என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • கதவைத் திறந்து கொண்டு அவர் ஞானியாக வெளியே வந்தார்.
    • ஞானம் என்றால் என்ன என்பதை அவரும் கண்டு கொண்டார்.

    பக்தி வழியில் இறைவனை வணங்குவதும், நமக்கு வேண்டியவைகளை எல்லாம் கேட்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்வதும் சிறந்தவைகளாக போற்றப்படுகின்றன.

    இவையெல்லாம் பக்தி மார்க்கத்தின் ஆரம்பகால அணுகுமுறையாகக் கருதப்படுகின்றன. அதன்பிறகு பக்தியும் பிரார்த்தனையும் இரண்டாம் பட்சமாகக் கருதப்படுகின்றன.

    அதன்பிறகு, எல்லாம் அவன் செயல், அவனன்றி அணுவும் அசையாது, அவன் ஆட்டுவிக்கிறான், நான் ஆடுகிறேன் என்ற சரணாகதி அணுகுமுறை தான் முக்கியம் ஆகிவிடுகிறது.

    பக்தனும் ஞானியும் சரணாகதி அம்சத்தில் ஒன்றாகி விடுகின்றனர்.

    ஜே.கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி பார்த்தோம். அவர் எப்படி ஞானம் அடைந்தார் என்பதையும் பார்த்துவிடுவோம்.

    ஜே.கே. எனும் ஜே.கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிய ஒரு தீர்க்கதரிசனம் உண்டு. அவர் பிற்காலத்தில் உலகத்துக்கே வழி காட்டும் உலக போதகராக வருவார் என்று அவர் குழந்தையாக இருந்த போதே கூறப்பட்டது.

    அவருக்குத் தேவையான பயிற்சிகளைக் கொடுத்து அவரை உருவாக்கும் நோக்கில், அன்னி பெசண்ட் அம்மையார் அவரையும் அவரது தம்பி நித்யாவையும் தத்து எடுத்து வளர்த்தார். ஜே.கே. ஆன்மிக பயிற்சிகள் பலவற்றை கற்றுக் கொண்டார். பரவச நிலைகள் பலவற்றை அடைந்தார். தியானத்தின் மூலம் தன்னை மறந்த சமாதி நிலை அனுபவங்கள் எல்லாம் அவருக்குக் கிடைத்தன.

    நோய்களை குணமாக்கும் ஆற்றல் கூட அவருக்கு ஏற்பட்டது.

    ஆனாலும் ஞானம் மட்டும் அவருக்கு ஏற்படவில்லை. அதனைத் தேடி தான் அவரும் காத்திருந்தார் .

    அந்நிலையில் அவர்கள் பங்குவகித்த தியாசாபிகல் சொசைட்டியின் சர்வதேச மாநாடு ஒன்று சென்னையில் நடைபெற இருந்தது.

    இங்கிலாந்தில் இருந்து அன்னி பெசண்ட் அம்மையார் மற்றும் முக்கியஸ்தர்கள் மாநாட்டுக்காக கப்பலில் புறப்பட்டார்கள்.

    அவர்கள் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்தார்கள். அந்நேரம் கிருஷ்ணமூர்த்தியின் சகோதரர் நித்யா சுகவீனமாக படுக்கையில் இருந்தார். அவரை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு கிருஷ்ணமூர்த்திக்கு இருந்தது.

    அனைவரும் தீர்க்கதரிசனத்தின் உதவியை நாடினார்கள்.

    ஸ்ரீ பகவத்

    தீர்க்கதரிசனம் இவ்வாறு கூறியது:

    " கிருஷ்ண மூர்த்தி உலக போதகராக வருவார். அவருக்கு பன்னிரண்டு சீடர்கள் இருப்பார்கள். அவர்களுள் பிரதம சீடராக இருக்கப் போவது இந்த நித்யா தான்."

    தீர்க்கதரிசனத்தை நம்பிய அவர்கள்

    ஜே.கே.யுடன் கப்பலில் புறப்பட்டார்கள். கப்பல் நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது,

    "நித்யா சீரியஸ்" என்று தந்தி வந்தது.

    பயணம் செய்தவர்கள் முடிவெடுக்க முடியாமல் திணறினர். அந்த நிலையில் அடுத்த தந்தி வந்தது, நித்யா இறந்து விட்டார் என்று.

    ஜே.கே. நிலைகுலைந்து போனார். குடும்பத்தை விட்டு வெளியே வந்த அவருக்கு, நித்யா மட்டுமே ஒரே ஆறுதலாக இருந்து வந்தார் .

    அவரே போய்விட்ட பிறகு வாழ்வதற்கு அர்த்தமே இல்லாமல் போய் விட்டது.

    தீர்க்கதரிசனமும் ஏமாற்றிவிட்டது.

    அவர் கப்பலில் உள்ள அறையைப் பூட்டிக் கொண்டு உள்ளேயே உட்கார்ந்து விட்டார்.

    மனவேதனை அவரை அழுத்திக்கொண்டு இருக்கும் அந்த நிலையில் அவர் என்ன செய்வார்?

    தியானத்தின் மூலம் உலகை மறந்து சமாதி நிலைக்குப் போகமுடியும். ஆனால் அவர் அத்தகைய முயற்சிகள் எவற்றிலும் ஈடுபடாமல் அவர் தனது மனவருத்தத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு அப்படியே உட்கார்ந்து விட்டார்.

    அவருடைய மன இயக்கத்தை மாற்றி அமைக்கும் எந்தவொரு முயற்சியிலும் அவர் ஈடுபடவில்லை. நிர்வாகம் செய்யப்படாத அவருடைய மனது, சுதந்திரமாக இயங்கியது. அன்றுதான் அவர் முதன் முதலாக விடுதலையுற்ற மனதைக் கண்டு கொண்டார்.

    கதவைத் திறந்து கொண்டு அவர் ஞானியாக வெளியே வந்தார்.


    மகான் ஸ்ரீ அரவிந்தரைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. தற்செயலாக அவருடைய கட்டுரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது.

    அவர் தனது குருநாதரிடம் தியானங்களைக் கற்று அவற்றை பயிற்சி செய்து வந்திருக்கிறார். தியானத்தின் வழியாக பல்வேறு ஆன்மிக அனுபவங்கள் அவருக்குக் கிடைத்துள்ளன. பிராணயாமம் செய்ததின் விளைவாக கவிதை எழுதக் கூடிய ஆற்றல் கிடைத்திருக்கிறது என்றும் கவிதைக்கும் பிராணயாமத்துக்கும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லை என்றும் கூறுகிறார்.

    தொடர்ந்து ஏற்பட்ட ஆன்மிக அனுபவங்கள் அவருக்கு ஒரு சலிப்பையே ஏற்படுத்திவிட்டது.

    அதனால் அவர் ஒரு வருடமாக எந்தப் பயிற்சியிலும் ஈடுபடாமல் சும்மாவே இருந்து விட்டார். அந்நிலையில் திடீரென அவருக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவர் எந்தப் பயிற்சியையும் செய்திருக்கவில்லை. அந்நிலையில் இத்தகையதொரு மாற்றம் ஏற்படக் காரணம் என்ன என்று தெரியவில்லை.

    தன்னுடைய குருநாதர்தான் தமது தெய்வீக ஆற்றலின் மூலமாக தனக்கு இந்த மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக எண்ணிக் கொண்டார்.

    அது பற்றி அவர் தனது குருநாதரிடம் கேட்டார்.

    அவரும் இவருக்கு ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டார்.

    அரவிந்தரும் தனக்கு ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றி விளக்கமாகக் கூறினார். அதனைப் புரிந்து கொண்ட அந்த குருநாதரும், "நீ அடைந்திருக்கும் இந்த நிலையை நானே இன்னும் அடைந்திருக்க வில்லை. அதனைத்தான் நானுமே இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறேன். நானே அடைந்திராத ஒரு நிலையை நான் எப்படி அப்பா உனக்கு தானமாக கொடுக்க முடியும்?" என்று கேட்டார்.

    அரவிந்தரும், "அப்படியானால் அந்த பராசக்தி தான் எனக்கு இந்த பாக்கியத்தை வழங்கியிருக்கிறார்" என அதனை முடித்துக் கொண்டார்.

    நான் சேலம் வந்திருந்த புதிதில், நம்மை சந்திக்க வந்திருந்த அன்பர்களில் சிலர் கேரளா சுவாமி என்ற ஒருவரைப் பற்றி கூறினார்கள்.

    இளம் வயதுள்ள அவர், பிராணயாமம் செய்தால் ஞானம் அடைந்து விடலாம் என எண்ணியிருந்திருக்கிறார்.

    எவருடைய தொந்தரவும் இல்லாமல் பிராணயாமம் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில், தண்ணீர் இல்லாமல் இருந்த ஒரு பாழடைந்த கிணற்றினுள் இரண்டு வருடகாலம் உட்கார்ந்து பிராணயாமம் செய்திருக்கிறார்.

    அவர் எதிர்பார்த்த ஞானம் அவருக்குக் கிடைக்கவில்லை.

    கிணற்றை விட்டு வெளியே வந்து விட்டார். ரிஷிகேஷ் புறப்பட்டுச் சென்று அங்குள்ள மடங்களில் இருக்கும் குருநாதர்களையெல்லாம் சந்தித்தார். பல்வேறு பயிற்சிகளையெல்லாம் எடுத்துக் கொண்டார்.

    எந்தவொரு பயிற்சியின் மூலமாகவும் அவர் எதிர்பார்த்த ஞானம் அவருக்குக் கிடைத்த பாடில்லை.

    ஞானத்தை அடையாமல் அவருக்கு வாழவும் பிடிக்கவில்லை. ஞானம் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? இப்படி ஓர் அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்வதைவிட இந்த வாழ்க்கையையே முடித்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தார்.

    அப்படி முடிவெடுத்த அவர் அங்கிருந்த மலை பாறை ஒன்றின் மீது அப்படியே படுத்துக் கொண்டார். நல்ல வெயில். "உயிர் போகும் வரை இந்த இடத்தை விட்டு அசையக்கூடாது. இப்படியே படுத்து உயிரை விட்டுவிட வேண்டும்" என எண்ணி அப்படியே படுத்துக் கொண்டார்.

    இப்போது அவருக்கு தன்னுடைய மனதை நிர்வாகம் செய்து அதனை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்சி ஏதாவது இருக்குமா?

    அவர் தனது மன இயக்கத்தை எதுவுமே செய்யாமல் அதன் போக்கில் அப்படியே விட்டு விட்டார்.

    நிர்வாகம் செய்யப்படாத அவருடைய மனது விடுதலையுற்று இயங்க ஆரம்பித்தது.

    தனக்கு ஏற்பட்ட மாற்றத்தை அவரும் புரிந்து கொண்டார். அடைய வேண்டியதை அடைந்துவிட்டோம் என்ற திருப்தியோடு ஊருக்குத் திரும்பினார்.

    அவரைப் பற்றி கடைசியாகக் கிடைத்த தகவல் என்னவென்றால், "இரண்டு வருடங்கள் அந்த கிணற்றினுள் இருந்து பிராணயாமம் செய்ததன் விளைவாகவே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது" என்று பிராணயாமத்துக்கும் அதற்கும் முடிச்சு போட்டு பலருக்கும் பிராணயாமத்தையே கற்பித்து வருகிறார் என்பதையே.

    இதனைப் போன்றே இன்னும் ஒருவருக்கு இத்தகைய சம்பவம் ஏற்பட்டுள்ளது . அவர் ராமகிருஷ்ண மடத்தில் சந்நியாசியாக இருந்து வந்தார். ஆன்மிக அனுஷ்டானங்கள் அனைத்தையும் முறையாக செய்து வந்தார். ஆன்மிக சாஸ்திரங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்தார்.

    ஆனாலும் அவர் தேடிக் கொண்டிருந்த ஞானம் கிடைத்தபாடில்லை. மடத்தில் இருந்து பிரிந்து சென்ற சந்நியாசி ஒருவர் தனியாக மடாலயம் ஒன்றை ஆரம்பித்தார்.

    இவரும் அவருடன் சேர்ந்து கொண்டு ஆன்ம சாதனைகளில் ஈடுபட்டார். எதுவும் கிடைக்கவில்லை.

    மனம் உடைந்த நிலையில் அங்கிருந்தும் வெளியேவந்து இன்னும் ஒரு சகசந்நியாசி வீட்டுக்குச் சென்று அவரிடம் புலம்பினார்:

    "சாஸ்திரங்களைப் படித்ததெல்லாம் வேஸ்ட்; தியானங்கள் பண்ணியதெல்லாம் வேஸ்ட். இருபது வருடங்கள் வீணாகப் போய்விட்டன. எவையுமே பயன்படவில்லை."

    நிம்மதியற்ற மனநிலையில் அங்கே தங்கியிருந்தார். இப்போது, தன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத் தோடு பயிற்சி முயற்சிகளில் ஈடுபடுவாறா?

    தன்னுடைய மன இயக்கத்தை நிர்வாகம் செய்வதை அப்படியே விட்டு விட்டார்.

    அவருடைய மனம் அதன் போக்கில் செயல்பட ஆரம்பித்தது. ஞானம் என்றால் என்ன என்பதை அவரும் கண்டு கொண்டார்.

    தொடர்புக்கு: வாட்ஸப் - 8608680532

    • மெழுகுவர்த்தியின் ஆயுள் எதுவரை? அதன் திரி எரிந்து, மெழுகு உருகி வழிந்து முடியும் வரை!
    • மதிப்புடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள், மரியாதைக்கு உரியவர்களாகவே வாழ்கிறார்கள்.

    'வாழ்க்கை ஒரு வாய்ப்பு. அதிலிருந்து பயனடையுங்கள். வாழ்க்கை ஓர் அழகு. அதைப் போற்றுங்கள். வாழ்க்கை ஒரு கனவு. அதைப் புரிந்து கொள்ளுங்கள்'.

    - அன்னை தெரசா

    காலத்தின் வேகத்தை நாம் உணர்வதில்லை. புதிய மாதம், புதிய வருடம் எனக் கொண்டாடுகிறோமே தவிர, ஒவ்வொரு நாளும் வாழ்வின் நீளம் குறுகிக் கொண்டிருப்பதை நாம் எண்ணிப் பார்ப்பதே இல்லை.

    அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதும் ஆபத்து. அப்படிச் சிலர், தங்கள் வாழ்வை ரசித்து அனுபவிக்க முடியாமலேயே கடத்திவிடுகின்றனர். காலத்தை அறிகிற ஞானம் வேண்டும்; தெளிவான பார்வை வேண்டும்; கலக்கம் தேவையில்லை.

    நாம் கவனிக்கின்றோமோ இல்லையோ, காலம் தன் காரியங்களை நடத்திக்கொண்டே இருக்கும். புதிய வெள்ளம் வருகின்றது; அலைகளுடன் ஆர்ப்பரித்து நடைபோடுகிறது. அதுவும் கடந்து செல்கிறது.

    கால வெளியில் அன்றாடம் புதிய புதிய ஜனனங்கள்; பலப்பல மரணங்கள். காலத்தின் கணக்கு நமக்குப் புரிவதில்லை. யாரை விட்டுச் செல்லும், யாரை எப்போது இழுத்துச் செல்லும் என்பது யாருக்கும் தெரியாது. அதுதான் மிகப்பெரிய ரகசியம்.

    குடும்ப உறவுகள், நண்பர்கள், ஆத்மார்த்தமானவர்கள் எனப் பலரோடு ஒவ்வொருவர் வாழ்க்கையும் பின்னிப் பிணைந்திருக்கின்றது. ரெயில் பெட்டிகள்போல் உள்ளங்கள் ஒவ்வொன்றும் இணைந்தே பயணிக்கின்றன. எனினும், ஒவ்வொருவரையும் ஒவ்வொரு புள்ளியில், காலம் கொண்டு வந்து நிறுத்திவிடுகின்றது.

    பார்க்கின்றோம், பழகுகின்றோம், சிரிக்கின்றோம், ரசிக்கின்றோம், கொண்டாடுகின்றோம் - வாழ்க்கை இனியதுதான்.

    ஓடி ஓடித் திரிகின்றோம். நிழல்கண்ட இடங்களில் கொஞ்ச நேர ஆசுவாசம். மீண்டும் ஓட்டம் தொடர்கின்றது. பணத்திற்காக ஓடுவதும், பொருள் தேடுவதும், உறவுகளை நாடுவதும் மனித வாழ்வின் நியதிகள். பரபரப்பான இந்த வாழ்வில், ஆத்மார்த்தமாய் ஒருசிலர் நம் வாழ்வோடு கலந்துவிடுகின்றனர். அந்த ஆத்மார்த்த நினைவுகள், நம் அடிமனதில் எப்போதும் உலவிக்கொண்டே இருக்கும். சில நினைவுகள் பாதி உறக்கத்தில் இருக்கும்; ஆனால், ஒருதுளிச் சாரலில் சிலிர்த்துவிடும். அப்படி உறங்கிப்போன நினைவுகளை, சில சமயங்களில் முகநூல் தட்டி எழுப்பிவிடுகின்றது.

    வழக்கம்போல் முகநூல் பதிவுகளை மேலோட்டமாக நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, அதில் வந்திருந்த ஒரு தகவல் என்னை ஒரு உலுக்கு உலுக்கியது.

    என் ஆத்மார்த்த நண்பர் ஒருவரின் நிழற்படத்துடன், அவரின் பெயர் மற்றும் வயதைக் குறிப்பிட்டு, 'இன்று இவருக்குப் பிறந்தநாள், வாழ்த்துங்கள்' என்று அறிவித்திருந்தது. அதன் கீழே, வாழ்த்துச் செய்தி அனுப்புவதற்கான பகுதியும் இருந்தது.

    அதைப் பார்த்ததும் என் கண்கள் கலங்கின. அவர் இறந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன.

    அவர் என் ஆத்மார்த்த நண்பர். மிகச்சிறந்த மனிதர். பத்திரிகைத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். பழகின மாத்திரத்திலேயே என் மனதுக்கு நெருக்கமான நண்பராகிவிட்டார்.

    முதன்முறையாக அவரைச் சந்திக்க அலுவலகத்திற்குச் சென்றிருந்த தினத்தில், அவர் விடுப்பில் இருந்தார். எனவே, என் கவிதை நூல் ஒன்றை அவர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு நான் சென்றுவிட்டேன்.

    மறுநாள் அவரிடமிருந்து எனக்கு போன் வந்தது.

    'கவிதைகளைப் படிச்சி ரசிச்சேன். நம்ம பத்திரிகைக்கு எழுதலாமே' என்றார்.

    எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. உடனடியாக ஐந்து கவிதைகளை எழுதி, மறுநாளே அவரின் அலுவலகத்திற்குச் சென்றேன். பேட்டி எடுக்கிற விஷயமாக அவர் வெளியே சென்றிருந்தபடியால், அன்றும் அவரைச் சந்திக்க முடியவில்லை. எனவே, கவிதைகளைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.

    ஓரிரு மணிநேரம் கழித்து அவரிடமிருந்து எனக்கு போன் வந்தது.

    'கவிதைகள் சிறப்பா இருக்குது. எனக்கு ஒரு யோசனை...' என்றார்.

    'என்ன?' என்றேன்.

    'ஒவ்வொரு கவிதைக்குள்ளும் ஒரு கதை இருக்குது. அதனால, கவிதையோடு அந்தக் கவிதைக்கான கதையையும் எழுதிக் கொடுத்தீங்கன்னா ரொம்ப புதுமையா இருக்கும்' என்றார்.

    எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. எனினும், சிறு தயக்கம். ஏனெனில், அப்போது நான் கவிதைகளும் கட்டுரைகளுமே அதிகமாக எழுதிக் கொண்டிருந்தேன். அவருடனான தொடர்புக்குச் சில வருடங்களுக்கு முன்பு ஒரு கதை எழுதி, அது பத்திரிகையில் வெளிவந்தது. அதன்பின் கதை எழுதவே இல்லை. நீண்ட இடைவெளிக்குப்பின் இப்படியொரு வாய்ப்பு.

    'கதை எனக்குக் கைவருமா...' என்று இழுத்தேன்.

