search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜவுளி தொழில்நுட்பத் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும்- மத்திய மந்திரி வலியுறுத்தல்
    X

    மத்திய மந்திரி பியூஸ் கோயல்

    ஜவுளி தொழில்நுட்பத் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும்- மத்திய மந்திரி வலியுறுத்தல்

    • ஜவுளி தொழில்நுட்ப காப்புரிமைகளுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
    • நவீன நெசவு இயந்திரங்கள், ஆய்வகங்கள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கலாம்.

    டெல்லியில் நடைபெற்ற ஜவுளி ஆராய்ச்சி சங்கங்களின் ஆய்வு கூட்டத்தில் நித்தி ஆயோக் அமைப்பின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர் வி கே. சரஸ்வத், உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு ஜவுளி தொழில்நுட்ப சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் சிறப்புரையாற்றிய மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளதாவது:

    ஜவுளி தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் இளம் விஞ்ஞானிகள் ஊக்குவிக்கப்பட வேண்டியது அவசியம். உலக தரத்திலான நவீன நெசவு இயந்திரங்கள், நவீன ஆய்வகங்கள் உள்ளிட்டவை குறித்து ஜவுளி ஆராய்ச்சி சங்கங்கள் தங்களது ஆலோசனைகளை அரசுக்கு வழங்கலாம்.

    ஆய்வகங்களை நவீன மயமாக்குவதில் இந்திய தர நிர்ணய அமைப்பு, ஜவுளி ஆராய்ச்சி சங்கங்களுக்கு உதவ வேண்டும். ஜவுளி தொழில்நுட்பம் தொடர்பான காப்புரிமைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து பரிசீலித்து ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×