துகளால் ஏற்படும் கல்லீரல் அலற்சியை குறைக்க உதவுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தி கூடுகின்றது.

    கவனிக்க வேண்டியவை:

    கருவேப்பிலை சாறு அதிகம் எடுத்துக் கொண்டால் வயிற்று எரிச்சல் ஏற்படும். கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் இதனை தவிர்ப்பது நல்லது. இது மருந்தல்ல. சிகிச்சை முறையாக பயன்படுத்தக் கூடாது. இந்த தகவல்கள் ஆதாரத்துடன் சேகரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளன.

    புதினா சாறு: இது நம் நாட்டு சமையலில் அதிகம் இடம் பெறுவது தான். இருப்பினும் சாறு குடிக்கும் பொழுது இதன் பலன்கள் கூடுதலாக இருக்கும். 30 மிலி அளவு சாற்றினை எடுத்துக் கொள்ளலாம். புதினாவில் உள்ள முக்கிய ஊட்ட சத்துக்கள்: வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஈ சத்து நிறைந்தது. இரும்பு சத்து, கால்சியம், மெந்தால் ஆன்டி ஆக்சிடெண்ட் அதிகமாக உள்ளன.

    நன்மைகள்: புதினா சாறு, செரிமானத்தினை மேம்படுத்தும். அஜீரணம், வயிற்று எரிச்சல், வாந்தி உணர்வு இவற்றினை குறைக்கும். அசிடிடி குறையும். கல்லீரல் செயல் பாட்டினை மேம்படுத்தும். மூக்கடைப்பு, சளி, இருமல் குறைக்கும். இதனால் சுவாசம் எளிதாகும். தலைவலி, மனஅழுத்தம், சோர்வு, இவற்றினைக் குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

    கவனிக்க வேண்டியவை: அதிக அளவில் குடித்தால் வயிற்று எரிச்சல் ஏற்படும். குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்த்து விடலாம். கர்ப்பிணி பெண்களும் தவிர்த்து விடலாம். நீண்ட நாள் நோயாளிகள் மருத்துவர் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மோர்: மோர் என்பது தயிரை நீருடன் கலந்து வெண்ணெய் பிரித்து தயாரிக்கப்படும். பாரம்பரிய தயிரை விடவும் கூட மோர் நன்மை கொண்டது. மோர் குறைந்த கொழுப்பு, நிறைந்த கலோரி சத்து கொண்டது. நன்மை தரும் புரோபயாடிக் பாக்டிரீயா கொண்டது. கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் பி12, பி2, மற்றும் சிறிது புரதம் கொண்டது. குடல்நலம் காக்கப்படுகின்றது. அஜீரணம், வயிற்று வீக்கம், வாயுத் தொல்லை போன்ற பிரச்சினைகள் குறைக்கின்றன. சோர்வு, நீர் இழப்பு தடுக்கப்படுகின்றது. அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் குறைகின்றது. மோரில் உள்ள கால்சியம் எலும்பு வலிமை பெற மற்றும் எலும்பு தளர்வு தடுப்பு ஆகியவற்றிற்கு உதவுகின்றன. பசியை கட்டுப்படுத்தவும் சர்க்கரை பானங்களுக்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம்.

    கவனிக்க வேண்டியவை: சிலருக்கு சளி அதிகரிப்பு, மூக்கடைப்பு ஏற்படலாம். வயிற்று வலி, வயிற்றுப் போக்கு ஏற்படலாம். இரவு நேரத்தில் மோர் தவிர்க்க வேண்டும். அதிகமாக மோர் குடித்தால் வயிறு கனத்த உணர்வு. குடல் இயக்கம் பாதிப்பு ஏற்படலாம். உப்பு அதிகம் இருந்தால் தாதுச் சமநிலை பாதிப்பு ஏற்படலாம். காய்ச்சல் மற்றும் குடல் தொற்று உள்ள போது மோரை தவிர்க்க வேண்டும். மோர் புதிய தயிரில் தயாரித்து நல்ல அளவில் நீர் சேர்க்க வேண்டும். இஞ்சி, சீரகம், கருவேப்பிலை சேர்த்து பகலில் அருந்தலாம். இப்படி பல விதங்களில் உடலை, குடலை பராமரிக்க முடியும். எளிமையான இந்த பானங்களை அருந்தலாமே.

    Next Story
    ×