search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கள்ளக்காதலை கைவிட மறுத்த ஆசிரியையை வெட்டி கொன்ற மாமியார்
    X

    கள்ளக்காதலை கைவிட மறுத்த ஆசிரியையை வெட்டி கொன்ற மாமியார்

    • கள்ளக்காதலை கைவிடுமாறு மாமியார் சுப்பம்மா, வசுந்தராவை எச்சரித்தார். இருப்பினும் வசுந்தரா கள்ளக்காதலை கைவிட மறுத்துள்ளார்.
    • கள்ளக்காதலை கண்டித்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என மாமியாரை மிரட்டியுள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம் ராமாபுரத்தை சேர்ந்தவர் ராஜா. இவருக்கும் குண்டு பள்ளியை சேர்ந்த வசுந்தரா (வயது 30). என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ராஜா உடல்நிலை சரியில்லாமல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    வசுந்தரா அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வசுந்தராவுக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை கவனிக்காமல் அவருடன் ஊர் சுற்றி வந்துள்ளார்.

    கள்ளக்காதலை கைவிடுமாறு அவரது மாமியார் சுப்பம்மா, வசுந்தராவை எச்சரித்தார். இருப்பினும் வசுந்தரா கள்ளக்காதலை கைவிட மறுத்துள்ளார்.

    மேலும் கள்ளக்காதலை கண்டித்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என மாமியாரை மிரட்டியுள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த வசுந்தராவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சுப்பம்மா தனது தம்பி சந்திரபாபுடன் சேர்ந்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து வசுந்தராவை வெட்டி கொலை செய்தார். ஆத்திரம் தீராத அவர் தலையை தனியாக வெட்டி எடுத்தார்.

    இதையடுத்து வசுந்தராவின் துண்டித்த தலையை ஒரு கையிலும் கத்தியை ஒரு கையிலும் பிடித்தபடி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து ஆவேசத்துடன் ராய் சோட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.

    பெண் ஒருவர் ரத்தம் சொட்ட சொட்ட துண்டித்த தலையை கையில் பிடித்தபடி செல்வதை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

    துண்டித்த தலையுடன் போலீஸ் நிலையத்திற்கு வந்ததை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்து சுப்பம்மாவிடம் விசாரணை நடத்தினர்.

    எனது மருமகள் கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஊர் சுற்றி கொண்டு குழந்தைகளை கவனிக்காமல் இருந்தாள். கள்ளக்காதலை கைவிடுமாறு கண்டித்த என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    மருமகளை கொலை செய்து விட்டால் குழந்தைகள் அனாதையாகிவிடும் என நினைத்து இவ்வளவு நாள் பொறுமை காத்து வந்தேன்.

    இனியும் அவளை உயிருடன் விட்டு வைத்தால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து என்னை கொலை செய்து விடுவாள். இதனால் அவளை முந்திக்கொண்டு கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் ரெட்டி வழக்கு பதிவு செய்து சுப்பம்மா, அவரது தம்பி சந்திரபாபு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×