என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மருத்துவ ஆய்வு குறிப்புகள் அறிவோம்!
    X

    மருத்துவ ஆய்வு குறிப்புகள் அறிவோம்!

    • கவலை தூக்கத்தினை கெடுக்கும். தூக்கம் கெட்டால் கவலை பூதாகரமாய் தெரியும்.
    • மார்பக புற்றுநோயினை தவிர்க்கும் முயற்சியாக அதிக உடல் எடை இல்லாது இருக்க வேண்டும்.

    தடுப்பூசிகள் வேலை செய்கின்றன. இல்லையெனில் உலகம் இன்று பல கடும் பாதிப்புகளில் இருந்து மீண்டு வந்திருக்க முடியாது.

    * உலகில் சுமார் 10 சதவீதம் மக்கள் இடது கை பழக்கம் உடையவர்கள்.

    * உண்ணாவிரத முறைகளைப் போலவே கொரித்து கொண்டே இல்லாது இருப்பதும், ஒவ்வொரு வேைள உண வினையும் சற்று குறைத்து உண்பதும் நல்ல பலனை அளிக்கும்.

    * சில பழக்கங்கள் உடல், மன நலத்தினை மேம்படுத்தும்.

    * எட்டு மணி நேர தூக்கத்திற்கும் ஆழ் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவும். இது இயற்கை கொடுத்த தவம்.

    * உடற்பயிற்சி அன்றாடம் 20 நிமிடங்கள் அவசியம்.

    * முடிந்த வரை வீட்டில் சமைத்த உணவினை உண்ணுங்கள். அதுவே அமிர்தம்.

    * வெயில் ஆரம்பித்து விட்டது. தரமான சன் ஸ்கிரீன் உபயோகியுங்கள்.

    * 20 நிமிடமாவது தியானம் செய்யுங்கள்.

    * தேவையில்லாத ஊர் வம்பு, தேவையற்ற செய்திகளை காது வழியே மூளை, மனசுக்குள் போடாதீர்கள்.

    * அன்றாட வேலைகளில் முக்கியமானவற்றை முதன்மைப்படுத்தி செய்ய வேண்டும்.

    * காலைப் பொழுதில் ஒரு ஒழுக்க முறை, இரவு பொழுதில் ஒரு ஒழுக்க முறை என்று வரை படுத்திப் பாருங்கள்.

    * அவரவர் லட்சியம், இலக்கு என்ன என்பதனை அன்றாடம் ஒரு முறை எழுத வேண்டும்.

    * மது, புகை இதனை கண்ணால் கூட பார்க்காதீர்கள்.

    * தன்னை தானே அக்கறை எடுத்து கவனித்துக் கொள்வது என்பது அவசியம். உங்கள் மீது நீங்கள் காட்டும் அக்கறையை யாராலும் கொடுக்க முடியாது.

    * உங்கள் ஆழ்மனது சொல்வதினை கூர்ந்து கேளுங்கள்.

    இவையெல்லாம் இல்லாமல் இனி வரும் காலங்களில் வாழ்க்கை சீராய் இருப்பது கடினம்

    செரடோனிஸ்:

    இதற்கு மகிழ்ச்சி ஹார்மோன் என்ற பெயரும் உண்டு. இதனை நரம்பியல் கடத்தி என்பர். மூளையின் நரம்பு செல்களின் செய்திகளை உடல் முழுவதும் உள்ள நரம்பு மண்டலத்திற்கு எடுத்துச் செல்லும்.

    இந்த சொடோனின் குறைபாட்டினை ஏற்படுத்துபவை:

    * நாட்பட்ட மன அழுத்தம்

    * சத்துணவு குறைபாடு

    * சில வகை மருந்துகள்

    * ஹார்மோன் மாறுபாடு

    * சூரிய ஒளியின்மை ஆகியவை ஆகும்.