    'உங்களால் முடியும், எழுதுங்கள்' என்றார்.

    அவரின் வார்த்தைகள் எனக்குள் அனல் மூட்டின. உறங்கிக் கிடந்த கதைகளுக்கான விதைகளைத் தட்டி எழுப்பின. விறுவிறு என்று எழுத ஆரம்பித்தேன். 25 கவிதைகளுடன் 25 கதைகள். அவை புதுமையான படைப்புகளாய் 25 வாரங்கள் பத்திரிகையில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றன.

    என் நண்பர் என் எழுத்துகளை அதிகமாக நேசித்தார். நான் நிறைய எழுத வேண்டும் என்பதில் அதிக அக்கறை கொண்டவர். கவிதைகளிலும் கட்டுரைகளிலும் முழுக்கவனம் கொண்டிருந்த என்னை 'உங்களால் மிகச்சிறந்த கதைகளையும் தரமுடியும்' என்று சொல்லி என்னைக் கதைக்களத்திற்குள் கொண்டு வந்தவர் அவர்தான்.

    சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் நாங்கள் சந்திப்பது வழக்கம். இலக்கியம் பற்றி நிறைய பேசுவோம்; நிறைய விவாதிப்போம். எங்கள் சந்திப்புகள் ஒவ்வொன்றும் ஓர் அற்புதமான இலக்கியக் கூடலாக இருக்கும்.

    சங்க இலக்கியம் தொட்டு, தற்கால இலக்கியம் வரை அவரிடம் பேசுவேன். கேட்டு ரசிப்பார். நான் கதை சொல்ல ஆரம்பித்தால் ஆர்வத்துடன் கேட்பார். சில சமயங்களில் சத்தம் போட்டுச் சிரிப்பார். முதல் தொடரைத் தொடர்ந்து, நான்கு தொடர்கள். ஆக, 90 சிறுகதைகள். அவை யாவும் பல தொகுதிகளாக வெளிவந்து பல விருதுகளைப் பெற்றிருக்கின்றன.

    எங்கள் நட்பு செழித்தோங்கியது. அப்போது தான், திடீரென கொரோனா உலகெங்கும் படையெடுக்கத் தொடங்கியது. எல்லோரும் வீட்டில் இருந்தபடியே பணியாற்றிய காலம் அது. அவரும் அப்படித்தான் பத்திரிகைப் பணிகளைக் கவனித்தார்.

    அச்சமயம், வாசகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், வாழ்வியல் படைப்புகளை என்னிடம் வாங்கி பத்திரிகையில் வெளியிட்டார். கொரோனா பற்றியும், அதன் தாக்கம் பற்றியும் அடிக்கடி போனில் பேசிக் கொள்வோம். இடையில் ஒரு வாரம், தம் தாயாரைப் பார்த்துவர சொந்த கிராமத்திற்குச் சென்றிருந்தார். அந்த வாரம் மட்டும்தான் நான் அவருடன் போனில் பேசவில்லை.

    மறுவாரத்தின் முதல்நாளின் காலைப் பொழுதில், என் மற்றொரு நண்பரிடமிருந்து வந்த செய்தி என்னை நிலைகுலையச் செய்துவிட்டது. என் உயிர் உருகி, என் நகக்கண்களில் வழிவதுபோல் இருந்தது. ஐயகோ! என் அன்பு நண்பர் போய்விட்டாரே!

    தேக்குமரத் தேகம் கொண்ட என் ஆத்மார்த்த நண்பர். தாயைப் பார்க்க ஊருக்குச் சென்றிருந்தவரின் உயிரை கொரோனா திருடிச் சென்றுவிட்டது.

    ஒரு வாரத்திற்குள்ளாகவா இப்படி ஒரு கொடுமை! என் இனிய நண்பரை இனி எங்கே பார்ப்பேன்! உள்ளத்திற்குள் ஏங்கினேன். அன்றாடக் கடமைகளிலும், புதிய புதிய விஷயங்களிலும் அந்த வலியை மறந்தது மனம். ஐந்தாண்டுகள் ஓடிவிட்டன.

    அவர் விடைபெற்றுச் சென்று ஆண்டுகள் கடந்தாயிற்று. இப்போது அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பும்படி முகநூல் கூறுகிறதே. எப்படி அனுப்புவது? நினைவுகள் நிழலாடின. என் அன்புக்குரிய ஆத்மார்த்த நண்பருக்கு உள்ளத்தால் வாழ்த்து மலர்களை அனுப்பினேன்.

    தினந்தோறும் அரங்கேறுகின்ற நிகழ்வுதான் மரணம். சாலையில் இறுதி ஊர்வலங்களைப் பார்க்கின்றபோது, எந்த பிரக்ஞையும் இன்றிக் கடந்து செல்கின்றோம். ஆனால், நம் மனதுக்கு நெருக்கமானவர்களின் மரணம், ரணத்தை மட்டுமன்றி ஆழமான உண்மைகளையும் நமக்கு அறியத் தருகின்றது.

    மெழுகுவர்த்தியின் ஆயுள் எதுவரை? அதன் திரி எரிந்து, மெழுகு உருகி வழிந்து முடியும் வரை! ஒரு மெழுகுவர்த்தி தயாரிக்கப்படும்போதே அதன் மெழுகு, திரி ஆகியவற்றின் தரம், அது எரியும் கால அளவு, கண்மூடும் நேரம் - அனைத்தும் நிர்ணயிக்கப்பட்டுவிடுகின்றன. அது தன் ஒளியிலேயே தன்னை உருகி வழியச் செய்து விடைபெறுகிறது.

    மெழுகுவர்த்திபோல் இறுதி வரையில் ஒளிகொடுத்து நிறைவு பெறுவதுதான் மகோன்னத வாழ்க்கை. ஏற்றப்படாத விளக்கு, எரிக்கப்படாத விறகு, எழுதப்படாத சாசனம் யாருக்கும் பயன்படாது.

    நம்மை இழுத்துச் செல்லும் காலத்தின் வேகம், நம் வாழ்வைப் பற்றி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. நீர்க்குமிழிக்குள் கோட்டை கட்டுகிறோம். சங்குக்குள் தேரோட்டுகிறோம். விண்மீன் கூட்டம்போல் விழிகளில் எத்தனை எத்தனைக் கனவுகள்! அவற்றை நனவாக்கிப் பார்க்க சக்கரம்போல் சுழல்கின்றோம். ஓர் எல்லைக் கோட்டில் இயக்கங்கள் நின்றுவிடும்.

    ஆயினும், நாம் ஏற்படுத்திச் செல்லும் தாக்கம் நமது உடல், உயிர் ஆகியவற்றின் இருப்பைக் கடந்தும் நீடிக்கக்கூடும். நம் குடும்ப உறவுகள், சொந்தபந்தங்கள், நண்பர்கள் மற்றும் சமூகத்திற்கு நாம் வழங்கியிருக்கும் பங்களிப்பின் மூலம், நம் பெயர் நம் காலத்திற்குப் பின்னரும் நினைவுகூரப்படும்; பேசப்படும்.

    நம் வாழ்க்கை ஒரு தங்கச் சுரங்கம். மாபெரும் கொடை. இதை நாம் வெறும் மண்மேடாக்கிவிடக் கூடாது.

    இன்று பெரும்பாலான மக்கள் சுயநலத்தையே சுவாசிக்கின்றனர். அடுத்திருப்பவனுக்குப் போடப்படும் இலையையும் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்பவர்கள், பிறரின் பசியை உணர்வதில்லை.

    தெருவில் திரிகின்ற அப்பாவி நாய்கள் மீது கல்லெடுத்து எறிகின்றவன், தன்னை வீரனாக எண்ணிக் கொள்கின்றான். ஓட்டலில் உணவு பரிமாறும் எளியவன் மீது ஆத்திரப்படுபவன், தன்னை உயர்ந்தவன் என்று காட்டிக்கொள்ள நினைக்கின்றான்.

     

    கவிஞர் தியாரூ, 9940056332

    ஆணவத்தில் சிலருக்குத் தலை வீங்கிவிடுகிறது. மிதமிஞ்சிய கொழுப்பில் தலை கனத்து, பின்னர் நடப்பதற்கே சிரமப்படுகிறார்கள். எனினும், திருந்துவதே இல்லை. அப்படியே வாழ்கிறார்கள்; அப்படியே போகிறார்கள்.

    மானுட வாழ்வின் மேன்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். வாழ்வின் மதிப்பு என்பது, நாம் வாழ்கின்ற விதத்தில் இருக்கின்றது. மதிப்புடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள், மரியாதைக்கு உரியவர்களாகவே வாழ்கிறார்கள். அத்தகையோரின் மாண்புமிகு வாழ்க்கைதான், அவர்களின் காலத்திற்குப் பின்னும் நன்றியுணர்வுடன் நினைவுகூரப்படுகின்றது.

    எந்த நோக்கமும் இல்லாமல், சிலர் தங்கள் காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பார்கள். அவர்கள் இருக்கும்போதும் அறியப்படுவதில்லை; இறந்த பின்னும் எண்ணப்படுவதில்லை.

    ஒரு மனிதனிடம் நிறைய செல்வம் இருந்தது. எல்லா வசதிகளும் இருந்தன. ஆனால், ஊருக்குள் அவனுக்குப் பெரிய மரியாதை ஒன்றும் இல்லை. வீதியில் நடந்தால்கூட யாரும் அவனைக் கண்டுகொள்வது இல்லை. அவனுக்கு மிகுந்த வருத்தம். ஒரு ஞானியைச் சந்தித்தான்.

    'ஐயா, என்னிடம் செல்வம் இருக்கிறது. ஆனால், ஊரில் எனக்கு மரியாதை இல்லை. அதை எப்படி வாங்குவது, சொல்லுங்கள்' என்றான்.

    'அதை வாங்க முடியாது. நீ கொடுத்துப்பார். வாங்க நினைத்தது தானாக வந்து சேரும்' என்றார்.

    நாம் வாழ்கின்ற காலத்தில் நல்லவற்றைச் செய்வோம். நம் சந்ததிக்கு நல்லவற்றை விட்டுச் செல்வோம். போன பின்னும் நம் பெயர் வாழ்ந்திருக்கும்.

    • நான் தான் திவ்யாவை கடத்துன நல்லவன் பேசுறன்.
    • நல்லா தேடுங்க. இன்னும் ஏதாவது தடயம் கிடைக்குதான்னு பாருங்க.

    அங்கு உடைந்து கிடந்த திவ்யாவின் கைகளில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்களையும், அந்த ஒற்றை ஜிமிக்கியையும்!

    கண்கள் பணிக்க அந்த ஜிமிக்கியை பார்த்தான். கைகளில் எடுத்தான். சற்றுமுன் அவளை காரில் ஏற்றும்போது, நடந்த போராட்டத்திற்கு, அந்த ஜிமிக்கியும், உடைந்த வளையல்களும் சாட்சி கூறின. டேவிட் கண்கலங்கி ஜிமிக்கியையே பார்த்து கொண்டு இருந்தான்

    "ஹைய்... நல்லா இருக்கே! எங்க வாங்கின டேவிட்?" கண்கள் விரிய திவ்யா கேட்டாள். "என் டார்லிங்கு பர்த்டே வருது. ஏதாவது வித்தியாசமா கிப்ட் தரணும்ணு யோசிச்சேன். அப்பதான் ஞாபகம் வந்தது. நீ ஜிமிக்க போட்டு நான் பார்த்ததே இல்லேன்னு..."

    'உடனே வாங்கிடியாக்கும்!'

    உடனே வாங்கலே. உனக்கு என்ன மாதிரி ஜிமிக்கி நல்லா இருக்குன்னு 'போட்டோஷாப்'ல டிசைன் பண்ணி பார்த்தேன்... "லேப்டாப்பில் அவன் காண்பித்தது, ஐம்பதுக்கும் மேல்பட்ட அவள் போட்டோக்களில்! அவள் பலவிதமான ஜிமிக்கிகளில் சிரித்தாள்.

    "இதுல ஒண்ணு உனக்கு ரொம்ப அழகா இருந்துச்சு... அதான் வாங்கினேன். லவ் யூ..." அவன் ஜிமிக்கியை காட்டவும், அதை வாங்கியவள், அப்படியே அவனை கட்டிக் கொண்டாள். அந்த ஜிமிக்கியைதான், அவர்களின் தேனிலவிற்கு போட்டு வந்து இருக்கிறாள். ஜிமிக்கியையே பார்த்துக்கொண்டு இருந்த டேவிட் கண்கலங்கி நிற்க, அதற்குள் மத்த டீமுக்கும் தகவல் தெரிந்து எல்லோரும் அங்கே வந்து விட்டனர்.

    "இது அவளோட ஜிமிக்கியாச்சே!''

    திவ்யாவின் அம்மா குரல் கேட்டு, டேவிட் திரும்ப, உடைந்து கிடந்த வளையல்களை, பார்த்த அம்மா அலறினாள்.

    "ஐயோ என் பொண்ணை என்ன பாடு படுத்தி இருக்காங்களோ..." கத்தியவள், இன்ஸ்பெக்டர் பக்கம் திரும்பினாள். "என்ன சார்... இப்படி அலக்கழிக்கிறீங்களே... எம் பொண்ணு கிடைப்பாளா இல்லையா?"

    "அம்மா... அமைதி! அமைதி!"- பெருமாள் அம்மாவை தேற்றினான். வேறு வழியில்லாமல் தலைவர்கிட்ட பேசி, தகவல் சொல்லிட்டேன். இந்நேரம் அரசியல் ரீதியா அவர் ஆக்ஷன் எடுக்க ஆரம்பிச் இருப்பாரும்மா... திவ்யா கிடைச்சுடுவா...?"

    "போடா... நீயும் உன் அரசியலும். எனக்கு எம் பொண்ணு வேனும்டா..." பெற்ற தாயாய் அவள் அழுவதைப் பார்த்த, எல்லோருக்கும் கண்ணீர் வந்தது.

    இன்ஸ்பெக்டர் அழகர், டேவிட்டை பார்க்க, டேவிட் அழுகையும், கோபமுமாய் நின்றான். 'இனி அடுத்து என்ன செய்வது?' என்ற குழப்பரேகை அனைவரின் முகத்தையும் சோகமாக்கியது. அப்போது, பெருமாளின் போன் சூழ்நிலைகளின் நெருக்கத்தை கலைத்தது போல் அடித்தது. பெருமாள் போனை எடுத்து காதில் வைத்தான்.

    இயக்குநர் A. ெவங்கடேஷ்


    நான் தான் திவ்யாவை கடத்துன நல்லவன் பேசுறன்... எதிர்முனை கரகரக்கவும் டென்ஷன் ஆனான் பெருமாள். "டேய்... பொட்டப்பய மாதிரி போன்லயே பேசிக்கிட்டு... நேர்ல வாடா... நான் யார்ணு தெரியும் - பெருமாள் கத்தினான். அவன் சத்தம் காட்டில் எதிரொலித்தது...

    "சே... சே... போன்ல பேசும்போது கத்தாதே... உன் சத்தம் கூடவே, அந்த காட்டோட எதிரொலி எல்லாம் சேர்ந்து எரிச்சலாக்குது...!"

    "என்னடா வேணும் உனக்கு... நேர்ல வாடா..."

    "ப்ச்... என்ன இது... சும்மா நேர்ல வா நேர்ல வான்னு கூப்பிடுறே... அதான் குடும்பமா, போலீசோட கூட்டு சேர்ந்து தேடுனீங்களே... திவ்யாவ காப்பாத்த முடிஞ்சதா... கடத்திட்டே ன்ல.. டண்டணக்கா... ஆங் டணக்குடக்கா..."

    "என்னடா நக்கலா... உன்னை கண்டுபிடிக்காம விடமாட்டேன்டா..."

    "சரி... சரி... உன் வீர வசனமெல்லாம் அப்புறம் கேட்குறேன்... மொதல்ல போனை அந்த டேவிட் கிட்ட குடு..." பெருமாள் போனை நீட்ட, பதற்றமாய் வாங்கிய டேவிட் காதில் வைத்தான். மொத்த பேரும், அவனையே பார்த்தார்கள்.

    "ஹலோ!"

    "டேவிட்டு... குட் பாய்... இந்த மாதிரி போனை எடுத்தா... மொதல்ல 'ஹலோ'-ன்னு "ரீஜெண்டா" சொல்லி பழகணும்னு உன் மச்சானுக்கு கொல்லிக் கொடுப்பா..."

    "டீஜெண்ட்' என்ற வார்த்தையை 'ரீஜெண்ட்' என அவன் உச்சரித்ததை, இதற்கு முன் எங்கேயோ கேட்டு இருக்கேனே" - தனக்குள் யோசித்தான் டேவிட்.

    "ஹலோ... டேவிட்டு!" - எதிர்முனை கூப்பிட்டது.

    "சொல்லு... என்ன?"

    "உன் திவ்யா ஷேப்டியா இருக்கா... ஆமா எதுக்கு குடும்பத்த கூட்டிட்டு திரியுற... லேடிசெல்லாம் அனுப்பிட்டு... நீயும் உன் பிரண்ட்ஸ்... அப்புறம் அந்த வீரன் பெருமாள் இவ்வளவு பேர் தேடுங்களேன்..."

    "நாங்க இத்தனை பேரு தேடுறோம்னு தெரியுதுல்ல... பேசாம திவ்யாவ விட்றனு..." இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, பெருமாள் இன்ஸ்பெக்டர் அழகரை சமிக்ஞையில் அழைத்து போய் 'ஏதோ' சொல்ல அவர் தனது போனில் கண்ட்ரோல் ரூமில் கனெக்ட் ஆனார்.

    ஹலோ... நான் ஒரு நம்பர தரேன்... இந்த நம்பருக்கு ஒரு கால் வந்திருக்கு... அந்த காலை டிரேஸ் பண்ணி அது எந்த இடத்துல இருந்து வருதுன சொல்லுங்க..."

    அவர் சொல்லி கொண்டு இருக்க, இங்கே டேவிட், அந்த நல்லவனிடம் பேசிக் கொண்டு இருந்தான். பேச்சை தொடரும்படி, பெருமாள் சைகையில் சொல்ல, தலையாட்டியபடி டேவிட் தொடர்ந்தான்.

    "பிளீஸ்... திவ்யாவை ஒப்படைச்சுடு... பிளீஸ்..."

    "திவ்யாவை ஒப்படைச்சா மொத்தபேரும் சந்தோஷமா நன்றி சொல்லிட்டு போயிடுவீங்க...

    அதுக்காகவா கடத்துனேன்..."

    "சரி... என்னதான் உன் மனசுல இருக்கு!"

    "சொல்றன்... உன் மனசுல யாரு இருக்கா...?"

    'திவ்யாதான் என் மனசுல இருக்கா..." டேவிட் அழாக்குறையாய் சொன்னான்.

    "ஆங்... திவ்யா உன் மனசுல இருக்கப் போயி அவளை தேடி அலையுற... ரைட்டு... என் மனசுல என்ன இருக்குன்னு கேட்டில்ல... சொல்றன்... இப்ப இல்ல... அப்புறம் சொல்றன்..."

    'டேய்... டேய்... விளையாடுறியா?"

    'யாரு நானா? விளையாடுறது நீங்கடா...! ஏன்டா டேவிட்டு... என்கிட்ட பேசிக்கிட்டே கால்ல டிரேஸ் பண்ண போலீஸ் டிரை பண்ணுதே... நான், என்ன கேனையா...? இனி அந்த சிம்மை யூஸ் பண்ண மாட்டேன்னு அந்த அதி புத்திசாலிங்ககிட்ட சொல்லு..."

    போன் கட் ஆனது.

    'சார்... இனிமே அந்த 'சிம்'மை யூஸ் பண்ண மாட்டேன்னு சொல்றான் சார்...!"- அழகரிடம் சொன்னான் டேவிட்.

