என் மலர்tooltip icon

    இந்தியா

    அரசு ஊழியர்கள் அவர்களின் பெற்றோர்களை புறக்கணித்தால் சம்பளம் பிடித்தம்: ரேவந்த் ரெட்டி
    X

    அரசு ஊழியர்கள் அவர்களின் பெற்றோர்களை புறக்கணித்தால் சம்பளம் பிடித்தம்: ரேவந்த் ரெட்டி

    • போற்றோரை புறக்கணிக்கும் ஊழியர்கள் சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் பிடித்தம்.
    • அது பெற்றோர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    குரூப்-II தேர்வில் வெற்றி பெற்று தேர்வானவர்களுக்கு, தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி நியமனக் கடிதம் வழங்கினார்.

    பின்னர் அவர்கள் மத்தியில் பேசும்போது கூறியதாவது:-

    பிரச்சனைகளுடன் வரும் மக்களை, கனிவுடன் அணுக வேண்டும். நாங்கள் புதிய சட்டம் கொண்டு வர இருக்கிறோம். அரசு பணியார்கள் அவர்களுடைய பெற்றோரை புறக்கணித்தால், அவர்களுடைய சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். இது பெற்றோர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். நீங்கள்தான் சட்டத்திற்கான வரைவை உருவாக்குவீர்கள். நீங்கள் மாதச் சம்பளம் பெறும்போது, உங்களுடைய பெற்றோர்களும், அதில் இருந்து மாதச் சம்பளம் பெறுவார்கள் என்பதை நாங்கள் உறுதி செய்வோம்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மேலும், தலைமைச் செயலாளரிடம் இது தொடர்பாக சட்ட வரைவு உருவாக்க கமிட்டி உருவாக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×