search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முதல் மந்திரி பினராயி விஜயனை பல முறை சந்தித்து பேசியுள்ளேன்- ஸ்வப்னா பரபரப்பு பேட்டி
    X

    பினராய் விஜயன் - ஸ்வப்னா சுரேஷ் 

    முதல் மந்திரி பினராயி விஜயனை பல முறை சந்தித்து பேசியுள்ளேன்- ஸ்வப்னா பரபரப்பு பேட்டி

    • தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா தெரிவித்தார்.
    • ஸ்வப்னாவை தனக்கு தெரியாது என்றும், இது எதிர்கட்சிகளின் திட்டமிட்ட சதி எனவும் பினராயி விஜயன் கூறினார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நடந்த தங்க கடத்தல் விவகாரத்தில் கைதான ஸ்வப்னா தற்போது ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளார்.

    தற்போது வெளியில் இருக்கும் ஸ்வப்னா, தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.

    இதையடுத்து பினராயி விஜயன் பதவி விலக கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

    இதுபற்றி பினராயி விஜயன் கூறும்போது, ஸ்வப்னாவை தனக்கு தெரியாது என்றும், இது எதிர்கட்சிகளின் திட்டமிட்ட சதி எனவும் கூறினார்.

    பினராயி விஜயன் தன்னை தெரியாது என்று கூறியது பற்றி நிருபர்கள் ஸ்வப்னாவிடம் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-

    கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் என்னை தெரியாது என்று கூறியுள்ளார். நான் அவரை திருவனந்தபுரத்தில் உள்ள அரசு அலுவலக வீட்டில் பலமுறை சந்தித்து உள்ளேன்.

    அவரை மட்டுமல்ல அவரது குடும்பத்தினரையும் சந்தித்து பேசியுள்ளேன். தேவைப்படும் போது அதனை ஆதாரத்துடன் தெரிவிப்பேன், என்றார். ஸ்வப்னாவின் இந்த பேட்டி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×