    இயற்கை வகையில் நாம் பெறக் கூடிய செரடோனின் குறைகளாக

    * பழங்கள் உட்கொள்ளுதல்

    * இளம் காலை சூரியன்

    * நல்ல ஷவர் (அருவி போல்) குளியல்

    * நிதானமான மூச்சு

    * இயற்கையோடு ஒட்டிய நடைபயிற்சி (போன் பேசுதல், பாட்டு கேட்டல் இவை கூடாது)

    * ஹெர்பல் டீ

    * ஆழ் தூக்கம்

    * பகலில் சுமார் 20 நிமிட ஓய்வு போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது.

    சற்று டல்லாக இருக்கின்றதா? வாழைப்பழம் ஒன்று எடுத்துக்கொள்ளுங்கள். செரடோனின் அளவு கூடி மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

    உடற்பயிற்சி செய்யும்போது செரடோனின் அளவு கூடுவதால் மூளை சுறுசுறுப்பாய் ஆக்கப்பூர்வமாய் இருக்கும்.

    கவலை இருக்கா?

    'இந்த கேள்வியினைக் கேட்டால் கவலை இல்லாத மனிதனை பார்க்க முடியுமா? என்ற எதிர் கேள்விதான் இருக்கும். ஏனெனில் நாம் வாழும் காலம் அப்படியானது. சரி இந்த கவலையினை குறைக்க முற்படுவதுதான் மனித முயற்சி. ஆனால் பலரும் தங்களது பழக்கத்தால் கவலையினை கூட்டிக் கொள்ளத்தான் செய்கின்றனர். அவை என்னென்ன என்று பார்ப்போமா?

    * கவலை உள்ள மனிதன் தண்ணீர் கூட மிகக்குறைவாகத்தான் குடிப்பான். அப்படியிருக்க உணவு எடுப்பது என்பது அவனுக்கு நெஞ்சை அடைப்பது போல் இருக்கும். உணவினைத் தவிர்ப்பான். ஆனால் ஆய்வுகள் கூறுவது இவ்வாறு உணவினைத் தவிர்க்கும்போது மனிதனின் கவலையின் வீரியம் கூடுகின்றதாம். ஆகவே வேலை இருந்தாலும் பழம், சூப், ஜூஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் உடல் நலமும் கெட்டு அவதிப்பட வேண்டி இருக்கும்.

    * குடிப்பவர் அனைவரும் சொல்லும் ஒரு பொதுவான காரணம் கவலை தான். ஆனால் குடிப்பவருக்கு கவலையின் அழுத்தம் கூடும் என்பதே உண்மை.

    * கவலை தூக்கத்தினை கெடுக்கும். தூக்கம் கெட்டால் கவலை பூதாகரமாய் தெரியும்.

    * கவலை குறைய ஆரோக்கியமான காற்றோட்ட சூழ்நிலை தேவை.

    * கவலையில் தண்ணீர் குடிக்க மறந்து விடக்கூடாது. உடல் நீரற்று வறண்டு விடும். அருகிலேயே தண்ணீர் பாட்டில் வைத்து அவ்வப்போது நீர் பருக வேண்டும்.

    * கவலை மறக்க என டி.வி., மொபைல் போன் இவற்றில் மூழ்குவது கவலையைக் கூட்டும். ஆக கவலையை கையாள கற்றுக் கொள்ள வேண்டும்.

    கவலைகளில் இருந்து விடுபட ஒரு சிறந்த வழி முடிவுகளை சரியாக எடுக்க வேண்டும். காலம் தாழ்த்தாமல் எடுக்க வேண்டும். இல்லையெனில் குழப்பமே கூடுதல் கவலை தரும்.

    * முடிவு எடுக்க பல வழிகள் வேண்டாம். முதலில் வேண்டாத வழிகளை களைந்து விடுங்கள்.

    * நல்லது, கெட்டது என உங்கள் முடிவின் விளைவுகளை துல்லியமாகப் பிரியுங்கள்.

