search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாளை முதல் மல்லிகார்ஜூன கார்கே 2 நாட்கள் இமாச்சல பிரதேசத்தில் பிரசாரம்
    X

    நாளை முதல் மல்லிகார்ஜூன கார்கே 2 நாட்கள் இமாச்சல பிரதேசத்தில் பிரசாரம்

    • பிரியங்கா கடந்த மாதம் 31-ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கினார்.
    • பூபேஷ்பாகல், பிரதாப் சிங் பஜ்வா, சச்சின் பைலட் போன்ற தலைவர்களும் காங்கிரசுக்கு பிரசாரம் செய்தனர்.

    புதுடெல்லி:

    68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக வருகிற 12-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக பா.ஜனதா தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அங்கு பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினர்.

    காங்கிரஸ் கட்சி அங்கு மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஆர்வத்தில் இருக்கிறது. பிரியங்கா கடந்த மாதம் 31-ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கினார். பூபேஷ்பாகல், பிரதாப் சிங் பஜ்வா, சச்சின் பைலட் போன்ற தலைவர்களும் காங்கிரசுக்கு பிரசாரம் செய்தனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    அவர் நாளையும், 9-ந்தேதியும் அங்கு பிரசாரம் மேற்கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்ற பிறகு சட்டசபை தேர்தலை முதல் முறையாக சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இமாச்சல பிரதேசத்தை பொறுத்த வரை எந்த கட்சியும் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது இல்லை. அங்கு பா.ஜனதா-காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி 3-வது அணியாக களம் இறங்குகிறது.

    Next Story
    ×