என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை பெற்றுள்ளோம்: வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல்
    X

    சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை பெற்றுள்ளோம்: வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல்

    • பிரதமர் மோடி அமெரிக்காவுடன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துள்ளார்.
    • மோடிக்கும் டிரம்புக்கும் இடையிலான தனிப்பட்ட உறவின் காரணமாக ஒரு நல்ல ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளோம்.

    இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:-

    * நமது போட்டியாளர்களை விட சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை நாம் பெற்றுள்ளோம்:

    * இந்த ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச விரும்பினேன். ஆனால் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் உருவாக்கிய விரும்பத்தகாத காட்சிகளால் என்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை.

    * இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஏழைகள், மீனவர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள்.

    * பிரதமர் மோடி அமெரிக்காவுடன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துள்ளார்.

    * ஒட்டுமொத்த தேசமும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறது

    * பிரதமர் மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் இடையிலான தனிப்பட்ட உறவின் காரணமாக இந்தியா அமெரிக்காவுடன் ஒரு நல்ல ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.

    * கால்நடை வளர்ப்பு, விவசாயம் மற்றும் பால்வளத் துறைகளின் நலன்களை பிரதமர் மோடி கருத்தில் கொண்டுள்ளார்.

    * அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா, முக்கியத்துவம் வாய்ந்த விவசாயம் மற்றும் பால்வளத் துறைகளின் நலன்களைப் பாதுகாத்துள்ளது

    * வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கு ஒரு நல்ல சகுனம்

    இவ்வாறு பியஷ் கோயல் தெரிவித்தார்.

    Next Story
    ×