    "இனிமே யூஸ் பண்ண மாட்டான், சரி! இதுவரைவுக்கும் பேசினத வச்சு... அவன் எங்க இருந்து பேசினான்னு கண்டுபிடிச்சுடுவோம்... அது போதும் எங்களுக்கு! அந்த இடத்துல இருந்து 'நூல் பிடிச்சு' அந்த 'நல்லவனை' தூக்கலை... நான் போலீசே இல்லை..." - சற்று கோபமாகவே அழகர் சொல்லவும், போன் அடிக்கவும் சரியாய் இருந்தது.

    "ஹலோ... சொல்லுங்க..."

    "சார்... நீங்க சொன்ன நம்பரை டிரேஸ் பண்ணதுலே, ஜஸ்ட், கொஞ்ச நேர முன்னாடி அந்த நம்பர் சுவிட்ச் ஆப்..."

    "எதிர்பார்த்ததுதான். அவன் கடைசியா எங்க இருந்து... பேசினான்..

    "சார்... டவர் நம்பர் வெச்சு டிரேஸ் பண்ணதுலே கல்லல் கிராம பார்டர் சார்..."

    "குட்... அந்த டவர் நம்பர் ஷேர் பண்ணுங்க... ஸ்பாட்டுக்கு போயி நான் விசாரிச்சுகிறேன்...

    போனின் சிவப்பு பட்டனை தட்டி, கட் செய்த அழகரிடம் பெருமாள் கேட்டான்..

    "சார்... உடனே கல்லல் கிராமம் போயி, விசாரிக்கலாம் சார்...!"

    "போலாம்... பட்!" - அழகர் இழுத்தார்.

    "என்ன சார்...?"

    நாங்க போலீஸ் டீம் மட்டும் போறோம். நீங்க மொத்த பேருமா பின்னாடியே வரவேண்டாம். எனக்கு ஏதாவது லீட் கிடைச்சதுனா, தகவல் தரேன். நீங்க எல்லாம் வாங்க... அதுவரைக்கும் இங்க ஸ்டேஷன்லேயே வெயிட் பண்ணுங்க..."

    "சார்... நான் மட்டுமாவது வரேன்னே..." டேவிட் கெஞ்சலாய் கேட்டான்.

    "டேவிட்... இது போலீஸ் புரொசிஜர். சொன்னா புரிஞ்சுக்கோங்க... கான்ஸ்டபிள்ஸ் வாங்க... லெட்ஸ் கோ..."

    பரபரப்பாய் அவர்கள் கிளம்பி செல்ல, டேவிட், பெருமாள், டேவிட் நண்பர்கள், மொத்த குடும்பமும் ஒரு வெறுமையும், சோர்வுமாய் காத்திருக்க ஆரம்பித்தார்கள்.

    திவ்யா மெதுவாய் கண்விழித்தாள். கைகள் கட்டப்பட்டு, வாயில் துணி அடைக்கப்பட்டு, டிக்கியில் போடும்போது, அவர்கள் ஸ்பிரே அடித்ததும், இவள் மயங்கியதும் மங்கலாய் நினைவுக்கு வந்து போனது. இப்போது அவள் ஒரு அறையில், அமர்ந்த நிலையில் சேரோடு கட்டப்பட்டு இருப்பது தெரிந்தது. வாயில் துணிக்கு பதிலாக, பிளாஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த அறையில் இருட்டு கும்மி கிடந்தது. எதுவுமே தெளிவாக தெரியவில்லை. பழைய அறை என்பது மட்டும் வாசனையால் உணரமுடிந்தது. மேலே, இருந்த, அந்த சின்ன துவாரம் வழியே வவ்வால்கள் பறப்பது மட்டும் தெரிந்தது. இப்போது அந்த அறையை யாரோ திறக்கும் ஓசை. 'பளக்' என்ற சத்தத்துடன் பூட்டு திறக்கப்படுவது, தொடர்ந்து 'க்ரக்… க்ரக்...' என 'பாட்லாக்' இழுக்கும் ஓசை வெளிப்பட்டது.

    கதவு திறந்து ஒருவன் உள்ளே வந்தான். கூடவே நான்கு பேர் நுழைந்தார்கள். ரூமின் விளக்குகள் 'ஆன்' செய்யப்படாமல், கதவு திறந்ததால், வந்த வெளிச்சம் மட்டும், அவர்கள் அனைவரும் நிழல் உருவங்களாவே, திவ்யாவால் அனுமானிக்க முடிந்தது.

    அந்த இடத்தில் நின்ற ஜீப்பில் இருந்து இன்ஸ்பெக்டர் இறங்கினார். அது கடைசியாக டேவிட் செல்லுக்கு பேசியவனின் செல்போன் சிக்னல் காட்டிய கல்லல் கிராம பார்டர். இருபக்கமும் சாலை கருநீல பாம்பாக நீண்டது. ஆங்காங்கே கல் மலைகள். 'நிச்சயம் இந்த பகுதியில் குவாரிகள் இருக்கணும்...' அழகரின் போலீஸ் மூளை உரைத்தது.

    'சுத்தி, ஒரு கடை, கண்ணி இல்ல... டோட்டலா 'மூவிங் டிராபிக்' வண்டிய ஓரமா நிப்பாட்டி, பேசிட்டு சிம்கார்டை கட் பண்ணி போட்டுட்டு, திரும்ப வேண்டிய ஸ்டார்ட் பண்ணி போயிருக்கணும்...' தன் செல்போனை பார்த்தபடி அழகர் சொன்னார்.

    "எப்படி சார்... துல்லியமா சொல்றீங்க...?" கூட வந்த எஸ்.ஐ. மாரியப்பன் கேட்டார்.

    "மாரி... இங்க பாருங்க... என் செல்போன் சிக்னல் ஒரு பாயிண்ட்தான் காட்டுது. அதனால இந்த இடத்தை தாண்டினா, சிக்னல் விட்டு விட்டு வரும். அடுத்த டவர்லதான் ஃபுல் சிக்னல் கிடைக்கும்... அதுக்கு முன்னாடி பேசிடணும்னு பேசிட்டு போயிருக்கான்..." சொன்னவர், கண்களை சுருக்கி, தூரமாய் ஏதோ கிடப்பதை பார்த்தவர், "கான்ஸ்டபிள், அந்த பாறைக்கு கீழே, கருங்கல் பக்கம் என்ன கிடக்குது?" ஓடிச்சென்று பார்த்த கான்ஸ்டபிள் மணி அவைகளை பொறுக்கியபடி சத்தமாய் சொன்னார்.

    "சார்... உடைச்சு போட்ட... சிம்கார்டு துண்டுகள் சார்..."

    "கிரேட். அப்போ அவன் இந்த இடத்துல இருந்து, 200 மீட்டருக்குள்ளதான் பேசி இருக்கனும்... நல்லா தேடுங்க. இன்னும் ஏதாவது தடயம் கிடைக்குதான்னு பாருங்க..." அவர்கள் தேட தொடங்கினர்.

    (தொடரும்) E-Mail: director.a.venkatesh@gmail.com / வாட்ஸப்: 7299535353

    • முருகன் சன்னதி மட்டுமா, மலை மேலேயே சிறிது தூரத்தில் முருகனின் அன்னை பத்ரகாளி அம்மன் சன்னதியும் உண்டு.
    • உழவுத்தொழில் செழிக்க வேண்டி, தோரணமலை முருகன் ஆலயத்தில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று வருண பூஜை நிகழ்த்தப்படுகிறது.

    தென்காசி மாவட்டத்தில் உள்ள தோரணமலைக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது? அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. தொலைவிலிருந்து பார்த்தால் இந்த மலை ஒரு யானை படுத்திருப்பதைப் போலவே தோற்றம் காட்டும்.

    யானைக்குத் தமிழில் வாரணம் என்றும் ஒரு பெயர் உண்டு. ஆயிரம் யானைகள் புடைசூழ வலம்வந்த நாரணன் நம்பி பற்றி ஆண்டாள் தனது நாச்சியார் திருமொழியில் சொல்லும்போது `வாரணம் ஆயிரம் சூழ வலம்வந்து` என்கிறாள்.

    ஆக வாரணமலை என இது அழைக்கப்பட்டு, பின் அது மருவித் தோரணமலை ஆகியிருக்கலாம்.

    இந்த மலையின் தென்புறத்தில் ஓடுகிறது ராம நதி. வடபுறத்தில் ஓடுகிறது ஜம்பு நதி. இந்த இரு நதிகளும் தோரணம் கட்டியதைப் போல் மலையைச் சுற்றி ஓடுவதாலும் இந்தப் பெயர் வந்திருக்கலாம்.

    தோரணமலைக்குச் செல்லும் பாதை பிரியும் இடத்தில், அழகிய ஒரு தோரண வாயிலும் அமைக்கப்பட்டுள்ளது. மலை அடிவாரத்திலேயே வல்லப விநாயகர், முருகப் பெருமான், நவக்கிரகங்கள், சப்த கன்னியர் போன்ற தெய்வங்களுக்கான சன்னிதிகள் உள்ளன.

    1193 படிகள் உள்ள மலை இது. மலை உச்சியில் உள்ள குகைக்கோயிலில் முருகன் கிழக்குத் திசை நோக்கி, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறான். சுமார் ஒரு மணிநேரம் படிப்படியாக ஏறி மேலே சென்று குன்றில் வாழும் குமரனை மனமுருகிக் கும்பிட்டால், நாம் நம் வாழ்விலும் படிப்படியாக மேலே வர முருகன் அருள் புரிவான்.

    முருகன் சன்னதி மட்டுமா, மலை மேலேயே சிறிது தூரத்தில் முருகனின் அன்னை பத்ரகாளி அம்மன் சன்னதியும் உண்டு.

    மலைமேல் நடந்து செல்லும்போது ஏற்படும் களைப்புத் தீரச் சற்று இளைப்பாறத் தோன்றகிறதா? அதற்கு வசதியாக ஆங்காங்கே ஆறு மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.

    தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர், அவரது முதன்மைச் சீடரான தேரையர், திருப்புகழ் பாடிய அருணகிரியார், சஷ்டி கவசம் அருளிய பாலன் தேவராயன், தமிழ் மூதாட்டி அவ்வையார், திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரர் என ஆறுபேர் பெயர்களில் அமைந்துள்ள மண்டபங்களில் சற்றே இளைப்பாறி நாம் ஆறுதல் அடையலாம்.

    மலையேறிச் செல்பவர்கள் கந்தக் கடவுளை உளமார தரிசித்து இருட்டுவதற்குள் திரும்பி வர வேண்டும் என்பதால் மாலை மூன்று மணிக்குமேல் மலைமேல் செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது.

    சிவன் பார்வதி திருமணம் கயிலாயத்தில் நடைபெற்றபோது முப்பத்து முக்கோடி தேவர்களும் அங்கு சென்று விட்டார்கள். அதனால் வட பகுதி கனத்தால் தாழ்ந்து தென்பகுதி உயர்ந்தது. அதைச் சமன்செய்ய வேண்டுமே?

    அகத்தியரைத் தென்பகுதியில் உள்ள பொதிகை மலைக்குச் செல்லுமாறு பணித்தார் சிவபெருமான். அதன்படி நடந்து பொதிகை மலைக்கு வந்து உலகைச் சமன் செய்தார் அகத்தியர்.

    வந்த வழியில் அவரைக் கவர்ந்தது, மாலையென இருநதிகள் தன்னைச் சுற்றி ஓட எழிலோவியமாய்க் காட்சி தந்த தோரணமலை. தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர் சித்த மருத்துவரும் கூட அல்லவா? எண்ணற்ற மூலிகைச் செடிகளைக் கொண்ட தோரணமலை அவரைக் கவர்ந்ததில் வியப்பில்லையே? அங்கேயே தங்கிவிட்டார் அகத்தியர்.

    தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் வழிகாட்டுதலின்படி, தோரணமலையில் ஒரு மூலிகைச் சாலை அமைத்து மருத்துவ ஆய்வு மேற்கொண்டார் அகத்தியர். பின்னாளில் அவருடன் வந்து இணைந்துகொண்டார் அகத்தியரின் முதன்மைச் சிடரான தேரையர்.

    தேரையரின் இயற்பெயர் ராமதேவர் என்பது. அகத்தியர், தம் சீடர் ராமதேவரின் உதவியோடு காசிவர்மன் என்ற மன்னனுக்கு முதல் மண்டையோட்டு அறுவைச் சிகிச்சை நிகழ்த்தியது இந்த மலையில்தான் என்று சொல்லப்படுகிறது.

    கொட்டாவி விடும்போதோ அல்லது எவ்விதமோ சிறிய தேரைக்குஞ்சு ஒன்று மன்னன் மூளைக்குச் சென்றுவிட்டது. அது புரளும்போதெல்லாம் தாளாத வலியில் துடித்தான் மன்னன் காசிவர்மன்.

    அவனுக்குத் தோரணமலை மூலிகைகளால் மயக்கம் வரவழைத்து, அவன் கபாலத்தைத் தட்டித் திறந்தார் அகத்தியர். உள்ளே தேரை தென்பட்டது.

    அதை மூளையின் நரம்புகள் அறுபடாமல் எவ்விதம் எடுப்பது என அகத்தியர் திகைத்தபோது, சிறுவன் ராமதேவன் கபாலத்தின் அருகே வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவந்து அதை விரலால் சலசலக்கச் செய்தான். அந்த ஒலிகேட்டுத் தேரை நீர்ப்பாத்திரத்தில் குதித்து வெளியேறியது.

    பின்னர் திறந்த கபாலத்தைத் தோரணமலை மூலிகைகளைக் கொண்டே மறுபடி ஒட்ட வைத்தார் அகத்தியர். தேரையை வெளியேற்ற யுக்தி செய்த ராமதேவன் பின்னர் தேரையர் என அழைக்கப்படலானான்.

    ஆக சித்த மருத்துவத் துறை இன்று மலையென உயர்ந்து நிற்கக் காரணம் அகத்தியர் என்கிற சித்தர். அவர் வாழ்ந்த இடமே தோரணமலை. அகத்தியரின் சீடரான தேரையர் இந்த மலையிலேயே ஜீவ சமாதி அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.

    காலப்போக்கில் இந்த மலை யாராலும் அறியப்படாமலும் வழிபாடில்லாமலும் இருந்தது. 1930-ல் ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

    முத்துமாலைபுரத்தைச் சேர்ந்த பெருமாள் என்ற அன்பரின் கனவில் ஓராறு முகமும் ஈராறு கரமும் கொண்டு கையில் வேலோடு மயில் வாகனத்தில் அருட்பிரகாசம் விளங்கத் தோன்றினான் முருகன். `தோரணமலை உச்சியில் ஒரு சுனையில் கவனிப்பார் இன்றிக் கிடக்கிறேனே? என்னை எடுத்து வழிபடு!` என்று ஆணையிட்டான்.

    திடுக்கிட்டுக் கண்விழித்த பெருமாள், தான் கண்ட கனவுக் காட்சியிலேயே நெடுநேரம் தோய்ந்திருந்தார். அந்தக் கனவில் சொல்லப்பட்ட செய்தி உண்மைதானா என்றறிய அவர் மனத்தில் ஆவல் பிறந்தது. அதிகாலையில் தன் வேலையாட்களோடு மலை உச்சிக்குப் புறப்பட்டார்.

    என்ன ஆச்சரியம்! மலையில் ஒரு சுனை இருந்தது. அது கனவில் கண்ட அதே சுனை! அப்படியானால் கனவு மெய்ப்படும். சுனையில் கட்டாயம் முருக விக்கிரகம் அகப்படும்.

    நம்பிக்கையோடு சுனை நீரில் தேடச் சொன்னார் பெருமாள். வேலையாட்கள் சுனையில் பாய்ந்து நீருக்குள் மூழ்கித் தேடலானார்கள்.

    சரவணப் பொய்கையில் உதித்த முருகன் அன்று அந்தச் சுனையிலும் உதித்தான். கையில் தட்டுப்பட்ட முருகன் கற்சிலையைக் கவனமாக எடுத்துவந்த வேலையாட்கள் அதைச் சுனைக் கரையில் வைத்துப் பரவசத்தோடு கீழே விழுந்து வணங்கினார்கள். தங்கள் எசமான் கண்ட கனவு நனவானது பற்றி அவர்கள் ஆனந்தத்தில் திளைத்தார்கள்.

    சுனைக்கரையில் வெயிலிலும் மழையிலும் முருகன் வாடலாமா? சுற்றுமுற்றும் பார்த்த பெருமாள் அருகே ஒரு குகை தென்பட்டதைக் கண்டார். முருகனை மார்போடு அணைத்து எடுத்துக் கொண்டு குகைக்குள் சென்று கிழக்கு முகமாக முருகன் சிலையைப் பிரதிஷ்டை செய்தார். முருகப் பெருமான் மகிழ்ச்சியோடு அங்கே நிலைகொண்டான்.

    செய்தியறிந்து வியந்து மலையருகே உள்ள முத்துமாலை புரத்தைச் சேர்ந்த மக்களெல்லாம் வந்தார்கள். குன்றுதோறும் குடியிருக்கும் குமரன் தங்கள் ஊரின் அருகேயுள்ள குன்றிலும் குடியிருக்க வந்துவிட்டானே? மக்கள் பக்தியுடன் முருகனை தரிசித்து வழிபடலானார்கள்.

    மெல்ல மெல்ல அக்கம்பக்கம் உள்ள மக்கள் மனத்திலெல்லாம் அந்த முருகன் ஆட்சி செய்யத் தொடங்கினான். ஆலயம் வளரத் தொடங்கியது.

     

    திருப்பூர் கிருஷ்ணன்

    முருகனைக் கண்டெடுத்த பெருமாள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வழிவழியாக தோரணமலை முருகனை வழிபடத் தொடங்கினார்கள். அவர்களே அந்தக் கோவிலை நிர்வாகம் செய்தார்கள்.

    தோரணமலை முருகன் ஆலயத்தின் பரம்பரை அறங்காவலர் அந்தக் கோயிலை நிர்மாணித்த பெருமாளின் வழிவந்த ஆதி நாராயணன் ஆவார். 55 ஆண்டுகள் தோரணமலை முருகனுக்குத் தொண்டு செய்த கே.ஆதிநாராயணன் தோரணமலை அடிவாரத்தில்தான் தங்கியிருந்தார்.

    அவர் தங்கியிருந்த அறை தற்போது மாணவர்கள் பயன்பெறும் வகையில் சுமார் நாலாயிரம் நூல்களைக் கொண்ட நூலகமாக இயங்கி வருகிறது. கே. ஆதிநாராயணன், சந்திரலீலா தம்பதி வாழ்ந்த முத்துமாலைபுரம் கிராமத்து வீடு மாணவ மாணவியர்க்கான மாலை நேரக் கட்டணமில்லாப் படிப்பகமாக இயங்குகிறது.

    ஆலயத்தைத் தற்போது நிர்வகித்து வரும் அன்பர் செண்பகராமன், பெருமாளின் வழித்தோன்றல்தான்.

    சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்றும், உழுவார் உலகத்தார்க்கு ஆணி என்றும் சொல்கிறது வள்ளுவம். `உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்` என்கிறார் மகாகவி பாரதியார்.

    உழவுத்தொழில் செழிக்க வேண்டி, தோரணமலை முருகன் ஆலயத்தில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று வருண பூஜை நிகழ்த்தப்படுகிறது. வருண பூஜையின்போது பற்பல அன்பர்கள் ஆர்வத்தோடு வந்து கலந்து கொள்கிறார்கள்.

    திருவண்ணாமலை கிரிவலம் போல் இங்கும் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் கிரிவலம் நடைபெறுகிறது. கிரிவலத்திலும் ஏராளமான முருக பக்தர்கள் கலந்து கொண்டு பயனடைகிறார்கள்.

    தோரணமலை முருகன் ஆலயத்தில் தைப்பூசத் திருநாள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசத்தன்று முருகப் பெருமான் வள்ளி தெய்வானை திருக்கல்யாண நிகழ்வு நடத்தப்படுகிறது. அதைக் காணக் கண்கோடி வேண்டும்.

