search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பணத்தகராறில் விபரீதம்: மாமியாரை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்
    X

    பணத்தகராறில் விபரீதம்: மாமியாரை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்

    • கமலா தன்னுடைய குடும்ப தேவைக்காக மருமகன் பிரசாத்திடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கினார்.
    • பணத்தை கேட்டு பிரசாத் தனது மாமியார் கமலாவிடம் தகராறு செய்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டம் குண்டல சிங்காரம் இந்திரம்மா காலனியைச் சேர்ந்தவர் கமலா. இவருடைய மகளை பிரசாத் என்பவர் திருமணம் செய்துள்ளார்.

    இவர், மஞ்சிரியாலா மாவட்டம் கோடபள்ளி போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிகிறார்.

    கமலா தன்னுடைய குடும்ப தேவைக்காக மருமகன் பிரசாத்திடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கினார். அந்த பணத்தை பிரசாத் சில நாட்களாக திருப்பி கொடுக்குமாறு கமலாவிடம் கேட்டு வந்தார். கமலா பணத்தை தராமல் இருந்தார்.

    இந்நிலையில் பணத்தை கேட்டு பிரசாத் தனது மாமியார் கமலாவிடம் தகராறு செய்தார். இதில் வாக்குவாதம் முற்றியது. பிரசாத் ஆத்திரமடைந்து தன்னிடம் இருந்த துப்பாக்கியால் கமலாவை சுட்டார். குண்டு பாய்ந்து கமலா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.

    கமலாவை துப்பாக்கியால் சுட்ட பிரசாத்தை பிடித்து கட்டி வைத்தனர்.

    இதையடுத்து சிட்டகபாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் பிரசாத் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×