search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முன்கூட்டியே துவங்கும் தென்மேற்கு பருவமழை
    X

    முன்கூட்டியே துவங்கும் தென்மேற்கு பருவமழை

    • பத்து நாட்களில் பருவக்காற்றுக்கு முந்திய மழை பெய்யும்.
    • வழக்கத்தை விட அதிகளவு மழை பெய்யக்கூடும்.

    கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அரபிக் கடலில் தென்மேற்கு பருவக்காற்று வீச தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இன்னும் பத்து நாட்களில் பருவக்காற்றுக்கு முன்னரே மழை பெய்யத்துவங்கும்.

    இதனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்க வாய்ப்புள்ளாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகளவில் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

    கடந்த ஆண்டு அரபிக் கடலில் நிலவிய காற்று சுழற்சி காரணமாக பருவமழை தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×