    தென்காசி மாவட்டத்தில் அமைந்து உள்ளது தோரணமலை. தென்காசியிலிருந்து கடையம், அம்பாசமுத்திரம், பாபநாசம், நாகர்கோயில் செல்லும் பேருந்துகள் தோரணமலை வழியாகச் செல்கின்றன. (தோரணமலை தொடர்பான விவரங்களுக்கு: 99657 62002, 76959 62002)

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    • சோதனைக்குழாய் குழந்தைக்கு பல படிநிலைகள் உள்ளன.
    • உங்கள் உடல் எடை குறைந்து சீரான பிறகு சிகிச்சையை தொடங்கினால் வெற்றி விகிதம் அதிகமாகும்.

    குழந்தையின்மை சிகிச்சையை பொறுத்தவரையில் பொதுவாக பெண்கள் எல்லோருமே சோதனைக்குழாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்கிறோம். அதே நேரத்தில் சோதனைக்குழாய் குழந்தை என்ற வகையில் செயற்கை கருத்தரிப்பு முறைகளை எப்படி செய்கிறார்கள்? இதற்கான வழிமுறைகள் என்ன? இதற்கு ஒவ்வொரு நிலையாக எப்படி சிகிச்சை அளிக்கிறார்கள் என்பது பற்றி நிறைய பேருக்கு தெரிவதில்லை. இது தொடர்பான சந்தேகங்களும் பலருக்கு இருக்கிறது. எனவே சோதனைக்குழாய் குழந்தைக்கு தம்பதிகள் தயாராவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    ஐ.வி.எப், இக்சி நவீன சிகிச்சை முறைகளில் செயற்கை கருத்தரிப்பு:

    இன்றைக்கு நீங்கள் உங்களுடைய மருத்துவரை அணுகும்போது, உங்களுக்கு ஐ.வி.எப். முறையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும், உங்களின் கருக்குழாயில் பிரச்சினை இருக்கிறது, உங்களின் கணவரிடம் விந்தணு மிகவும் குறைவாக இருக்கிறது என்கிற நிலையில் ஐ.வி.எப்., இக்சி என்ற நவீன சிகிச்சை முறைகளில் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பேறு பெறலாம்.

    அதுதான் உங்களுக்கான குழந்தையின்மை சிகிச்சை என்று முடிவு செய்து விட்டால், என்னென்ன முறைகளில் இதை செய்வார்கள் என சில விளக்கங்களை பார்க்கலாம். ஐ.வி.எப். செயற்கை கருத்தரிப்பு வெற்றிகரமாக அமைவதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது. ஒரு சிகிச்சையின் முழுமையான வெற்றியானது 100க்கு 100 சதவீதம் சாத்தியம் என்பது எப்போதும் ஒரே முறையில் வருவது கிடையாது.

     

    ஆனால் உங்களுடைய வயது, உங்கள் ஆரோக்கியத்துக்கான உடல் ரீதியான விஷயங்கள், உங்களுடைய கருமுட்டைகள், உங்கள் கணவரின் விந்தணுக்கள், உங்களின் கர்ப்பப்பை ஆகியவை சார்ந்த அனைத்து விஷயங்களையும் வைத்து தான் வெற்றி விகிதத்தை கணக்கிடுவார்கள். இந்த வெற்றி விகிதத்தை திட்டவட்டமான வெற்றி விகிதத்துக்கு கொண்டு செல்வது எப்படி என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    செயற்கை கருத்தரிப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:

    சோதனைக்குழாய் குழந்தைக்கு பல படிநிலைகள் உள்ளன. பொதுவாக மருத்துவரிடம் செல்பவர்கள் டாக்டர் எனக்கு ஐ.வி.எப். சிகிச்சை செய்ய வேண்டும். இதற்காக என்னென்ன பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்பார்கள். முதலில் ஐ.வி.எப். சிகிச்சையை தொடங்கும் முன்பு ஒரு சரியான மதிப்பீட்டை கண்டிப்பாக உங்கள் மருத்துவர்கள் உங்களுக்கு செய்திருப்பார்கள். அதில் உங்களின் கர்ப்பப்பை, சினைப்பை, ஹார்மோன்கள், கருமுட்டைகள் ஆகிய எல்லா விஷயங்களையும் பரிசோதனை செய்து அதில் என்னென்ன குறைகள் இருக்கிறதோ அதை சரிசெய்து இருப்பார்கள்.

    அடுத்ததாக பெண்களுக்கு கரு முட்டைகளை எடுத்து கருவாக்கம் செய்வது வரை பல வழிமுறைகள் உள்ளன. ஏ.ஆர்.டி. (உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம்) சட்டம் 2022ன் படி ஐ.வி.எப். செயற்கை கருத்தரிப்பு செய்தால் முக்கியமான பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த விளக்கத்தை கண்டிப்பாக உங்கள் மருத்துவரிடம் கேட்டு பெற வேண்டும். அதற்கு ஒரு சில படிவங்களை மருத்துவ துறையில் இருந்தே கொடுத்திருக்கிறார்கள்.

    அரசின் ஏ.ஆர்.டி. சட்டத்தின் படி இந்த படிவத்தில் செயற்கை கருத்தரிப்பு முறைகள் பற்றிய சில விளக்கங்கள் இருக்கும். அந்த விளக்கங்களை உங்கள் மருத்துவர் உங்களிடம் எடுத்து கூறுவார். மேலும் ஒரு மருத்துவ ஆலோசகரும் கவுன்சிலிங் மூலம் விளக்கம் கொடுப்பார். அதில் என்ன வழிமுறைகள் உள்ளன? இதில் உள்ள சிக்கல்கள் என்ன? சவால்கள் என்ன? ஆகிய எல்லா விஷயங்களையும் அவர்கள் சொல்வார்கள்.

    அந்த அனைத்து விஷயங்களையும் சொல்லி உங்களுக்கு புரிய வைத்த பிறகு, அதை புரிந்து கொண்டேன் என்று நீங்கள் கையெழுத்து போட வேண்டும். நீங்கள் கையெழுத்து போட்ட பிறகு தான் இந்த சிகிச்சை முறைக்கு உங்களை பரிந்துரை செய்வார்கள். இதுதான் ஐ.வி.எப். சிகிச்சையின் முக்கியமான முதல் படிநிலை ஆகும்.

     

    ஆய்வகத்தில் நடைபெறும் கருத்தரிப்பு முறை:

    அடுத்த படிநிலை உங்களுடைய கருமுட்டைகளை எடுப்பது ஆகும். அதாவது கருமுட்டைகளை வளர வைத்து கருமுட்டைகளை எடுப்பார்கள். இன்றைக்கு ஐ.வி.எப். சிகிச்சை செய்கிறோம் என்றால் ஒரு முட்டை, ஒரு விந்து ஆகியவற்றை சேர்த்து செய்வதுதான் ஐ.வி.எப். ஆகும்.

    ஐ.வி.எப். முறையில் ஒரு முட்டையுடன் 10 ஆயிரம் விந்தணுக்களை போட்டு அதில் ஒரு விந்தணு உள்ளே சென்று முட்டையை கருவாக்கி அந்த கருவை 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை இன்குபேட்டரில் வளரவைத்து கர்ப்பப்பையில் வைப்போம். அதாவது கருக்குழாயில் நடக்கும் இந்த விஷயத்தை ஆய்வகத்தில் செய்து கருவை கர்ப்பப்பையில் வைக்கும் முறை தான் இந்த ஐ.வி.எப். செயற்கை கருத்தரித்தல் முறையாகும். நமது உடலில் நடக்கும் கருத்தரிப்பு முறையை இன் வைவோ என்று அழைக்கிறோம். வெளியில் ஆய்வகத்தில் நடக்கும் கருத்தரிப்பு முறை இன் விட்ரோ ஆகும்.

    ஐ.வி.எப். என்பதன் விரிவாக்கம் தான் இன் விட்ரோ பெர்ட்டிலைசேஷன். ஐ.வி.எப் முறையில் கருக்குழாயில் அடைப்பு என்றால் விந்தணுக்கள் நன்றாக இருக்கும், நிறைய விந்தணுக்களை போட்டு ஐ.வி.எப். முறையில் கருத்தரிக்க வைக்கப்படும். இதுவே விந்தணுக்கள் குறைவாக இருக்கும் தம்பதியினருக்கு இன்ட்ரா சைட்டோபி ளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜக்ஷன் (ஐசிஎஸ்ஐ) என்கிற முறை பயன்படுத்தப்படும்.

    இதனுடைய செயல்முறை எல்லாம் ஒன்றுதான். ஆய்வகத்தில் முட்டையை எடுத்து, அந்த முட்டையில் ஒரு விந்தணுவை செலுத்தி அதை 3 முதல் 5 நாட்கள் இன்குபேட்டரில் வளர வைத்து பெண்ணின் கர்ப்பப்பையில் வைப்போம். இது இக்சி முறையாகும். இந்த முறைகள் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்னவென்றால், முட்டைகளை எடுக்க வேண்டும், விந்தணுக்களை தயார்படுத்த வேண்டும், ஆய்வகத்தில் செயல்முறைப்படுத்த வேண்டும், இன்குபேட்டரில் வளரவைக்க வேண்டும், வளர்ந்த கருவை கர்ப்பப்பையில் வைக்க வேண்டும். இதுதான் ஒவ்வொரு படிநிலையான விஷயங்கள் ஆகும்.

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

     

    உடல் நிலையை சீராக வைக்க ஐ.வி.எப். சரிபார்ப்பு பட்டியல்:

    இதில் முதல் படிமுறை என்னவென்றால் உங்களை எல்லா விஷயங்களுக்கும் தயார்படுத்தி விட்டார்கள். அதன் பிறகு அடிப்படையான ஐ.வி.எப். சரிபார்ப்பு பட்டியல் இருக்கிறது. அந்த பட்டியல் படி உங்களுடைய உடல்நிலை சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்வார்கள். கர்ப்பப்பை சீராக இருக்கிறதா என்று ஒரு எண்டோஸ்கோபி செய்திருப்பார்கள், தேவைப்பட்டால் உங்கள் கர்ப்பப்பையில் தொற்றுக்கள் இருக்கிறதா என்றும் பார்த்துக்கொள்வார்கள். பின்னர் உங்கள் கணவரின் விந்தணுக்களில் தொற்றுக்கள் இருக்கிறதா என்பதையும் அறிந்து கொள்வார்கள். உங்கள் உடலில் சர்க்கரை அளவு, தைராய்டு உள்ளிட்ட விஷயங்கள் சீராக இருக்கிறதா என்பதையும் பரிசோதித்து முழுமையாக உங்களை சரி செய்த பிறகு, இந்த சிகிச்சை முறைக்கு உங்களை ஆரம்ப நிலைக்கு கொண்டு வருவார்கள். அதன் பிறகுதான் உங்களுக்கு சிகிச்சை அளிக்க தொடங்குவார்கள். இதில் முக்கியமான ஒன்று... உங்கள் உடல் எடை குறைந்து சீரான பிறகு சிகிச்சையை தொடங்கினால் வெற்றி விகிதம் அதிகமாகும். இந்த வகையில் ஐ.வி.எப். செயற்கை கருத்தரிப்பு முறையின் ஆரம்பமே கரு முட்டைகளின் வளர்ச்சி தான். அதாவது இதை கன்ட்ரோல் ஓவரியன் ஹைப்பர் ஸ்டிமுலேஷன் என்று சொல்வோம்.

    பொதுவாக ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ஒரு முட்டைதான் வரும். இந்த ஒரு முட்டையை வைத்து ஐ.வி.எப். செய்தால் அந்த முட்டை கருவாகலாம் அல்லது ஆகாமலும் போகலாம். ஏனென்றால் 80 சதவீத கருத்தரித்தலை பார்த்தோமென்றால் ஒரு முட்டை இருக்கும் நிலையில் அது கருவாகாவிட்டால் அந்த செயல்முறையே வீணாகி விடும். ஏனென்றால் இதெல்லாம் விலை உயர்ந்த செயல்முறை ஆகும். அந்த வகையில் நிறைய கருமுட்டைகள் உருவானால் நிறைய முட்டைகளோடு விந்துக்களை சேர்த்து எளிதாக கருவாக்கம் செய்ய முடியும்.

    சோதனைக்குழாய் நவீன சிகிச்சை முறையில் கருவாக்கம் செய்யும் ஒவ்வொரு வழிமுறைகளையும் அடுத்த வாரம் விரிவாக பார்ப்போம்.

    • எப்பொழுதும் மூட நம்பிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவளில்லை அவள்.
    • பொதுவாகவே மக்கள் ‘என்னுடையது’ என்று எதைப்பற்றி நினைக்கிறார்களோ அதனுடன் தான் உணர்ச்சி அளவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.

    ஆயிரக்கணக்கான ஆண்டிற்கு முன் வாழ்ந்த ஒருவரின் கல்லறைக்கு இத்துணை மதிப்புடனும், மரியாதையுடனும் தெய்வமாக வழிபடுகிறார்கள் என்றால் அப்படியென்னதான் நடந்திருக்கும் என்ற ஆவலுடன் அனைவரும் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருக்க ஆய்வாளரும், வழிகாட்டியுமான மூன் யாங்க் தன்னை அறிமுகம் செய்துகொண்டு அதற்கான விளக்கத்தை அளித்தபோது ஒரு சிலரின் முகத்தில், கிண்டலான ஒரு நமட்டுச் சிரிப்புடன் ஏதோ கதை விடுகிறார்கள் போல என்பதற்கான பிரதிபலிப்பும் இருந்தது. ஆனாலும் யாங்க் ஒரு ஆய்வாளராகவும் இருந்ததால், அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் நம்பிக்கையுடன், கடமையே கண்ணாக உரையாடிக் கொண்டிருந்தார். சாலினியும் ஒரு இயல்பான மனநிலையுடன்தான் அதனைக் கேட்க ஆரம்பித்திருந்தாள். ஆனாலும் அவளுடைய ஆழ்மனதில் இனம் புரியாத ஒரு பரபரப்பும் இருக்கத்தான் செய்தது.

    கி.மு.48-ம் ஆண்டில்தான் இந்த வரலாற்றுத் தொன்மம் ஆரம்பமாகிறது. ஆனால் அதற்கு முன்பாக கொரியாவின் தென்பகுதியிலிருந்த கிம்கே எனும் பகுதி ஒரு நாடாகவோ அல்லது பேரரசாகவோ உருவாகாமல் ஒன்பது தலைவர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது. வாழ்வியல் மரபில் கொரியா என்ற நாடு வெளியுலகுக்குத் தெரியாத நாடாகவே இருந்தது. அந்த காலகட்டத்தில்தான் இளவரசி ஒருவர் வெகு தொலைவு கடல் பயணம் செய்து கொரியாவில் பூசன் என்ற பகுதியில் கரையிறங்கி கயாவின் அரசனை மணந்து கொரிய அரசியாக அரியணை ஏறுகிறார். அந்த நாட்டை மிகவும் நேசித்தவர், 157 ஆண்டுகள் நல்லாட்சி புரிந்து நாட்டை மிகவும் செல்வச் செழிப்புடன் மேன்மையடையச் செய்ததாகக் கூறுகிறார். தாம் வாழச் சென்ற அந்நாட்டை தொழில் வளர்ச்சியிலும், சிறந்த கவின்கலை மரபு வளர்ச்சியிலும் செழித்த நகர்ப்புற நாடாக மாற்றியதால் அந்த அரசியை தங்கள் நாடு போற்றி வணங்குகிறது என்ற வரலாற்றுச் செய்தியை கர்மச் சிரத்தையுடன் சொல்லிக் கொண்டிருந்தார் யாங்க்.

    எல்லோரும் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருக்க, ஆந்திர மாநிலத்திலிருந்து வந்திருந்த ஒரு பெண் மட்டும், "இதற்கெல்லாம் என்ன ஆதாரம் இருக்கிறது. உண்மையில் நம்பக்கூடிய செய்தியாக இல்லையே? நீங்கள் ஒரு ஆய்வாளராக இருப்பதனால் ஆதாரமில்லாமல் இவ்வளவு உறுதியாகக் கூறமாட்டீர்களே என்றுதான் கேட்கிறேன். தவறாக எண்ணாதீர்கள்" என்றார்.

    மெல்லிய புன்னகையை உதிர்த்த யாங்க், "உண்மைதான். என் நண்பர் சொன்ன அந்த சுவையான நிகழ்வை நான் கேட்டிராமல் இருந்திருந்தால், மேற்கொண்டு இதில் ஆழ்ந்து நோக்காமல், ஒருவேளை நானும் உங்களைப் போலத்தான் ஐயப்பட்டிருப்பேன்" என்றார்.

    "ஓ, அப்படியா. முதலில் அதைச் சொல்லுங்கள், கேட்போம்" என்றாள் அந்த ஆந்திரப் பெண்மணி.

    சில ஆண்டுகளுக்கு முன்பு ஜங்க் நாம் கிம் என்ற நண்பர் கனடா நாட்டில் டொராண்டோ (Toronto) எனும் நகரில் தொடருந்தில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது திடீரென "அம்மா" என்ற குரல் கேட்டு சட்டெனத் திரும்பி தேட ஆரம்பிக்கிறார். அந்தக் கூட்டத்தில் ஒரு கொரிய முகம் கிடைக்கலாம் என்று ஆர்வமாகத் தேடுகிறார். ஆனால் அவர் தேடிய அந்த கொரிய முகம் கிடைக்கவே இல்லை. ஏதோ நினைவின் பிடியில் தனக்கு அப்படியொரு குரல் கேட்டிருக்கலாம் என்று நினைத்து அமைதி ஆனார். ஆனால் சற்று நேரத்தில் மீண்டும் அம்மா என்ற அதே குரல். நிச்சயம் இது நினைவு அல்ல என்று தெளிவாகத் தெரிய, குரல் வந்த திசையில் குழந்தை ஒன்று அழகாகத் தன் அம்மாவை அழைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் கொரியர்கள் அல்லர் என்பது சர்வ நிச்சயம். ஆர்வம் மேலிட அவர்களை நெருங்கி பேச்சு கொடுக்கிறார். அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்துகொள்கிறார். அவர்கள் பேசும் மொழியை தன்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் அவர்களுக்குள் நடந்த உரையாடலை கவனித்துக்கொண்டு வந்தபோது தங்கள் கொரிய மொழிக்கு இணையான அவர்களுடைய பேச்சு வழக்கு மொழியும் உள்ளதை உணர முடிந்தது. மேலும் சரியாகப் புரிந்துகொள்ள நேரே ஒரு புத்தகக் கடைக்குச் சென்று, அங்கு தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்- தமிழ் என இரு அகராதிகளையும் வாங்குகிறார். சர்வ சாதாரணமாக 500 தமிழ் வார்த்தைகள் தங்கள் கொரிய மொழியைப் போன்றே அதே உச்சரிப்பும், அதே அர்த்தமும் கொண்டிருப்பதை அறிகிறார். அதைத் தொடர்ந்து கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் தமிழ் மொழிக்கும், கொரிய மொழிக்கும் இடையிலான ஒற்றுமைகள் என்ற தன் ஆய்வு ஏட்டையும் சமர்ப்பிக்கிறார்", என்று கூறி சற்று தயங்கி நிறுத்தியவர்,

    "இதைவிட முக்கியமான ஒரு செய்தியையும் கூறுகிறேன் கேளுங்கள்" என்றவர்,

    "கயா அரசியின் நினைவிடத்தில் இருந்து அவருடைய மரபணு மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது", என்ற ஆச்சரியமான தகவலையும் எடுத்துரைத்தார்.

    அதன்படி 2000 ஆண்டுகளுக்கு முன்பு கொரியர்கள் ஒரு இந்திய மூதாதையரைக் கொண்டிருக்க முடியும் என்று கூறியுள்ளதாகவும், தென் கொரிய முன்னணி பத்திரிகையான ஜோங் ஆங் டெய்லி, பண்டைய அரச வம்சமான தெற்கு ஜியோங்சாங் மாகாணத்தில் கிம்ஹேயின் கல்லறையின் ஒரு தொல்பொருள் ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள், கொரியர்கள் இந்திய, மலேசிய அல்லது தாய் போன்ற தென்னக அல்லது தென்கிழக்கு ஆசிய இனக்குழுக்களின் டி.என்.ஏ-வை கொண்டிருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்திருப்பதாக வெளியிட்டுள்ளனர். சியோல் தேசிய பல்கலைக்கழகத்தின் முனைவர் சீஓ ஜியோங்-சூன் மற்றும் ஹாலிம் பல்கலைக்கழகத்தின் கிம் ஜோங்-இல் ஆகியோர் ஆராய்ச்சி மேற்கொண்டது பற்றியும் கூறினார்.

