search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரஷியா-உக்ரைன் போர் எரிபொருள், உணவு, உர நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது:   மத்திய மந்திரி கருத்து
    X

    ஜெய்சங்கர்

    ரஷியா-உக்ரைன் போர் எரிபொருள், உணவு, உர நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது: மத்திய மந்திரி கருத்து

    • பிரதமர் மோடி அரசின் தொலைநோக்கு பார்வையால் நாடு பல்வேறு சவால்களை எதிர்கொள்ள முடிந்தது.
    • கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு நான்கு முக்கிய சவால்களை எதிர்கொண்டது.

    பெங்களூரு:

    பிரதமர் நரேந்திர மோடி அரசு எட்டாண்டு காலம் பதவி நிறைவு செய்துள்ளதையொட்டி, பெங்களூருவில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

    உக்ரைனில் தற்போதைய சூழ்நிலையின் தாக்கங்கள், எரிபொருள், உணவு மற்றும் உரம் ஆகிய மூன்று 'எஃப் களை நெருக்கடியில் தள்ளி உள்ளன. இந்த மூன்றின் விலைகள் உயர்ந்துள்ளன. இதனால் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க பணவீக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

    உணவு விஷயத்தில், அவை உண்மையில் ஏழ்மை நாடுகளில் பசி சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும். உர விஷயத்தில், அது பல நாடுகளில் அடுத்த அறுவடை வரை ஒரு அடுக்கு சிக்கலை உருவாக்கும்.

    கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு நான்கு முக்கிய சவால்களை எதிர்கொண்டது. அந்த நான்கு சிக்கல்கள் கொரோனா, சீனாவுடனான பதற்றம், ஆப்கானிஸ்தான் நிலைமை மற்றும் உக்ரைன் போர். இந்த நான்கு முக்கிய நிகழ்வுகள், தொலைதூரத்தில் உள்ள ஒன்று ஒரு தேசத்தின் நல்வாழ்வில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    வடக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்ற அண்டை நாடு (சீனா) முயற்சிக்கிறது. சீனாவைப் பொறுத்த மட்டில், உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை, எங்களிடம் உள்ள புரிந்துணர்வுகளை மீறும் வகையிலும் மாற்றப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதில் நாங்கள் மீண்டும் தெளிவாக இருக்கிறோம்

    (பாகிஸ்தான்) எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வரப்பட மாட்டோம் என்ற தெளிவான முடிவை (எட்டு ஆண்டுகளில்) நாங்கள் எடுத்தோம்.

    கடந்த எட்டு ஆண்டு கால மோடி அரசின் மற்றொரு முக்கியமான சாதனை, வங்கதேசத்துடனான நில எல்லை ஒப்பந்தம். இது இந்தியா-வங்காளதேச உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த ஒப்பந்தம், வங்காளதேசத்திற்கும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கும் உண்மையில் மிகப்பெரிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டது.

    பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசின் முழுமையான தொலைநோக்கு பார்வையால் தேசம் இந்த சவால்களை எதிர்கொள்ள முடிந்தது. சமூகத்தின் எந்தவொரு வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தேசிய பாதுகாப்பே அடித்தளமாகும் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×