    * உங்கள் உள்ளுணர்வு சொல்வதை கவனியுங்கள்.

    * காலம் பணத்தினை விட கூடுதல் மதிப்பு வாய்ந்தது. எனவே நேரத்தினை பணத்தை விட கூடுதல் அக்கறையோடு செலவழியுங்கள்.

    * சரியான முடிவு சரியான நேரத்தில் எடுக்காவிடில் அந்த வலியே மனதினை அரித்துக் கொன்று விடும். கவனம் தேவை.

    வைட்டமின் ஏ சத்து: காரட், மாங்காய், பசலை கீரை, பூசணி.

    வைட்டமின் சி சத்து: நெல்லிக்காய், கொய்யா, ஆரஞ்சு.

    கால்சியம்: பாதாம், ப்ரோகலி, சீஸ், டோக்பூ.

    க்யோலேட்: பீன்ஸ், ப்ரோகலி.

    இரும்பு சத்து: கீரை, பசலை, அடர்ந்த சாக்லேட், பருப்பு வகைகள்

    மக்னீசியம்: வாழைப்பழம், அடர்ந்த சாக்லேட்.

    இப்படி வெளிநாடுகளில் பயன்படுத்துகின்றனர். அங்கு கிடைக்கும் 'அவகோடா' பழத்தினை எல்லா உணவு தயாரிப்புகளிலும் பயன்படுத்துகின்றனர்.

    * உங்களுக்கு நெஞ்செரிச்சல், ஆசிட் எரிச்சல் இருக்கின்றதா?

    * மலச்சிக்கல் (அ) வயிற்றுப்போக்கு (அ) மாறி, மாறி இரண்டும் இருக்கின்றதா?

    * வயிற்றுப் பிரட்டல், வாந்தி.

    * வெளிப்போக்கில் மாற்றம் மற்றும் நிற மாற்றம்.

    * அடிக்கடி வயிறு உப்பிசம்.

    * அதிக காற்று பிரிவது

    * சரும பிரச்சினை

    இவை அனைத்துமே ஒருவரது ஜீரண மண்டலம் சரியாக இயங்கவில்லை என்பதனை கூறுகின்றது. இதற்கு உடனடியாக கவனம் கொடுக்கவும்.

    கமலி ஸ்ரீபால்

    இதனை கவனத்தில் கொள்வோமா:-

    * 50 வயதிற்குள்ளானவர்களின் புற்றுநோய் பாதிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளில் கூடுவது குறித்து ஆய்வாளர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

    * 2045-ல் உலக அளவில் 8 நபர்களில் ஒரு நபருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகின்றது.

    * 537 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயுடன் இந்த கால கட்டத்தில் உள்ளனர்.

    * 2030-ல் இது 643 மில்லியன் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    * 2045-ல் இது 783 மில்லியன் ஆகலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    மனநலத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது

    * மனநலம், மன அழுத்தம், கவலை இவற்றில் ஏற்படும் பாதிப்புகளின் சதவிகிதம் கூடியுள்ளதாகவே மருத்துவ ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

    * பலர் ஒரு தடவை கொடுக்கப்பட்ட மருந்து சீட்டினை வைத்து சில வருடங்களுக்கு அதே மருந்தினை மனம் போன படி வாங்கி சாப்பிடுகின்றனர். இது தவறு என்பதனை உணர மறுக்கின்றனர்.

    * மார்பக புற்றுநோயினை தவிர்க்கும் முயற்சியாக அதிக உடல் எடை இல்லாது இருக்க வேண்டும். குறிப்பாக மாத விலக்கு நின்ற பிறகு எடையை சீராக வைத்திருப்பது மிக அவசியம்.

    * 150 நிமிடங்கள் முதல் 200 நிமிடங்கள் வரை-ஒரு வாரத்தில் அதாவது தினம் சுமார் 20 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி அவசியம்.

    Next Story
    ×