    "அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்த கொரிய முன்னாள் ராணுவ வீரர் தன்னுடைய முன்னோர் குறித்து தொகுத்து வைத்திருந்த வரலாற்றின் 25 தொகுதியைக் கண்டுபிடித்துள்ளார். இதில் ஆச்சரியமான தகவல், கிம் என்ற அவர்தம் வம்சாவளியின் தொடக்கப் புள்ளியாக அவர் அறிந்தது, இந்தியாவில் இருந்து வந்தவர் என்று குறிப்பிடப்படும் இளவரசிதான்", என்றும் கூறியபோது அந்த ஆந்திரப் பெண்மணி உண்மையிலேயே அரண்டுப் போனவள், மெல்ல பின்வாங்கி, மேலும் அவர் கூறப்போவதை ஆர்வமுடன் கேட்கத் தயாரானாள். அரசியின் கல்லறையில் இருந்த கல்லடுக்கில் உள்ள கற்கள் தென் இந்தியாவைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்ற ஆய்வாளர்களின் கருத்தையும் எடுத்துரைத்தார்.

    மேலும், "இல்யோன் என்ற புத்தத் துறவியால் கி.பி.1206-1208-ம் ஆண்டு காலகட்டத்தில் எழுதப்பட்ட கொரியாவின் முப்பேரரசுகளின் வரலாற்றுத் தொகுப்பான 'சாம்குக் யுசா' எனும் கொரிய வரலாற்று தொன்மத்தின்படி, சுரோ என்ற மன்னன் சீன நாட்டின் இறுதி தீபகற்பப் பகுதியான கொரிய நாட்டின் அரசன். திருமண வயதில் இருக்கும் மன்னன் தன் கனவில் கண்ட இளவரசியை மணமுடிக்கக் காத்திருக்கிறான். அதே சமயம் கயா நாட்டின் மேற்கு திசையில் தொலைதூரத்தில் இருந்த ஒரு நாட்டின் இளவரசியின் பெற்றோரின் கனவிலும் சுரோ என்ற அந்த மன்னன் வருகிறான். தெய்வ சங்கல்பமாக அதைக் கருதியவர்கள் மணமுடிக்கும்பொருட்டு தங்கள் மகளை கடல் கடந்து அனுப்ப முடிவெடுக்கின்றனர்", என்று சொல்லி முடிக்கிறார் யாங்க்.

    அனைத்தையும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த சாலினி, 2000 ஆண்டுகளாக ஒரு அரசியை, அதுவும் அயலகத்தில் இருந்து வந்து தமது நாட்டிற்கு அரசியான ஒரு பெண்ணை இன்றளவிலும் நினைவில் வைத்திருப்பதோடு அல்லாமல் அப்பெண்ணின் கல்லறைக்கு இத்தனை மதிப்பும், மரியாதையும் கொடுத்து அப்பெண்ணை ஒரு தெய்வ நிலையில் வைத்திருக்கிறார்கள் என்றால் அவள் எத்தகையவளாக இருக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்க யாங்க்கிடம் பல தகவல்களைக் கேட்டு அறிந்து கொள்கிறாள். அங்கு பதிவு செய்யப்பட்டிருந்த தகவல்கள், அப்பெண் கொண்டு வந்ததாகக் கூறப்பட்டு சேமிக்கப்பட்டிருந்த பொருட்கள் என அனைத்தையும் மிக நுணுக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அவள் கண்களில் தெறித்த மின்னல் கீற்றுகள் அனைவரையும் ஆச்சரியமடையச் செய்தது. அவள் நடையிலும், பேச்சிலும் ஒரு வித்தியாசமான மிடுக்கு வெளிப்பட்டது. ஏதோவொரு அதிசயம் நிகழப் போகிறது என்பதற்கான ஒரு சில அறிகுறிகளும் அனைவரையும் ஒரு எதிர்பார்ப்பின் உச்சத்திற்குக் கொண்டு சென்றிருந்தது.

    ஏனோ அந்த இடத்திற்குள் நுழைந்த நொடியிலிருந்து சாலினியின் மனதில் இனம் புரியாத ஒரு பரபரப்பு ஏற்பட்டதன் காரணம் அவளுக்கு விளங்கவில்லை. எப்பொழுதும் மூட நம்பிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவளில்லை அவள். ஆனாலும் தன் உடலினுள் ஏதோ ஒரு பெரிய சுமை ஏறிக்கொண்டது போன்ற உணர்வு புதிதாக இருந்தது.

     

    பவளசங்கரி, 63743 81820

    "என்ன இது, நான் நானாக இல்லாதது போல் தோன்றுகிறதே? ஏதோ குழப்பமாக இருக்கிறதே. இந்த இடத்தின் அதிர்வலைகள் என்னை எங்கோ இழுத்துச் செல்வது போல் உணர்த்துகிறதே? இது நல்லதற்கா, இந்த இடத்தை விட்டு உடனே நகர்ந்து விட வேண்டும் என்று தோன்றினாலும், ஏதோ ஒரு சக்தி என்னை இழுத்துப் பிடிக்கிறதே" என்று குழம்பினாள்.

    ஒரு முறை சக தோழி ஒருவர் தனது உறவினரின் பெண் குழந்தைக்கு முற்பிறவி நினைவு வந்துவிட்டதாகவும், 7 வயது குழந்தையான அவள் தனது கணவனும், குழந்தையும் இன்ன ஊரில் இருக்கிறார்கள், தன்னை சொத்திற்காக உறவினர் ஒருவரே கொன்றுவிட்டார் என்றும் நான் இப்போதே சென்று என் கணவனையும், குழந்தையையும் பார்த்தே தீர வேண்டும் என்று அடம் பிடித்ததாகவும், வேறு வழியின்றி அவள் பெற்றோர் அந்தக் குழந்தை சொன்ன இடத்திற்கு அவளை கூட்டிச் சென்று காட்டியிருக்கிறார்கள். மிக ஆச்சரியமாக அந்த பெண் குழந்தை சொன்ன அனைத்துத் தகவல்களும் உண்மை என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்டு வந்ததாகவும் சொன்னதைக் கேட்டு தனக்கு சிரிப்பு வந்ததும், தோழியிடம் நக்கலாக பதில் சொன்னதும் ஏனோ சம்பந்தமில்லாமல் அப்போது நினைவுக்கு வந்தது.

    அப்படியானால் அந்தக் குழந்தையை அவள் முன்னாள் கணவனிடமே விட்டுவிட்டு வந்து விட்டார்களா உங்கள் உறவினர் என்று கேட்டதும்,

    பொதுவாகவே மக்கள் 'என்னுடையது' என்று எதைப்பற்றி நினைக்கிறார்களோ அதனுடன் தான் உணர்ச்சி அளவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். ஏன் படித்தவர்களெல்லாம் கூட இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்று சொல்லி கடுப்பேற்றிக் கொண்டிருந்ததும் நினைவிற்கு வந்தது. ஆனால் இப்படியொரு சம்பவம் தனக்கே நேரப்போகிறது என்பதை அறிந்திருந்தால் சாலினி நிச்சயம் அன்று இப்படியெல்லாம் பேசியிருந்திருக்கவே மாட்டாள் அல்லவா!

    (தொடரும்)

    • வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் மிகுதியாக இருக்கும்.
    • அனைத்து செயல்களையும் அறிந்து கொள்ளும் உள்ளுணர்வு நிறைந்தவர்கள்.

    மூலம் நட்சத்திரம் கால புருஷ 9-ம் ராசியான தனுசு வீட்டில் அமைந்துள்ளது. ராசி சக்கரத்தின் 19வது நட்சத்திரமாகும். இந்த ராசியின் அதிபதி குரு. இது ஞானத்தை வழங்கும் கேதுவின் நட்சத்திரமாகும். இதன் வடிவம் அங்குசம், சிங்கத்தின் வால், யானையின் துதிக்கை போல் இருக்கும். இந்த நட்சத்திரம் குருத்து போல் இருப்பதால் இதன் தமிழ் பெயர் குருது. இதன் இருப்பிடம் குதிரை லாயம். அதிதேவதை அசுர தேவதைகள். இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர்.

    மூலம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

    எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை, ஆர்வம், அறிவு தெளிவு உண்டு. அடக்கம், அன்பு செலுத்துதல், புகழ் விரும்பாமை, பேராசையற்ற மனப்போக்கு ஆகிய குணங்கள் காணப்படும். மிகவும் சாமானிய சூழ்நிலையில் இருந்து ஏராளமான இடையூறுகளை சமாளித்து நிலையாக முன்னேறுவார்கள். உழைக்கலாம் ஆனால் உழைப்பே வாழ்க்கையாக இருக்க கூடாது என்ற எண்ணம் உடையவர்கள். இரவில் வேலை செய்து பகலில் உறங்குவார்கள்.

    கிடைத்த வேலையைச் செய்து இருப்பதை உண்டு படுத்த இடத்தில் நிம்மதியாக தூங்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதே நேரத்தில் நேர்மை, நியாயம் நிறைந்தவர்கள்.

    தான் வாழ பிறரை கெடுக்க விரும்பாதவர்கள். அமானுஷ்ய சக்தி நிறைந்தவர்கள். உள்ளுணர்வால் அனைவரின் எதிர்கால பலனையும் கூறுவார்கள். இவரைச் சூழ்ந்து 10 பேர் இருப்பார்கள். அரசியலிலும் இவர்களுக்கு அதிர்ஷ்டம், பொது ஜன ஆதரவு உண்டு. அதில் நன்கு பிரகாசிப்பார்கள். நல்ல அரசு உத்தியோகங்கள் கிடைக்கும். இவர்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் முன்னேற்றம் அடைவார்கள். கேது வலை கிரகம் என்பதால் எளிதில் இவர்கள் காதல் வலையில் சிக்க கூடியவர்கள்.

    வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் மிகுதியாக இருக்கும். இவர்களுக்கு குடும்ப வாழ்கையில் நிம்மதி இருக்காது . மேலும் குடும்ப வாழ்க்கை சுகம் தராது. ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் " என்றும் மூலம் மாமனாருக்கு ஆகாது என்றும் மூல நட்சத்திரப் பெண்ணை மாமனார் இல்லாத வீட்டில் தான் மணமுடிக்க வேண்டும் என்றும் மூலம் நட்சத்திரம் பற்றிய பல விமர்சனங்கள் உள்ளது. அது மட்டுமா? இது போன்ற நட்சத்திர தோஷம் ஆண்களுக்கு இல்லை என்ற போதிலும் சமீப காலமாக மூல நட்சத்திர ஆண்களும் பாதிக்கப்படவே செய்கிறார்கள். பல பெற்றோர்கள் இதை விடாப்பிடியாக பிடித்துத் கொண்டு தமது பிள்ளைகளின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்குகிறார்கள். இந்த பழமொழியை ஆதாரமாக வைத்து பலர் மூல நட்சத்திரப் பெண்களை திருமணம் செய்ய பயப்படுகிறார்கள். மூலத்துப் பெண்ணால் மாமனாருக்கு கண்டம் ஏற்படும் என்ற நம்பிக்கை சமூகத்தில் ஆழமாக பதிந்துள்ளது.

    உண்மையில் மூல நட்சத்திரம் தோஷமா? இல்லையா? மூலத்துப் பெண் மாமனாருக்கு ஆகாது என்றும் இல்லை ஒன்றும் செய்யாது என்றும் பொதுவாகச் சொல்வதை விடுத்து இதில் உள்ள கருத்தை மற்றொரு கட்டுரையில் ஆய்வு செய்யலாம்.

    கல்வி

    மிக இளம் வயதிலேயே சுக்ர தசா வந்து விடுவதால் பலருக்கு கல்வியில் தடை அல்லது கல்வியில் நாட்டம் குறைவாக இருக்கும்.

    சட்டம், நிதித்துறை, நீதித் துறை, கல்வித்துறை, ஆசிரியர், பொருளாதாரம், அறிவியல் சார்ந்த அனைத்து துறை படிப்புகளையும் படிக்கலாம்.

    தொழில்

    சொந்தத் தொழில் செய்யவே இவர்கள் விரும்புவார்கள். ஆனால் மற்றவர்களிடம் வேலை செய்யும் அமைப்பே உண்டாகும். முதலாளிகளுக்கு பல ஆலோசனைகளையும், பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளையும் கூறுவார்கள். அதனால் முதலாளிகளால் மிக விரும்பப்படுவார்கள். தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் இவர்கள் அடிக்கடி வேலையை மாற்றும் இயல்பினர். சம்பள உயர்வே இவர்களது நோக்கம். இவர்கள் இருக்கும் இடத்திற்குக் கூட்டம் அதிகம் வரும். வாக்கு சொல்லுதல், குறி சொல்லுதல், மத போதனை செய்தல், சமூக சீர்திருத்தம் செய்தல் போன்ற பணியில் தமக்கென்று தனி முத்திரை பதிக்கிறார்கள். அறிவைத் தூண்டும் தொழில்களான ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், தத்துவப் பேராசிரியர்கள், மேலாளர்கள், மத போதகர், அர்ச்சகர், தத்துவ மேதைகள், மந்திரி, கவுரவமான தொழில், நீதிபதிகள், அரசு துறை, நீதித்துறை, வங்கி அதிகாரிகள், ஆலோசகர் பதவி, எழுத்துத் துறை ஜோதிடம், பேச்சுத் தொழில், தரகர்களாகவும், கமிஷன் முகவர்களாகவும், டிராவல்ஸ், ஏஜெண்டுகள், நுண்ணிய சாஸ்திர ஆராய்ச்சி யாளர்கள், தர்ம ஸ்தாபனங்கள், கோவில் நிர்வாகம், ஊர்த்தலைமை, போன்றவற்றில் கவுரவப் பதவி வகிப்பார்கள். அரசியல் ஈடுபாடும் உண்டு.

    தனம், வாக்கு,குடும்ப ஸ்தானம்

    ஆரம்ப கால வாழ்க்கை வறுமையாகவும் 50 வயதுக்கு மேல் திடீர் தனலாபமும் அடைவார்கள். திருமண வாழ்க்கையில் உண்மையான அன்பை அனுபவிக்க முடியாமல் ஏமாற்றமடைகிறார்கள்.

    திருமணத்திற்கு வரன் தேடியே திருமணத்தில் வெறுப்பை ஏற்படுத்தும். திருமணம் நடந்த பிறகு குடும்ப பிரச்சனைக்காக பஞ்சாயத்திற்கு நடந்தே வாழ்க்கை முடிந்து விடும்.

    இந்த அமைப்பு பல கணவன், மனைவியை விரோதியாகவே வாழ வைக்கிறது. பலர் சுக்கிரனின் பலவீனத்தால் வாழ்க்கையில் பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். சிலருக்கு எத்தனை திருமணம் செய்தாலும் திருமணத்தில் நிம்மதி இல்லாத நிலை. சிலருக்கு முதல் திருமணம் மாறுபட்டதாக அமைந்தாலும், இரண்டாவது திருமணம் நல்ல நிம்மதியைத் தருகிறது.

    தசா பலன்கள்

    கேது தசா: ஜென்ம தாரையின் தசாவாகும். இதன் தசாவருடம் 7 ஆண்டுகள். தாய், தந்தை மிகவும் அடிமைத்தனமான வேலை செய்யும் நிலை, குறைந்த ஊதியத்தை பெறுதல் என்ற நிலை ஏற்படும்.

    ஐ.ஆனந்தி

    அல்லது தொழில் நடத்தும் போது தொழிலில் எட்ட முடியாத பிரமாண்ட வளர்ச்சியை கொடுத்து மீளமுடியாத திடீர் வீழ்ச்சி, இழப்பையும் தரும்.

    இவர்கள் சரியான பெயரை அமைத்து கொள்ள வேண்டும்.

    சுக்ரதசா: இது தன தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 20 ஆண்டுகள். இளம் பருவத்தில் நன்றாக படிக்காமல் தவறான நட்பால் வாழ்க்கையை இழக்கிறார்கள். திருமணம் ஆன சிலர் ஏன் திருமணம் நடந்தது என்று வருந்தும் வகையில் தான் வாழ்க்கை இருக்கும். கருத்து வேறுபாடு மற்றும் கடும் பகையாகி நீதி மன்ற படி ஏறியவர்களே அதிகம். வெகு சிலர் குடும்பம், குழந்தைகள், மானம், மரியாதைக்கு அஞ்சி அனுசரித்து வாழ்கிறார்கள்.

    வெகு சில தம்பதிகள் விதிவிலக்காக கருத்து வேறுபாடு இன்றி தொழில் நிமித்தம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் வாழ்நாளின் பெரும் பகுதியில் பிரிந்தே வாழ்கிறார்கள். அதனால் தான் ஆன்மீக எண்ணத்தை கொடுக்கும் கேதுதிசை முன்னால் வந்து, ஆடம்பரத்தை கொடுக்கும் சுக்கிரதசை பின்னால் வருகிறது.

    காரணம் இல்லாமல் காரியம் இல்லை வாழ்வு நிலையற்றது. ஆனால் வாழும் வாழ்க்கை அர்த்தம் உள்ளது என்ற வாழ்வியல் தத்துவத்தை உணர்ந்தவர்கள் வாழ்க்கையில் உயர்வானதை அடைகிறார்கள்.

    சூரிய தசா: இது மூன்றாவதாக வரக்கூடிய விபத்து தாரையின் தசாவாகும். இதன் தசாவருடம் 6 ஆண்டுகள்.

    இந்த காலகட்டத்தில் சிலர் விவாகரத்து வழக்கை சந்திப்பார்கள் ஞானத்தால் ஒருவர் ஈர்க்கப்பட்டால் மனம் சலனப்படாது. சிற்றின்பம், பேரின்பத்தை முழுமையாக உணர வைப்பது சூரிய தசா. சிலரின் வாழ்க்கை கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது. வெகு சிலருக்கு காலதாமதமாக பலன் கிடைக்கிறது. மனப் பக்குவம் கிடைத்த பிறகு ஆடம்பரமான வாழ்க்கை கிடைத்தாலும், அமைதியாக மனம் அதைக் கடந்து செல்லும்.

    சந்திரா தசா: இது நான்காவதாக வரக்கூடிய சாதக தாரையின் தசாவாகும். மத்திம வயதில் பெயரும் புகழும் அமைதியும் கிடைக்கும்.

    கடின உழைப்பு, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நீதி, நேர்மை, நியாயம், தர்மம் போன்ற வற்றை கற்றுக் கொள்வார்கள். இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டுத்தரும் தசாவாகும். வீடு, வாகன யோகம் உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் திடீர் லாபம் ஏற்படும். வாழ்நாள் முழுவதற்கும் தேவையானவற்றை சம்பாதிக்கும் வாய்ப்புகள் உருவாகும். உபதொழில் செய்து வருமானத்தை பெருக்குவதில் நாட்டமாக இருப்பார்கள்.

    ஐம்புலன்களுக்கும் எட்டாத அரிய செயல்களையும் இயற்கையிலேயே உள்ளுணர்வாக அறிவார்கள்.

    செவ்வாய் தசா: இது ஐந்தாவதாக வரக்கூடிய பிரத்யக்தாரையின் தசாவாகும். இதன் தசா ஆண்டு 7 வருடங்களாகும். அனைத்து செயல்களையும் அறிந்து கொள்ளும் உள்ளுணர்வு நிறைந்தவர்கள். கண் பாதிப்பு, இருதயக் கோளாறு , எலும்பு தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். இவர்களுக்கு அரசாங்கத்தாலும் தந்தையாலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

    ராகு தசா: இது ஆறாவதாக வரக்கூடிய சாதக தாரையின் தசாவாகும். இதன் தசாவருடம் 18 ஆண்டுகள். உயர்ந்த லட்சியம், மேன்மையான சுபாவம், ஆன்மீக எண்ணங்கள் போன்ற உயர்ந்த குறிக்கோளின் அடிப்படையில் செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள். வயோதிகம் காரணமாக அமைதி, ஆன்மீகம் நோக்கி காலத்தை கடத்துவார்கள்.

