மகாராஷ்டிராவில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. நக்சலைட்டுகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன.
மகாராஷ்டிராவில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
Published on

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. இதில் இரு தரப்புக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் ஒரு பெண் உள்பட 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் நக்சலைட்டுகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன.

இந்த நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின்போது காயமடைந்த பாதுகாப்பு வீரர் தீபக் சின்னா மாதவி (38) விமானம் மூலம் பம்ராகட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த காட்டுப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com