என் மலர்tooltip icon

    இந்தியா

    பணத்தை திருடியதாக சந்தேகம்- சிக்கனில் விஷம் வைத்து மனைவியை கொன்ற கணவன்
    X

    பணத்தை திருடியதாக சந்தேகம்- சிக்கனில் விஷம் வைத்து மனைவியை கொன்ற கணவன்

    • மனைவி ஜோதி தான் பீரோவில் இருந்த பணத்தை திருடி இருப்பார் என எண்ணி அவரிடம் சண்டை போட்டு வந்தார்.
    • கணவர் கொடுத்த சிக்கனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் ஜோதி வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடா மாவட்டம், கோட்டே முக்காலை சேர்ந்தவர் அனுமந்தராவ். இவரது மனைவி ஜோதி.

    அனுமந்த ராவுக்கும், ஜோதிக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர்.

    அனுமந்தராவின் தாய் சித்தேம்மா, சகோதரர் கோடீஸ்வர ராவ் ஆகியோர் ஜோதியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தனர்.

    இந்த நிலையில் அனுமந்த ராவ் பீரோவில் வைத்திருந்த பணம் திடீரென காணாமல் போனது. மனைவி ஜோதி தான் பீரோவில் இருந்த பணத்தை திருடி இருப்பார் என எண்ணி அவரிடம் சண்டை போட்டு வந்தார். ஜோதி பணத்தை எடுக்கவில்லை என கூறினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அனுமந்த ராவ் ஓட்டலில் இருந்து சிக்கன் வறுவலை வாங்கினார். அதில் விஷத்தை கலந்து சாப்பிடுமாறு கொடுத்தார்.

    கணவர் கொடுத்த சிக்கனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் ஜோதி வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தார்.

    இதையடுத்து ஜோதியின் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று ஜோதியிடம் விசாரணை நடத்தினர். கணவர் கொடுத்த சிக்கன் வறுவலை சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ஜோதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    போலீசார் ஜோதியின் கணவர் அனுமந்த ராவ், அவரது தாய் சித்தேம்மா, சகோதரர் கோடீஸ்வர ராவ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×