    குரு தசா: இது ஏழாவதாக வரக் கூடிய வகை தாரையின் தசாவாகும். வயோதிகம் மற்றும் உடல் நலக் குறைவால் அமைதியின்மை, கோபம், பிடிவாதம், சோகம், இயலாமை, உணர்ச்சி வசப்படுதல் போன்ற மனநிலை பாதிப்பு ஏற்படும். ஒரு தெளிவான சிந்தனை, முடிவு எடுக்க முடியாது.

    மூலம் நட்சத்திரத்தின் சிறப்புகள்

    இந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது என்பதால் தியானம் செய்ய, தீட்சை பெற மந்திர உபதேசம் பெற உகுந்ததாகும். மூல நட்சத்திரம் காலபுருஷ லக்னமான மேஷத்திற்கு ஒன்பதாம் வீடான தனுசில் அமைந்துள்ளதால் ஆலய திருப்பணி குரு உபதேசம் செய்ய, கீர்த்த யாத்திரை, ஆலயப் பணி துவங்க, குரு உபதேசம் பெற உகந்ததாகும். கேது கயிறைக் குறிக்கும் என்பதால் தாலிக் கயிறு வாங்கவும் விவாகத்திற்கும் உகந்த நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தின் வடிவம் துதிக்கை போன்று மிருகங்களுடைய அமைப்பில் உள்ளதால் ஆடு மாடுகள் வாங்கலாம்.

    நட்சத்திர பட்சி: செம்பருந்து

    யோகம்: பரிகம்

    நவரத்தினம்: வைடூரியம்

    உடல் உறுப்பு: இடது விலாப்புறம்

    திசை: வட மேற்கு

    பஞ்சபூதம்: காற்று

    அதிதேவதை: அசுர தேவதைகள்

    நட்சத்திர மிருகம்: பெண் நாய்

    நட்சத்திர வடிவம்: யானையின் துதிக்கை

    சம்பத்து தாரை: பூராடம், பரணி, பூரம்

    சேம தாரை: திருவோணம், ரோகிணி, அஸ்தம்

    சாதக தாரை: சதயம், திருவாதிரை, சுவாதி

    பரம மிக்ர தாரை: ரேவதி, ஆயில்யம், .கேட்டை

    பரிகாரம்

    இந்த நட்சத்திரம் நாளில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ள அகத்தியர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் சகல பாவங்களும் தடைகளும் நீங்கும்.

    மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

    தனது சாதக தாரையான சதயம் நட்சத்திர நாளில் தினமும் ஸ்ரீ ராம ஜெயம் எழுத தீவினைகள் நெருங்காது. தினமும் ஸ்ரீ ராமரை வழிபடுவதும், விலங்குகளுக்கு உணவிடுவதாலும் அதீத நன்மைகளை பெறமுடியும்.

    செல்: 98652 20406

    • சங்க காலத்தில் ஆற்றுப்படை என்பது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வழக்கத்தில் இருந்தது.
    • முருகனின் வேல் சிறை கதவை உடைத்து ஆயிரம் பேரையும் மீட்டது.

    சங்ககால புலவர்களில் நக்கீரர் குறிப்பிடத்தக்கவர். தமிழ் வளர்த்த மதுரையில் தோன்றிய முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் மூன்றும் மிக மிக முக்கியமானது. இதில் கடை தமிழ் சங்கத்தில் 49 புலவர்கள் இருந்தனர்.

    அந்த 49 புலவர்களில் தலைவராக இருந்தவர் நக்கீரர். இவர் சிவனை தவிர வேறு யாரையும் வணங்காதவர். ஒரு சமயம் தருமி ஏழை புலவனுக்காக சிவபெருமானே இவருடன் நேரில் தோன்றி வாதாடும் அளவுக்கும் சிறப்பை பெற்றிருந்தார்.

    சிவபெருமான் எழுதி கொடுத்த பாடலை குற்றம் என்று சொன்ன போது சிவபெருமான் தனது நெற்றி கண்ணை திறந்து காட்டி மிரட்டினார். அப்போதும், "நெற்றிக்கண் காட்டினாலும் குற்றம் குற்றமே" என்று வாதாடி சிவபெருமானின் அருளாசி பெற்றவர்.

    புலமை மிகுந்து இருந்தாலும் சிவனும், முருகனும் ஒன்றே என்பதை இவர் ஏற்க மறுத்தார். சிவனை தவிர வேறு யாரையும் பாடவும் மறுத்து வந்தார். ஆனால் தமிழ்க் கடவுள் முருகன் அவரை விடவில்லை. நக்கீரரின் தமிழ் தன்னையும் அலங்கரிக்க வேண்டும் என்று முருகப்பெருமான் விரும்பினார்.

    இதனால் பல்வேறு திருவிளையாடல்கள் நடத்தி நக்கீரரை தனது பக்தனாகவே மாற்றினார். முருகன் மேல் கொண்ட பக்தி காரணமாக "திருமுருகாற்றுப்படை" எனும் அற்புதமான நூலை நக்கீரர் பாடி கொடுத்தார். சங்க இலக்கியங்களில் திருமுருகாற்றுப்படை தனித்துவம் கொண்டதாக திகழ்கிறது.

    பத்துப்பாட்டு நூல்களில் முதலாவதாக இடம் பெற்றிருக்கும் திருமுருகாற்றுப்படை முருகனை எப்படி வழிபட வேண்டும் என்று பக்தர்களுக்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது. சங்க காலத்தில் ஆற்றுப்படை என்பது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வழக்கத்தில் இருந்தது.

    அதாவது வள்ளல்களாக விளங்கும் அரசர்களை தேடிச் சென்று பரிசு பெற்று திரும்பும் புலவர்கள் தங்களது சக புலவர்கள் அல்லது தெரிந்தவர்களிடம் நீங்களும் என்னை போல பரிசு பெற வேண்டுமானால் இந்த பாதையில் செல்லுங்கள் என்று சொல்வதுதான் ஆற்றுப்படையாகும். இதற்கு ஆற்றுப்படுத்துதல் அல்லது வழிகாட்டுதல் என்று அர்த்தம் உண்டு.

    அந்த அடிப்படையில் முருகப்பெருமானிடம் அருள் பெற்ற நக்கீரர் தமிழர்கள் ஒவ்வொரு வரும் முருகன் அருள்பெற ஆற்றுப்படுத்தும் வகையில் பாடியதுதான் திருமுருகாற்றுப் படை. முருகன் மீது பாடப்பெற்ற முதல் ஆற்றுப்படை நூல் இதுதான். இந்த நூல் உருவாவதற்கு முருகன் நடத்திய திருவிளையாடலும் காரணமாகும்.

    இதுபற்றி ஒரு கதையும் கூறப்படுகிறது.

    திருப்பரங்குன்றத்தில் "கற்கி முகி" என்ற பூதம் 999 பேரை பிடித்து ஒரு குகையில் அடைத்து வைத்திருந்தது. 1000-வது நபரை பிடித்ததும் அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது அந்த பூதத்தின் திட்டமாகும்.

    ஆயிரமாவது நபருக்காக "கற்கி முகி" பூதம் காத்து கொண்டிருந்தது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் நீராடி சிவனையும், முருகனையும் வழிபடுவதற்காக நக்கீரர் சென்றார். சரவண பொய்கை கரையில் பூஜை செய்வதற்காக அமர்ந்தார்.

    இதை "கற்கி முகி" பூதம் பார்த்தது. ஆயிரமாவது நபராக நக்கீரரை இழுத்து சென்று விட வேண்டும் என்று திட்டமிட்டது. நக்கீரர் தனது மனதை ஒருநிலைப்படுத்தி பூஜையை தொடங்கியபோது கற்கி முகி பூதம் அருகில் உள்ள அரச மரத்தில் இருந்து ஒரு இலையை கீழே விழச் செய்தது.

    அந்த இலை சரவணப் பொய்கை குளத்தின் கரையில் விழுந்தது. இலையின் பாதி பகுதி தண்ணீரும், பாதி பகுதி தரையிலுமாக விழுந்து இருந்தது. தண்ணீரில் விழுந்த இலை பகுதி மீனாக மாறி சரவணப் பொய்கைக்குள் செல்ல முயற்சி செய்தது. ஆனால் தரையில் விழுந்த இலையின் மற்றொரு பகுதி பறவையாக மாறி பறந்து செல்ல முயற்சி செய்தது.

    இரண்டும் ஒன்றை ஒன்று இழுத்தப்படி இருந்தன. இந்த காட்சியை கண்டதும் நக்கீரர் ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்றார். பூஜையை மறந்து அந்த காட்சியை கண்டார். இதனால் சிவபூஜையில் நிந்தனை ஏற்பட்டு குற்றம் நிகழ்ந்தது.

    இதை காரணம் காட்டி கற்கி முகி பூதம் நக்கீரரை பிடித்துக் கொண்டு போய் குகைக்குள் இருந்த சிறையில் ஆயிரமாவது நபராக தள்ளியது. ஆயிரம் பேரையும் ஒரே நேரத்தில் சாப்பிட முடிவு செய்த அந்த பூதம் எல்லோரும் தயாராக இருங்கள். குளித்து விட்டு வருகிறேன் என்று சென்றது.

    குகை சிறையில் இருந்த 999 பேரும் புலவர் நக்கீரரை திட்டி தீர்த்தனர். நீங்கள் பூதத்திடம் பிடிபடாமல் இருந்திருந்தால் நாங்கள் உயிர் தப்பி இருப்போம். இப்போது நாங்கள் பூதத்துக்கு இரையாகப் போகிறோம் என்று புலம்பினார்கள்.

    இதை கேட்டதும் நக்கீரர் அவர்களை ஆறுதல்படுத்தினார். குகை சிறையில் உள்ள அனைவரையும் மீட்க முருகனை அழைக்க முடிவு செய்தார். இதற்காக அவர் மனமுருகி பாடினார். அந்த பாடல்களின் தொகுப்புதான் திருமுருகாற்றுப்படையாகும்.

    திருமுருகாற்றுப்படைபாடி முடித்த பிறகும் நீண்ட நேரமாக முருகப்பெருமான் வரவில்லை. உடனே நக்கீரர் திருச்செந்தூர் முருகனை மனதில் நினைத்து கண்களை மூடி தியானம் செய்தார். "படை வீடுகளில் முதன்மை பெற்ற திருச்செந்தூர் முருகா எங்களை காப்பாற்ற வா" என்று அழைத்தார்.

    உடனடியாக திருச்செந்தூர் முருகன் அங்கு தனது வேலோடு தோன்றினார். குகை சிறையை உடைத்து நக்கீரர் உள்பட 1000 பேரையும் மீட்கும்படி வேலை அனுப்பினார். முருகனின் அந்த வேல் சிறை கதவை உடைத்து ஆயிரம் பேரையும் மீட்டது.

    அப்போது நக்கீரர் முருகப்பெருமானிடம், "என்னை மீட்க தாமதமாக வந்தது ஏன்?" என்று கேட்டார். அதற்கு முருகப்பெருமான், "நக்கீரா.... நீவீர் பாடிய திருமுருகாற்றுப்படையில் கடைசியில் பழமுதிர்சோலை மலை கிழவனே என்று பாடியிருக்கிறாய். கிழவன் எப்படி வேகமாக வர முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

    இதை கேட்ட நக்கீரர் தமிழ் கடவுள் முருகனை இளைஞனாகவும் பாடினார். இதனால் திருச்செந்தூர் முருகன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். இந்த திருவிளையாடலை திருச்செந்தூர் முருகன் நடத்தினார் என்பதை திருச்செந்தூர் பிள்ளைத் தமிழின் 13-ம் பாடலில் விளக்கமாக சொல்லப்பட்டு உள்ளது.

    திருமுருகாற்றுப்படை சிறந்த பக்தி நூலாக மட்டுமின்றி சிறந்த இலக்கிய நூலாகவும் விளங்குகிறது. இந்த நூலில் முருகப் பெருமானின் புகழையும், பெருமைகளையும் நக்கீரர் விளக்கமாக எடுத்துச் சொல்லி உள்ளார். முருகனின் அழகை யாரும் சொல்ல முடியாத அளவுக்கு சொல்லி உள்ளார்.

     

    முருகப்பெருமானிடம் செல்லுங்கள் உங்களது குறைகள் அனைத்தும் தீரும் என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் வழிகாட்டி உள்ளார். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் முக்தி அடைய விரும்புபவர்களை, முருகனிடம் முக்தி பெற்ற ஒருவன் ஆற்றுப்படுத்தி வழிகாட்டுவது போல திருமுருகாற்றுப்படை நூல் அமைந்துள்ளது.

    திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் கூறுகிறார்... "செந்தில் வீற்றிருக்கும் வேலவனின் திருநாமத்தை நான் சொல்லும் கணக்கில் உச்சரித்தால் நான் சந்திக்கும் அனைத்து சோதனைகளும் கரைந்து விடும். நான் திருச்செந்தூர் ஆண்டவரின் திருநாமத்தை உச்சரிக்கும் கணக்கில் எனக்கு வந்த மற்றும் எனக்கு வரப்போகும் எனது கர்மவினைகளால் ஏற்படும் தீய விளைவுகளும் மறைந்து விடும்.

    புனித சாம்பலை (விபூதி) பூசி, இறைவனின் திருநாமத்தை உச்சரிப்பவர்களுக்கு எந்தப் பக்கத்தில் இருந்தும் பயம் இருக்காது. (வந்த வினையும் வருகிற வல்வினையும் கந்தனென்று சொல்ல கலங்குமே). நக்கீரர் திருச்செந்தூருக்கு 'திருச்சீரல்வாய்" என்று மற்றொரு பெயரை சொல்கிறார்.

    திருமுருகாற்றுப்படையில்தான் முதல் முதலாக நக்கீரர் தமிழகத்தில் உள்ள முருகனின் சிறப்பு தலங்களை பட்டியலிட்டு வகைப்படுத்தினார். அவர் காட்டிய பாதை காரணமாகவே தமிழகத்தில் முருகப்பெருமா னுக்கு அறுபடை வீடு என்ற பெயரில் முருகனின் 6 தலங்கள் முதன்மை சிறப்பைப் பெற்றன. அவற்றை பக்தர்கள் கடைபிடிக்கத் தொடங்கியதும் முருகனின் அறுபடை வீடு யாத்திரை உருவானது.

    தமிழகத்தில் எந்த ஒரு கடவுளுக்கும் அதற்கு முன்பு இப்படி சிறப்பு தலங்கள் வகைப்படுத்தப்படவில்லை. முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு உருவான பிறகுதான் மற்ற கடவுள்களுக்கும் சிறப்பு தலங்கள் உருவானது. அந்த வகையில் முருகப்பெருமானால் உருவான திருமுருகாற்றுப்படை தனி சிறப்பு பெற்றிருக்கிறது.

    முருகனின் தோற்றத்தையும், பெருமையையும் சொல்லும் இந்த நூல் மூலம் திருச்செந்தூர் முருகன் தனது சிறப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். நக்கீரர் காட்டிய வழியில் நாமும் முருகப்பெருமானை வழிபட்டால் நக்கீரருக்கு கிடைத்தது போல நிலையான இன்பம் நிச்சயம் நமக்கும் கிடைக்கும்.

    நக்கீரரை ஆட்கொண்டது போல திருச்செந்தூர் முருகன் நடத்திய மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.

    • ஓய்வு இல்லாமல் படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்ததால் மே மாதம் மட்டும் 10 நாட்கள் ஓய்வு எடுப்பேன்.
    • மே மாதத்தை தேர்வு செய்ததற்கு மற்றொரு காரணம்.

    'டிரீம்ஸ்'

    என்னை வைத்து அந்த படத்தை எடுக்க வேண்டும் என்பது மலையாள பட உலகின் டிரீம் (கனவு). அந்த கனவை நிறைவேற்ற நானே நடித்தேன்.

    ஆனாலும் என்னுடைய கனவு அப்போது வேறு விதமாக இருந்தது. அதாவது மே மாதத்தில் கால்ஷீட் கேட்கிறார்கள் எப்படி கொடுப்பது?.

    அதாவது எனக்கு ஒரு பழக்கம் இருந்தது. வருடம் முழுவதும் ஓய்வு இல்லாமல் படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்ததால் மே மாதம் மட்டும் 10 நாட்கள் ஓய்வு எடுப்பேன். அந்த நாட்களில் அப்பா அம்மாவோடு வெளிநாடு சுற்றுலா சென்று விடுவேன்.

    அதற்கு மே மாதத்தை தேர்வு செய்ததற்கு மற்றொரு காரணம். அந்த காலகட்டம் நமக்கு கோடை காலமாக இருக்கும். வெப்பத்தில் இருந்து தப்பிக்கவும் வசதியாக இருக்கும் என்பதால் அந்த நாட்களை தேர்வு செய்வேன். அப்படித்தான் படங்களுக்கு கால்ஷீட்டை கொடுத்து 10 நாட்கள் வெளிநாடுகளுக்கு செல்ல தயாராக இருந்தேன்.

    டிரீம்ஸ் படத்தில் சுரேஷ்கோபி ஜோடி ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டும் நடிக்க வேண்டி இருந்தது. படத்தின் ரிலீஸ் தேதியும் கொடுத்து விட்டார்கள். எனவே குறிப்பிட்ட நட்களுக்குள் அதில் நடித்து கொடுக்க அணுகினார்கள். நான் அந்த நாட்களில் முடியாது என்று கூறி விட்டேன்.

    ஆனாலும் சில நாட்கள் கழித்து அந்த பட தயாரிப்பாளர் என்னை தேடி வந்தார். 'மேடம், உங்களை தவிர வேறு யாரையும் இந்த பாத்திரத்துக்கு எங்களால் நினைத்து பார்க்க முடியவில்லை. பிளீஸ் எப்படியாவது சில நாட்கள் தாருங்கள் என்றார்.


    நான் வாய்ப்பே இல்லை என்றதும் கண்கலங்கி அழுது விட்டார். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவர் அவரது வருத்தத்தை வெளியே காட்டி விட்டார். ஆனால் நான் மனதுக்குள் அழுதேன். இந்த 10 நாள்தான் ஓய்வு கிடைக்கும். அதை கூட ஒழுங்காக அனுபவிக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் நானும் அழாத குறைதான்.

    சூழ்நிலையை பார்த்து அம்மா பந்தை என் பக்கம் தள்ளிவிட்டார். தயாரிப்பாளரை பார்த்தால் பாவமாக இருக்கிறது. ஆனாலும் நான் உன்னை வற்புறுத்தவில்லை. நீ என்ன சொல்கிறாயோ அது தான் முடிவு என்றார். நான் வேறு வழியில்லாமல் 3 நாட்கள் வேண்டுமானால் தருகிறேன் என்றேன். அதை கேட்டதும் தயாரிப்பாளருக்கு ஏக சந்தோசம். ஆனால் எனக்கு விடுமுறை நாட்களில் 3 நாட்கள் பறிபோய்விட்டதே என்ற கவலை.

    சென்னையில் வாஹினி ஸ்டுடியோவில் காட்சிகள் படமாக்கப்பட்டன. சுரேஷ் கோபியுடன் ஆடிய டூயட் பாடலான 'மணிமுத்து தாவணி பந்தல்...' பாடலை ஜேசுதாஸ், சுஜாதா பாடி இருந்தார்கள். மலையாளத்தில் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது. படமும் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

    முடியாது என்று தவிர்க்க நினைத்த படம் எனக்கு மிகப்பெரிய பெயரை தேடித்தந்தது. நான் என் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து கொடுத்து விட்டு திட்டமிட்டபடி டூர் கிளம்பி விட்டேன். திட்டமிட்டதை விட குறைவான நாட்களே உல்லாச பயணம். 10 நாட்களில் இத்தாலியில் உள்ள 3 நகரங்களை பார்க்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால் 3 நாட்கள் குறைந்தால் மிலன் நகரை மட்டும் பார்க்க முடியாமல் ஆகி விட்டது.

