search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கத்தியால் குத்தப்பட்ட பி.ஆர்.எஸ். எம்.பி.- நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் தெலுங்கானா முதல்வர்
    X

    கத்தியால் குத்தப்பட்ட பி.ஆர்.எஸ். எம்.பி.- நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் தெலுங்கானா முதல்வர்

    • தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாத இறுதியில் நடைபெறுகிறது.
    • பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் கோத்தா பிரபாகர் ரெட்டி வாக்கு சேகரித்து வந்தார்.

    தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி சார்பில் துபாக்கா தொகுதியில் போட்டியிடும் எம்.பி. கோத்தா பிரபாகர் ரெட்டி சித்திப்பெட் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் அங்கமாக மாநிலத்தில் உள்ள பாஸ்டர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, அவரை நோக்கி வந்த மர்ம நபர் அவரிடம் கை குலுக்குவது போன்றே அருகில் சென்றார். பிறகு, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பிரபாகர் ரெட்டியின் வயிற்றில் குத்தினார். கத்தியால் குத்திய மர்ம நபரை பி.ஆர்.எஸ். தொண்டர்கள் மடக்கி பிடித்து, அங்கேயே வைத்து அடித்தனர். பிறகு மர்ம நபரை காவல் துறை கைது செய்தது.

    கத்தியால் குத்தப்பட்ட பிரபாகர் ரெட்டி கஜ்வெல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பிறகு அங்கிருந்து செகரந்தாபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் பிரபாகர் ரெட்டியை தெலுங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    Next Story
    ×