என் மலர்
இந்தியா

VIDEO: வாகா எல்லையில் களைகட்டிய கொடியிறக்க நிகழ்ச்சி.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
- நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின் போது மூடப்பட்ட அட்டாரி - வாகா எல்லை மீண்டும் திறக்கப்பட்டது.
நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பஞ்சாபில் அமைந்துள்ள பாகிஸ்தான் எல்லையான அட்டாரி-வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி மாலை துவங்கியது.
இந்த கொடியிறக்க நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்பு படை வீரர் மிடுக்கான அணிவகுப்பு நடத்தினர். மேலும் பைக் சாகச நிகழ்ச்சி, பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின. ஆயிரக்கணக்கான மக்கள் வந்தே மாதரம், ஜெயஹிந்த் முழக்கமிட தேசியக்கொடி இறக்குதல் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின் போது மூடப்பட்ட அட்டாரி - வாகா எல்லை மீண்டும் திறக்கப்பட்ட இந்நிலையில் இன்றைய நிகழ்வு மேலும் முக்கியத்துவம் பெற்றது.
Next Story