    ஆனாலும் உற்சாக பயணமாகவே அமைந்தது. ஊர் திரும்பியதும் வழக்கம் போல் தீவிர படப்பிடிப்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று 3 மொழிகளிலும் படங்கள் கையில் இருந்தன. இதனால் உட்கார்ந்து பேசக்கூட நேரம் இருக்காது.

    கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு கனவு கன்னியாக இருந்தாலும் குடும்பத்தில் அப்பா-அம்மாவுக்கு பிள்ளைதானே. குறிப்பிட்ட வயதில் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கத்தானே எல்லா பெற்றோர்களும் ஆசைப்படுவார்கள்.


    இதில் மீனா மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா? வீட்டில் பலமுறை திருமண பேச்சை எடுத்த போதெல்லாம் 'சும்மா இரும்மா,

    அதுக் கெல்லாம் உட்கார்ந்து பேச எனக்கு நேரமில்லை. ஆளை விடு' என்று நழுவி வந்தேன்.

    ஆனால் 2008-ம் ஆண்டுகளில் ரொம்ப தீவிரமாகவே மாப்பிள்ளை பார்க்கும் வேலையில் இறங்கி விட்டார்கள். அவர்கள் ஒரு பக்கம் மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தாலும் நான் படப்பிடிப்பில் தீவிரமாக இருந்தேன்.

    மாப்பிள்ளை பட்டியலில் பலர் வந்திருக்கிறார்கள். ஆனால் தன் பொண்ணு மீனாவுக்கு தகுந்த மாப்பிள்ளை யார் என்பதை அம்மாவும், அப்பாவும் தேடி இருக்கிறார்கள்.

    வயது, குணம், குடும்ப பின்னணி எல்லாம் ஓ.கே.வாக இருக்கும்.

    ஆனால் ஜாதகம் பொருந்தியிருக்காது. இப்படி ஏதாவது ஒன்று சரியில்லை என்று பலரை நிராகரித்த நிலையில் 'அந்த ஒரு' வரன் மட்டும் அம்மா-அப்பாவின் பார்வையில் மட்டுமல்ல இதயத்திலும் இடம் பிடித்து இருந்தார். அவர்களுக்கு பிடித்தாலும் நான் ஓ.கே. சொல்ல வேண்டும் அல்லவா...? மாப்பிள்ளை பற்றிய விபரங்களை என்னிடம் கொண்டு வந்தார்கள். 'நீயே பார்த்து முடிவு செய்யேம்மா...' என்றேன். நான்!

    ஏய், உன் வாழ்க்கை, உனக்கென்று சில எதிர்பார்ப்புகள் இருக்கும். நீயும் பார்த்து முடிவு செய்யணும்'-அம்மா. அதற்கு மேல் அம்மாவிடம் எதுவும் பேச முடிய வில்லை. நான் என்ன முடி வெடுத்தேன்...?

    என் மனம் கவர்ந்தாரா அந்த மணாளன்?

    அடுத்த வாரம் சொல்கிறேன்...!

    (தொடரும்...)

    • கவலை தூக்கத்தினை கெடுக்கும். தூக்கம் கெட்டால் கவலை பூதாகரமாய் தெரியும்.
    • மார்பக புற்றுநோயினை தவிர்க்கும் முயற்சியாக அதிக உடல் எடை இல்லாது இருக்க வேண்டும்.

    தடுப்பூசிகள் வேலை செய்கின்றன. இல்லையெனில் உலகம் இன்று பல கடும் பாதிப்புகளில் இருந்து மீண்டு வந்திருக்க முடியாது.

    * உலகில் சுமார் 10 சதவீதம் மக்கள் இடது கை பழக்கம் உடையவர்கள்.

    * உண்ணாவிரத முறைகளைப் போலவே கொரித்து கொண்டே இல்லாது இருப்பதும், ஒவ்வொரு வேைள உண வினையும் சற்று குறைத்து உண்பதும் நல்ல பலனை அளிக்கும்.

    * சில பழக்கங்கள் உடல், மன நலத்தினை மேம்படுத்தும்.

    * எட்டு மணி நேர தூக்கத்திற்கும் ஆழ் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவும். இது இயற்கை கொடுத்த தவம்.

    * உடற்பயிற்சி அன்றாடம் 20 நிமிடங்கள் அவசியம்.

    * முடிந்த வரை வீட்டில் சமைத்த உணவினை உண்ணுங்கள். அதுவே அமிர்தம்.

     

    * வெயில் ஆரம்பித்து விட்டது. தரமான சன் ஸ்கிரீன் உபயோகியுங்கள்.

    * 20 நிமிடமாவது தியானம் செய்யுங்கள்.

    * தேவையில்லாத ஊர் வம்பு, தேவையற்ற செய்திகளை காது வழியே மூளை, மனசுக்குள் போடாதீர்கள்.

    * அன்றாட வேலைகளில் முக்கியமானவற்றை முதன்மைப்படுத்தி செய்ய வேண்டும்.

    * காலைப் பொழுதில் ஒரு ஒழுக்க முறை, இரவு பொழுதில் ஒரு ஒழுக்க முறை என்று வரை படுத்திப் பாருங்கள்.

    * அவரவர் லட்சியம், இலக்கு என்ன என்பதனை அன்றாடம் ஒரு முறை எழுத வேண்டும்.

    * மது, புகை இதனை கண்ணால் கூட பார்க்காதீர்கள்.

    * தன்னை தானே அக்கறை எடுத்து கவனித்துக் கொள்வது என்பது அவசியம். உங்கள் மீது நீங்கள் காட்டும் அக்கறையை யாராலும் கொடுக்க முடியாது.

    * உங்கள் ஆழ்மனது சொல்வதினை கூர்ந்து கேளுங்கள்.

    இவையெல்லாம் இல்லாமல் இனி வரும் காலங்களில் வாழ்க்கை சீராய் இருப்பது கடினம்

    செரடோனிஸ்:

    இதற்கு மகிழ்ச்சி ஹார்மோன் என்ற பெயரும் உண்டு. இதனை நரம்பியல் கடத்தி என்பர். மூளையின் நரம்பு செல்களின் செய்திகளை உடல் முழுவதும் உள்ள நரம்பு மண்டலத்திற்கு எடுத்துச் செல்லும்.

    இந்த சொடோனின் குறைபாட்டினை ஏற்படுத்துபவை:

    * நாட்பட்ட மன அழுத்தம்

    * சத்துணவு குறைபாடு

    * சில வகை மருந்துகள்

    * ஹார்மோன் மாறுபாடு

    * சூரிய ஒளியின்மை ஆகியவை ஆகும்.

     

    இயற்கை வகையில் நாம் பெறக் கூடிய செரடோனின் குறைகளாக

    * பழங்கள் உட்கொள்ளுதல்

    * இளம் காலை சூரியன்

    * நல்ல ஷவர் (அருவி போல்) குளியல்

    * நிதானமான மூச்சு

    * இயற்கையோடு ஒட்டிய நடைபயிற்சி (போன் பேசுதல், பாட்டு கேட்டல் இவை கூடாது)

    * ஹெர்பல் டீ

    * ஆழ் தூக்கம்

    * பகலில் சுமார் 20 நிமிட ஓய்வு போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது.

    சற்று டல்லாக இருக்கின்றதா? வாழைப்பழம் ஒன்று எடுத்துக்கொள்ளுங்கள். செரடோனின் அளவு கூடி மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

    உடற்பயிற்சி செய்யும்போது செரடோனின் அளவு கூடுவதால் மூளை சுறுசுறுப்பாய் ஆக்கப்பூர்வமாய் இருக்கும்.

    கவலை இருக்கா?

    'இந்த கேள்வியினைக் கேட்டால் கவலை இல்லாத மனிதனை பார்க்க முடியுமா? என்ற எதிர் கேள்விதான் இருக்கும். ஏனெனில் நாம் வாழும் காலம் அப்படியானது. சரி இந்த கவலையினை குறைக்க முற்படுவதுதான் மனித முயற்சி. ஆனால் பலரும் தங்களது பழக்கத்தால் கவலையினை கூட்டிக் கொள்ளத்தான் செய்கின்றனர். அவை என்னென்ன என்று பார்ப்போமா?

    * கவலை உள்ள மனிதன் தண்ணீர் கூட மிகக்குறைவாகத்தான் குடிப்பான். அப்படியிருக்க உணவு எடுப்பது என்பது அவனுக்கு நெஞ்சை அடைப்பது போல் இருக்கும். உணவினைத் தவிர்ப்பான். ஆனால் ஆய்வுகள் கூறுவது இவ்வாறு உணவினைத் தவிர்க்கும்போது மனிதனின் கவலையின் வீரியம் கூடுகின்றதாம். ஆகவே வேலை இருந்தாலும் பழம், சூப், ஜூஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் உடல் நலமும் கெட்டு அவதிப்பட வேண்டி இருக்கும்.

    * குடிப்பவர் அனைவரும் சொல்லும் ஒரு பொதுவான காரணம் கவலை தான். ஆனால் குடிப்பவருக்கு கவலையின் அழுத்தம் கூடும் என்பதே உண்மை.

    * கவலை தூக்கத்தினை கெடுக்கும். தூக்கம் கெட்டால் கவலை பூதாகரமாய் தெரியும்.

    * கவலை குறைய ஆரோக்கியமான காற்றோட்ட சூழ்நிலை தேவை.

     

    * கவலையில் தண்ணீர் குடிக்க மறந்து விடக்கூடாது. உடல் நீரற்று வறண்டு விடும். அருகிலேயே தண்ணீர் பாட்டில் வைத்து அவ்வப்போது நீர் பருக வேண்டும்.

    * கவலை மறக்க என டி.வி., மொபைல் போன் இவற்றில் மூழ்குவது கவலையைக் கூட்டும். ஆக கவலையை கையாள கற்றுக் கொள்ள வேண்டும்.

    கவலைகளில் இருந்து விடுபட ஒரு சிறந்த வழி முடிவுகளை சரியாக எடுக்க வேண்டும். காலம் தாழ்த்தாமல் எடுக்க வேண்டும். இல்லையெனில் குழப்பமே கூடுதல் கவலை தரும்.

    * முடிவு எடுக்க பல வழிகள் வேண்டாம். முதலில் வேண்டாத வழிகளை களைந்து விடுங்கள்.

    * நல்லது, கெட்டது என உங்கள் முடிவின் விளைவுகளை துல்லியமாகப் பிரியுங்கள்.

    * உங்கள் உள்ளுணர்வு சொல்வதை கவனியுங்கள்.

    * காலம் பணத்தினை விட கூடுதல் மதிப்பு வாய்ந்தது. எனவே நேரத்தினை பணத்தை விட கூடுதல் அக்கறையோடு செலவழியுங்கள்.

    * சரியான முடிவு சரியான நேரத்தில் எடுக்காவிடில் அந்த வலியே மனதினை அரித்துக் கொன்று விடும். கவனம் தேவை.

    வைட்டமின் ஏ சத்து: காரட், மாங்காய், பசலை கீரை, பூசணி.

    வைட்டமின் சி சத்து: நெல்லிக்காய், கொய்யா, ஆரஞ்சு.

    கால்சியம்: பாதாம், ப்ரோகலி, சீஸ், டோக்பூ.

    க்யோலேட்: பீன்ஸ், ப்ரோகலி.

    இரும்பு சத்து: கீரை, பசலை, அடர்ந்த சாக்லேட், பருப்பு வகைகள்

    மக்னீசியம்: வாழைப்பழம், அடர்ந்த சாக்லேட்.

    இப்படி வெளிநாடுகளில் பயன்படுத்துகின்றனர். அங்கு கிடைக்கும் 'அவகோடா' பழத்தினை எல்லா உணவு தயாரிப்புகளிலும் பயன்படுத்துகின்றனர்.

    * உங்களுக்கு நெஞ்செரிச்சல், ஆசிட் எரிச்சல் இருக்கின்றதா?

    * மலச்சிக்கல் (அ) வயிற்றுப்போக்கு (அ) மாறி, மாறி இரண்டும் இருக்கின்றதா?

    * வயிற்றுப் பிரட்டல், வாந்தி.

    * வெளிப்போக்கில் மாற்றம் மற்றும் நிற மாற்றம்.

    * அடிக்கடி வயிறு உப்பிசம்.

    * அதிக காற்று பிரிவது

    * சரும பிரச்சினை

    இவை அனைத்துமே ஒருவரது ஜீரண மண்டலம் சரியாக இயங்கவில்லை என்பதனை கூறுகின்றது. இதற்கு உடனடியாக கவனம் கொடுக்கவும்.

     

    கமலி ஸ்ரீபால்

    இதனை கவனத்தில் கொள்வோமா:-

    * 50 வயதிற்குள்ளானவர்களின் புற்றுநோய் பாதிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளில் கூடுவது குறித்து ஆய்வாளர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

    * 2045-ல் உலக அளவில் 8 நபர்களில் ஒரு நபருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகின்றது.

    * 537 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயுடன் இந்த கால கட்டத்தில் உள்ளனர்.

    * 2030-ல் இது 643 மில்லியன் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    * 2045-ல் இது 783 மில்லியன் ஆகலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    மனநலத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது

    * மனநலம், மன அழுத்தம், கவலை இவற்றில் ஏற்படும் பாதிப்புகளின் சதவிகிதம் கூடியுள்ளதாகவே மருத்துவ ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

    * பலர் ஒரு தடவை கொடுக்கப்பட்ட மருந்து சீட்டினை வைத்து சில வருடங்களுக்கு அதே மருந்தினை மனம் போன படி வாங்கி சாப்பிடுகின்றனர். இது தவறு என்பதனை உணர மறுக்கின்றனர்.

    * மார்பக புற்றுநோயினை தவிர்க்கும் முயற்சியாக அதிக உடல் எடை இல்லாது இருக்க வேண்டும். குறிப்பாக மாத விலக்கு நின்ற பிறகு எடையை சீராக வைத்திருப்பது மிக அவசியம்.

    * 150 நிமிடங்கள் முதல் 200 நிமிடங்கள் வரை-ஒரு வாரத்தில் அதாவது தினம் சுமார் 20 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி அவசியம்.

    • புத்தர் முதல் மகாத்மா காந்தி வரை உயிர்ப்பலியிடும் பழக்கத்தினை எதிர்த்து ஒருமித்த குரல் எழுப்பப்பட்டது.
    • மூட நம்பிக்கை சடங்குகளை வேரறுக்க முயன்றார்.

    சமயமெனும் ஆலயத்தில் தர்மத்தையே சுவாமிகள் தீபமாக ஏற்றினார். பரம்பொருளை அடைவதற்கான வழி தர்மம் ஒன்றே என்பதை அறுதியிட்டுரைத்த சுவாமிகள்

    "பயந்து தர்மமிட்டு

    பரம்பொருளைத் தேடிடுங்கோ"

    என்று மக்களுக்கு அழைப்பு விடுத்தார். அய்யாவழி இறைவழிபாட்டில் தர்மம் அளித்தலே தலையாய கடமையாக ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. பதிகள், நிழல்தாங்கல்கள் தர்மத்தின் மகிமையைப் பறைசாற்றி கொண்டிருக்கின்றன. 'என் பெயரை சொல்லி எவரொருவர்வரினும், அன்பாக அன்னமிட்டு ஆதரித்த பக்தர்களுக்கு எவ்வித அபாயம் நேரினும், நாராயணன் நான் அங்கு வருவேன்' என்று தர்மத்தின் வழி நின்று பரம்பொருளை அடைந்திட சுவாமிகள் காட்டிய பாதை 'மனித நேயம்' எனும் அன்புமலர் பரப்பப்பட்ட புனித வழியாகும்.

    ஆத்மா பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்கும் ஆனந்த நிலையான முக்தி நிலையினை சுவாமிகள் தர்மபதி என்று வழங்கினார். சத்திய நெறி நிற்போர் தர்மபதி என்பதனை அடையலாம் என்பதனை "சத்தியமாய் இருக்க வேணும் தர்மபதி கிடைக்கும்" என்று அருள்நூல் வரிகள் தெளிவுபடுத்துகின்றன. மூர்க்க குணத்தை மனிதன் விட்டு விட்டால் மோட்சத்தை அடைவது சாத்தியமாகிவிடும் என்பதை அய்யா தெளிவுபடுத்தினார்.

    வைகுண்ட சுவாமிகளின் வருகையின் நோக்கம் 'தர்ம யுகமாக்கி தரணியை ஆளுதற்காகவே என அகிலம் கூறுகிறது. சுவாமிகள் தர்மயுகம் காணுவதில் மிக்க நாட்டம் கொண்டிருந்தார். தர்மயுகத்தின் இயல்பு பற்றி கருத்து தெரிவிக்கையில்,

    "சாத்திர வேதம் சமயம் ஒன்றாய் நின்றிலங்கும்

    வாயுவேப் பூப்போல் மலரெடுத்து வீசிநிற்கும்

    ஆயுங்கலைத் தமிழும் அறிவொன்று போல் பரவும்

    நம்மனுவோர் தர்ம பதி நாளும் மிகத் தழைக்கும்

    தம்மனுவோர் போலே தழைத்திருந்து வாழ்வார்காண்

    ஒக்கவொரு வினம் போல் உவந்திருந்து வாழ்வார்காண்"

    எனத் தர்மயுகத்தில் "ஒரே சமயம் ஒரே இனம்" என்ற அடிப்படையில் மக்கள் வாழ்வர் எனவும், தமிழும் அறிவும் ஒன்றாய் பரந்து தழைத்து நிற்கும் எனவும் கூறுகிறார். மேலும்,

    "மண்ணெல்லாம் தர்ம வயல் போல் விளைந்திருக்கும்

    இப்படியே தர்ம பதி இராச்சியம் ஒன்றுண்டாக்கி...

    தர்மபுவி கண்டு தானிருக்கும் மனுக்களுக்கு

    வர்மமில்லை நோவுமில்லை மறலிவினை தானுமில்லை"

    என அறுதியிட்டு கூறுகின்றார். இங்ஙனம் சுவாமிகள் காணும் தர்மபதி ராச்சியத்தில் நிலம் யாவும் தர்ம வயல்களாக காட்சி தரும் பாங்கினையும் அவரது அன்பர்களுக்கு விளக்கினார். அவர் ஏற்றிய தர்மநெறி மக்கள் மத்தியில் நன்றாக பரந்து வளர்ந்தோங்கியது. சுவாமிகளின் தர்மயுக கோட்பாடு அவரை ஒரு தலைசிறந்த சமுதாயவாதியாக காட்டுகின்றது.

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சீர்திருத்த இயக்கங்களுள் பெரும்பாலானவை உருவ வழிபாட்டை கண்டனம் செய்தன. சுவாமிகளின் இயக்கமும் உருவ வழிபாட்டை நிராகரித்தது. எங்கும் நிறைந்து விளங்கும் இறைவனின் இயல்புக்கு எதிராகவும், அனைத்தையும் கடந்து விளங்கும் பிறவாயாக்கைப் பெரியோனின் கங்குகரை காணாத் தன்மைக்கு ஏற்பில்லாமலும் உருவ வழிபாடு உள்ளது என சுவாமிகள் கருதினார்.

    "மறையினிலடங்கா இறையினிலடங்கா வணங்கிலுமடங்கா

    பல வகையிலுமடங்கா நுறையினிலடங்கா தொல்புவியிலடங்கா

    சுருதியிலடங்கா சகயினிலடங்கா உறவிலுமடங்கா

    ஒளியிலுமடங்கா, யுகத்திலுமடங்கா, ஒரு விதத்திலுமடங்கா"

    இறைவனைச் சிலையாக வடித்து வணங்கி வந்ததை சுவாமிகள் ஒத்துக்கொள்ளவில்லை. மனிதனுள்ளே இறைவன் உறைந்துள்ள தன்மையை மக்கள் மறந்து வாழ்வதனை கண்ணுற்ற சுவாமிகள் மக்களை நல்வழிப்படுத்த எண்ணினார். தன்னை அறிந்தவன் தன்னுள்ளே தலைவனை கண்டறிந்து கொள்ளலாம்" என்பதறிந்து,

    "தன்னை யறிந்ததுண்டால்

    தலைவனை நீ அறிவாய்"

    என்று தெளிவுபடுத்தினார். தன்னை பின்பற்றுபவர்கள் யார் என்று அடையாளம் காட்டுகையில்,

    "எனக்காகும் பேர்கள்....

