search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருச்சூர் தொகுதியில் சுரேஷ்கோபிக்கு 20 ஆயிரம் வாக்குகள் மெஜாரிட்டி கிடைக்கும்- பா.ஜ.க நம்பிக்கை
    X

    திருச்சூர் தொகுதியில் சுரேஷ்கோபிக்கு 20 ஆயிரம் வாக்குகள் மெஜாரிட்டி கிடைக்கும்- பா.ஜ.க நம்பிக்கை

    • பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட இவர், தான் இந்த தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என உறுதி அளித்தார்.
    • தொழிலாளர்களின் கணிசமான வாக்குகள் அவருக்கு கிடைத்துள்ளன என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 2-வது கட்ட தேர்தலின் போது கேரளாவில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு எப்படியும் வெற்றி பெற்று தனது வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டும் என பாரதிய ஜனதா திட்டமிட்டு தேர்தல் பணியாற்றியது. இதற்காக முக்கிய பிரமுகர்களை களம் இறக்கியது. இதில் முக்கியமானவர் நடிகர் சுரேஷ்கோபி.

    திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட இவர், தான் இந்த தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என உறுதி அளித்தார். இதனை உறுதி செய்துள்ள பாரதிய ஜனதா நிர்வாகிகள், திருச்சூர் தொகுதியில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சுரேஷ்கோபி வெற்றி பெறுவார் என தெரிவித்துள்ளனர்.

    இந்து வாக்குகள் அனைத்தும் சுரேஷ்கோபி மீது குவிந்துள்ளதாக தெரிவிக்கும் பாரதிய ஜனதா, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் சுரேஷ்கோபிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன. தொழிலாளர்களின் கணிசமான வாக்குகள் அவருக்கு கிடைத்துள்ளன என்றும் அவர்கள் நம்புகின்றனர். திருச்சூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் அவருக்கு 10 ஆயிரம் வாக்குகள் முன்னிலை கிடைக்கும் என்று பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது.

    Next Story
    ×