என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல்- முதல்கட்டத்திலேயே தமிழ்நாட்டிலும் வாக்குப்பதிவு
- மாநில சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்தல் ஆணைய இணையதளத்தில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.
பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தேர்தல் கமிஷனராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த மாதம் ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் கமிஷனரான அருண் கோயல் கடந்த 9-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் மட்டுமே தேர்தல் கமிஷனர் பதவியில் இருந்தார்.
இதையடுத்து இரண்டு புதிய தேர்தல் கமிஷனர்களை பிரதமர் தலைமையிலான குழு நேற்று கூடி தேர்வு செய்தது.
இதில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சந்து ஆகியோர் புதிய தேர்தல் கமிஷனர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்தல் கமிஷனர்களாக ஞானேஷ் குமார், சுக்பிர்சிங் சந்து நேற்று காலை பதவியேற்று கொண்டனர். முன்னதாக அவர்களை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் வரவேற்றார்.
இதையடுத்து பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக மூவரும் ஆலோசனை நடத்தினார்கள். ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் தேதி குறித்து முடிவு எடுத்துவிட்ட நிலையில் அது தொடர்பாக புதிய இரு தேர்தல் கமிஷனர்களுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் ஆலோசனை நடத்தினார்.
பாராளுமன்ற தேர்தல் இன்று மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.
அத்துடன், அருணாச்சல பிரதேசம், ஆந்திர பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும். தேர்தல் ஆணைய இணையதளத்தில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று மதியம் 3 மணியளவில் தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.
அதில், மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, முதற்கட்டத்திலேயே ஒரே கட்டமாக தமிழ்நாடில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் ஏப்ரல் 19ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுடன், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் ஏப்ரல் 19ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
2ம் கட்டமாக நடைபெறும் தேர்தல்கள் அனைத்தும் ஏப்ரல் 26ம் தேதி நடைபெறும்.
3ம் கட்டமாக நடைபெறும் தேர்தல்கள் அனைத்தும் மேம் 7ம் தேதி நடைபெறுகிறது.
4ம் கட்ட தேர்தல் மே 13ம் தேதி நடைபெறுகிறது.
5ம் கட்ட தேர்தல் மே 20ம் தேதி நடைபெறுகிறது.
6ம் கட்ட தேர்தல் மே 25ம் தேதி நடைபெறுகிறது.
மக்களவை தேர்தல் முடிவு ஜூன் 4ம் அறிவிக்கப்படுகிறது.
மேலும், தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் வரும் மார்ச் 20ம் தேதி முதல் தொடங்குகிறது.
வேட்புமனு கடைசி நாள் மார்ச் 27ம் தேதி ஆகும். வேட்பு மனு பரிசீலனை மார்ச் 28ம் தேதி அன்று நடைபெறுகிறது.
வேட்பு மனு வாபஸ் மார்ச் 30ம் தேதி நடைபெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்