    மாடு மண்ணுருவை வணங்கி திரியார்கள்"

    என்று அறுதியிட்டுக் கூறினார்.

    புத்தர் முதல் மகாத்மா காந்தி வரை உயிர்ப்பலியிடும் பழக்கத்தினை எதிர்த்து ஒருமித்த குரல் எழுப்பப்பட்டது. அறவினை யாதெனில் கொல்லாமை' எனப் போற்றிய இம்மண்ணில் தேசிய விடுதலைக்குப் பின்னரும் உயிர்ப்பலி கூடாது என ஓங்கிக் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. எனினும் உயிர்ப்பலியிட்டு வழிபடும் வழக்கம் இன்னும் முற்றிலும் ஒழிந்தபாடில்லை. பேச்சளவில் அள்ளி வீசப்பட்ட எதிர்ப்புக்கணைகள் செயலளவில் வெளிப்படாததே இதற்கான தலையாய காரணமாகும். வைகுண்ட சுவாமிகள் பிற சீர்திருத்தவாதிகளை போன்று, உயிர்ப்பலிக்கெதிரான நடவடிக்கையினை பேச்சளவோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாது நடைமுறையில் கொண்டு வருவதிலும் வெற்றி கண்டார்.

    மூடப்பழக்க வழக்கங்களின் மத்தியில் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களில் பெரும்பாலோர் தங்கள் வழிபடு தெய்வங்களின் அருளை வேண்டி முறைப்படி தியானமோ, பிரார்த்தனையோ செய்வது கிடையாது. தங்கள் நிலைக்கொப்ப தெய்வங்களையும் அச்சமிகுதியால் வழிபாடு செய்பவர்களாகவே இருந்தனர். தெய்வங்களை சாந்தப்படுத்திடவும், மகிழ்விக்கவும், தெய்வ சந்நிதியில், தெய்வத்தின் பெயரால் ஆடு, கோழி முதலியவைகளை பலியிட்டு வணங்கி வந்தனர். தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள தெரியாத மனிதர்கள், தன்னை தானே காப்பாற்றிக் கொள்ள தெரியாத உயிர்களை பலியாக்கி, தாங்கள் உழைத்து ஈட்டிய சிறு தொகையையும் கிடைத்தற்கரிய காலத்தையும் வீணாக்குவதை கண்ணுற்ற சுவாமிகள் இப்பழக்கத்தினை அகற்றிட முனைந்தார். தனது அன்பர்களுக்கு அவர் செய்த போதனைகள் எதிர்பார்த்த பயனைத் தந்தன.

    "ஆடு கிடாய் கோழி பன்றி ஆயனுக்கு வேண்டாங்காண்

    மேளதாளம் குரவைதொனி வேண்டாங்கானீசனுக்கு"

    என்றும்,

    "ஆடுகிடாய் கோழி பன்றி அறுத்து பலி கேட்கவில்லை

    பொங்கலரிசி கோழி முட்டை பொறித்த கறி கேட்கவில்லை

    உருகச் சுட்ட பணியாரம் அவலுருண்டை கேட்கவில்லை"

    கருகச்சுட்ட முறுக்குகளும் கடையல்பால் கேட்கவில்லை"

    என்றும் வைகுண்டர் உரைத்த உயிர்ப்பலி எதிர்ப்புக்கணைகள் அகிலத்திலும் "அருள் நூலிலும் பரவலாக காணப்படுகின்றன. தாங்கள் வழிபட்டிடும் தெய்வம் - பல்லுயிரையும் படைத்தவன் என மக்களால் கருதப்பட்ட பரமன் பலி ஏற்பதிலும் ரத்த தூபம் காண்பதி லும் ஆவல் மிக்கோனாக இருக்க மாட்டான் என்பதனை நன்குணர்ந்து, பலியிடும் பழக்கத்தையும் அவரது அன்பர்கள் அடியோடு அகற்றினர்.

    மக்கள் பேய்மேல் கொண்டிருந்த நம்பிக்கையை அகற்றி சுதந்திரமாக வாழ்ந்திட வேண்டும் என சுவாமிகள் முயற்சி மேற்கொண்டார். நாட்டிலுள்ள ஆலயங்களில் நுழைவதற்கு மேற்கொற்றவர்களாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் ஏராளமான பேய்க் கோவில்களை கொண்டிருந்தனர். பேய்த் தெய்வங்கள் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை அவர்களது வாழ்வை ஆட்டிப்படைத்தது. காலரா, அம்மை போன்ற கொடிய நோய்கள் கூட பேய்த் தெய்வங்களின் சீற்றமே என்றெண்ணி, அத்தெய்வங்களை சாந்தப்படுத்திட வேண்டி ஏராளமான பொருட்களை காணிக்கை செலுத்துவதுடன் உயிர்ப்பலியும் கொடுத்தனர். தெய்வங்களிடம் அச்சமும், பயமும் இருந்ததே ஒழிய அன்பும் பற்றும் ஒரு சிறிதுமில்லை. மக்கள் பேய்த் தெய்வங்களுடன் இங்ஙனம் தங்கள் வாழ்வைப் பிணைத்துக் கொண்டு நரகமாக்கிடும் செயலினை அகற்றிட ஆவல் கொண்டு, எல்லா பேய்களையும் தான் எரித்து விட்டதாகவும், இனிமேல் பேய்களை கண்டு யாரும் பயப்பட வேண்டாம் எனவும் அறிவித்தார். மேலும்,

    "பொய்யில்லை பிசாசுயில்லை பில்லியின் வினைகளில்லை

    நொய்யில்லை நோவுமில்லை நொன்பலத்துன்பமுமில்லை

    தொய்யில்லை இறைகளில்லை சுறுட்டுமாஞாலமுமில்லை

    "மையில்லை உலகத்தோரே வாழுமோர் நினைவால்"

    என்று அறவுரை நல்கினார். பேய் வழிபாட்டிலிருந்து மக்களை விடுவித்திட

    "பேய்ச்செடிக்கு கொடுத்தவனை

    பிரம்பெடுத்து நானடிப்பேன்"

    எனவும்,

    "செடிக்குக் கொடுத்தவனை

    செவிதிருக்கி குற்றம் கேட்பேன்"

    எனவும் கடுமையாக எச்சரித்தார். அவரது அறிவுரையை ஏற்று திருந்தாதவர்களை பார்த்து வருந்தி,

    "தெய்வ கன்னிகள் பெற்ற பிள்ளை

    செடிதோறும் அலைகிறாரே

    பேய் எச்சித் தின்று அவர்

    பேய் போல் அலைகிறாரே"

    என உரைத்தார்.

    அது மட்டுமல்ல... மூட நம்பிக்கை சடங்குகளையும் வேரறுக்க முயன்றார். அதனை வரும் தொடரில் காண்போம்.

    • எல்லா ஞானிகளும் எப்படி ஞானம் அடைந்தார்கள் என்பதும் இப்போது தான் புரிந்தது.
    • ஆன்மிக அனுபவங்களோடு ஆறு வருடங்கள் போராடிப் பார்த்தார்.

    ஆனந்தப் பரவச நிலையில் ஆண்டு முழுவதும் இருந்து விட்டேன்.

    முதல் ஆறு மாதங்களின் முடிவில் சில பிரச்சனைகள் உருவாக ஆரம்பித்தன. வயிற்றுப் பசி என்பது சுத்தமாக இல்லாது போய்விட்டது. சுகவீனம் அடைந்து விட்டது போன்ற ஏதோ ஒரு வித உணர்வு ஆட்கொண்டுவிட்டது.

    என்ன காரணம் என்று விளங்கவில்லை. மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தால் அனைத்தும் சரியாகவே இருந்தது.

    நாட்கள் ஆக ஆக உடல் நலம் சரியில்லை என்ற உணர்வுதான் அதிகரித்துக் கொண்டிருந்தது.

    ஹீலர் ஒருவரை சந்தித்து ஆலோசனை கேட்டேன். பரிசோதித்துப் பார்த்த அவர்,

    "உங்கள் உடல் முழுவதும் சக்தி உணர்ச்சி குவிந்து கிடக்கின்றது" என்று கூறினார்.

    அது அவர் சொல்லாமலேயே எனக்கும் தெரிந்தது.

    எனது உடல் உபாதைகள் அனைத்துக்கும் காரணம் எனது ஆனந்தப் பரவச நிலை தான் என்பதைக் கண்டு பிடிக்க முடிந்தது.

    அந்த ஆனந்தப் பரவச நிலையிலிருந்து விடுபட்டாலொளிய உடல்நலம் சீராகாது எனத் தோன்றியது.

    வேறு வழி எதுவும் தெரியவில்லை. முப்பது ஆண்டுகள் அரும்பாடு பட்டு உருவாக்கிய ஆனந்தப் பரவச நிலையைக் கைவிட்டாக வேண்டும்.

    உடல்நலத்தைப் பாதுகாக்க அது ஒன்றேதான் வழி என்ற நிலையில். அந்த ஆனந்தப் பரவச நிலையை என்னைவிட்டு ஒதுக்கித் தள்ள ஆரம்பித்தேன்.

    அதனை எவ்வளவு தான் ஒதுக்கித் தள்ளினாலும், அது மீண்டும் மீண்டும் என்னையே வந்து சேர்ந்து கொள்ளும். தொடர்ந்து அதனோடு போராடி, எப்படியோ அதிலிருந்து விடுபட்டு விட்டேன்.

    அப்படி விடுபடுவதற்குக் கூட ஒரு மாத கால முயற்சி தேவைப்பட்டுவிட்டது.

    ஒரு வழியாக ஆனந்தப் பரவச நிலையை விட்டு வெளியே வந்து தரையிறங்கிவிட்டேன்.

    அதன்பிறகு உடல்நலம் சிறுகச் சிறுக சீராகி விட்டது. ஆனால் மனம்?

    போர் வீரர்கள் இரும்புக் கவசத்தை அணிந்திருப்பார்கள். ஈட்டியால் குத்தினாலும் சரி, வாளினால் வெட்டினாலும் சரி, அவர்களுக்கு எதுவுமே ஆகாது. அந்த ஈட்டியும், வாளும்தான் உடைந்து போகும்.

    அது போல் நான் சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்திலிருந்தும் எனது ஆனந்தப் பரவச நிலைதான் என்னைக் காத்து நின்றது. இப்போது அந்தப் பரவச நிலை என்னிடம் இல்லை.

    இப்போது, ஈட்டியைக் கண்டும், வாளைக்கண்டும் பயப்படாத நான், ஒரு குண்டூசியைக் கண்டும் பயப்பட ஆரம்பித்து விட்டேன். அற்பமான பிரச்சனை கூட, மலையளவு பெரிதாகத் தோன்றி என்னை பயமுறுத்தின.

    என்னைக் காப்பாற்றிக் கொள்ள நான் என்ன செய்வது?

    தியானம் செய்து மீண்டும் ஆன்மிக அனுபவங்களைப் பெறவேண்டுமா அல்லது வேறு என்ன செய்ய வேண்டும்?

    குழப்பம், குழப்பம், முடிவில்லாத குழப்பமாக இருந்தது.

    எனது நாற்பத்து ஏழாவது வயதில் ஏற்பட்ட ஆனந்தப் பரவச நிலை நாற்பத்து எட்டாவது வயது வரை நீடித்தது.

    நாற்பத்து எட்டாவது வயதிலிருந்து ஐம்பத்து எட்டாவது வயது வரை பத்து வருடகாலமாக ஒரே குழப்பம் தான்.

    எனது ஐம்பத்து எட்டாவது வயதில் ஒரு நாள். கொசுக்கடி போன்ற ஓர் அற்பமான பிரச்சனையை எதிர்கொள்ள நேர்ந்தது. அந்தப் பிரச்சனை என்னைத் தாக்கியதால் எனது மன நிம்மதி பாதிக்கப்பட்டது.

    "மனதையும் நிம்மதியாக வைத்துக் கொள்ள முடியவில்லை. ஆனந்தப் பரவச நிலைக்கும் போகமுடியவில்லை. எதுவேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். எனக்கு எந்த நிம்மதியும் வேண்டாம். எனக்கு எதுவுமே வேண்டாம்" - என்று எனக்கு நானே ஒரு முடிவுக்கு வந்தேன்.

    ஸ்ரீ பகவத்

    இது வரை என் மனதை மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வைத்துக் கொள்ள ஏதேதோ பயிற்சி முயற்சிகளை மேற்கொண்டு வந்தேன். இப்போது என் மனதை அப்படியே விட்டு விட்டேன். "நீ எப்படி செயல்பட்டாலும் சரிதான். பயமா, வருத்தமா, எது வேண்டு மானாலும் வரட்டும். என்ன வேண்டுமானாலும் வரட்டும். நீ எப்படி செயல்பட்டாலும் சரிதான்" என்று என்னுடைய மனதை அப்படியே அதன் போக்கிலேயே விட்டு விட்டேன்.

    இந்த நிலையில் நான் என்னுடைய மனதை, - 'இது இப்படி இப்படி செயல்பட வேண்டும்; இப்படி இப்படி செயல்படக் கூடாது' - என்று அதனை நெறிப்படுத்திக் கொண்டிருப்பேனா?

    அதனை அப்படியே விட்டு விட்டேன்.

    மனதை அப்படியே விட்டு விட்டால் என்ன ஆகும்?

    அது, அதுபோக்கில் இயங்க ஆரம்பித்தது. என்னுடைய குறுக்கீடு எதுவும் இல்லாமல் சுயமாக இயங்க ஆரம்பித்தது. என்னுடைய மனதுக்குள், என்னை அறியாமல் இப்படி ஓர் இயக்கமும் இயங்கிக் கொண்டிருந் திருக்கிறது என்பதை அன்றுதான் கண்டு பிடித்தேன். இப்போதுதான் தெரிந்து கொண்டேன் ஞானம் என்றால் என்ன, விடுதலை என்றால் என்ன என்பதை.

    எல்லா ஞானிகளும் எப்படி ஞானம் அடைந்தார்கள் என்பதும் இப்போது தான் புரிந்தது.

    ஆன்மிக உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய புத்தரைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். புத்தர் எவ்வாறு ஞானம் அடைந்தார்?

    அவர் ஓர் இளவரசர். அரச பதவி அவருக்காக காத்திருந்தது. திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருந்தது.

    ஞானம் அடையவேண்டும் என்ற ஆவலில் அவர் தனது அரச பதவி, குடும்பம் ஆகியவற்றைத் துறந்தார். ஆன்மிக பயிற்சி முயற்சிகளைத் தொடர்ந்தார்.

    இரண்டு குருநாதர்கள் இருந்து வழிகாட்டினர். பயிற்சி முயற்சிகள் அனைத்திலும் தீவிரம் காட்டினார்.

    ஒரு நாள் உணவாக ஓர் எள், ஓர் அரிசி என உடலை வருத்தி தவ முயற்சிகளில் ஈடுபட்டார்.

    அவருடைய முயற்சிகளின் பலனாக ஆன்மிக அனுபவங்கள் பல அவருக்கு ஏற்பட்டன. எந்தவொரு அனுபவத்திலும் நிலைத்திருக்க முடியாமல் ஆன்மிக அனுபவங்கள் அனைத்தும் அவரை ஏமாற்றின.

    ஆன்மிக அனுபவங்களோடு ஆறு வருடங்கள் போராடிப் பார்த்தார். சத்திரிய வீர பரம்பரையைச் சேர்ந்த அவர் தனது முயற்சிகளின் இயலாமையை விரைவிலேயே உணர்ந்து விட்டார்.

    முயற்சிகளின் எல்லைக்குச் சென்ற அவர் அதற்கு மேலும் வழியே கிடையாது என்பதைப் புரிந்து கொண்டு அப்படியே திகைத்துப்போய் நின்று விட்டார்.

    எல்லா பயிற்சிகளையும் செய்து முடித்துவிட்டார். மேலும் செய்வதற்கு எந்தப் பயிற்சியும் பாக்கி இல்லை.

    அந்த நிலையில் எந்தப் பயிற்சியும் செய்யாமல் அப்படியே ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார்.

    அவர் எதுவுமே செய்யாமல் உட்கார்ந்து இருந்தால், அவர் மனமும் இயக்கம் எதுவும் இல்லாமல் போய் விடுமா?

    அது அதன் போக்கில் இயங்கியது. இதற்கு முன்னால் அவர் ஒருபோதும் அதனை சுதந்திரமாக இயங்க அனுமதித்ததே இல்லை. அதனுடைய இயல்பான இயக்கத்துடன் ஏதாவது ஒரு பயிற்சி முயற்சியை இணைத்து அதனை நிர்வாகம் செய்தே வந்திருந்தார். இன்று அது அதன் போக்கில் இயங்கியது. சுதந்திரமாக இயங்கியது. எந்தவொரு அலங்காரமும் செய்யப் படாமல் நிர்வாணமாக இயங்கியது.

    மனதினுடைய சுதந்திரமான இயக்கத்தை அன்றுதான் முதன் முதலாகக் கண்டுபிடித்தார். அதற்கு நிர்வாண நிலை என்று பெயர் கொடுத்தார்.

    திருவண்ணாமலையின் தீபமாக விளங்கும் ரமண மகரிஷியைத் தெரியாதவர்களே இருக்க முடியாது . அவர் தனது பதினாறாவது வயதில் ஞானம் அடைந்தார்.

    அவர் அப்போது ஒரு பள்ளி மாணவன். அவர் சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்டார். மதுரையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கூடத்தில் படித்துவந்தார்.

    திடீரென ஒரு நாள் அவருக்கு மரண பயம் ஏற்பட்டது . இளம் வயதிலிருக்கும் ஒருவருக்கு இத்தகைய பயம் வந்தால் அவர் என்ன செய்வார்?

    எவரிடமாவது ஆலோசனை கேட்டு அதனைப் போக்கிக் கொள்ளவே முயன்றிடுவர். ஆனால் சற்று வித்தியாசமாக ரமணர் அந்த பயத்திலிருந்து விடுபட விரும்பவில்லை.

    உறவினர் வீட்டில் அவர் தங்கியிருந்த சூழல் எப்படி இருந்ததோ தெரியவில்லை.

    மரணம் வந்தால் வந்துவிட்டுப் போகட்டும் என்று அவர் தரையில் அப்படியே படுத்துவிட்டார்.

    அவர் உடல் நலத்துடனேயே இருந்து வந்தார். மரணம் ஏற்படும் அளவுக்கு உடல்நலக் குறைபாடு எதுவும் கிடையாது. அவருக்கு ஏற்பட்டது மரணபயம் என்னும் ஒரு மன அனுபவம் மட்டுமே.

    மரணம் வந்தால் வந்துவிட்டுப் போகட்டும் என்ற நிலையில் அவர் தனது மரணபயம் என்ற மன அனுபவத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார். அதாவது அவர் தனது மன இயக்கத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்.

    விளைவு?

    புத்தருக்கு ஏற்பட்டது தான் அவருக்கும் ஏற்பட்டது.

    தன்னுடைய மன இயக்கம் வித்தியாசமான வேறு ஒரு பரிமாணத்தில் இயங்குவதை கண்டு கொண்டார்.

    அந்த சந்தர்ப்பத்தில் அவர் ஒரு பள்ளி மாணவன் மட்டுமே . சாஸ்திரங்கள் சம்பந்தமான ஆய்வுகள் எவையுமே அவருக்குக் கிடையாது.

    அந்த நேரத்தில் அவருக்கு இருந்த அறிவைக் கொண்டு அவர், "நான் எனது நிஜ சொரூபத்தைக் கண்டுபிடித்துவிட்டேன் "என்று கூறினார்.

    இவ்வாறு ஞானிகள் அனைவரும் ஒரே தன்மையிலேயே ஞானம் அடைந்துள்ளனர்.

    தொடர்புக்கு வாட்அப் - 8608680532

    ×