என் மலர்tooltip icon

    இந்தியா

    JNU-வில் மோடிக்கு எதிராக கோஷம்: பாம்புகள் நசுக்கப்படுகின்றன- குட்டிகள் அலறுகின்றன- டெல்லி அமைச்சர் சாடல்
    X

    JNU-வில் மோடிக்கு எதிராக கோஷம்: பாம்புகள் நசுக்கப்படுகின்றன- குட்டிகள் அலறுகின்றன- டெல்லி அமைச்சர் சாடல்

    • கிரிமினல்கள், நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர்கள், தற்போது விரக்தியடைந்துள்ளனர்.
    • அவர்களுடைய தீய திட்டம் ஒன்றன்பின் ஒன்றாக தகர்க்கப்பட்டு வருகின்றன.

    2020 டெல்லி வன்முறை சதி வழக்கில் உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது. இதனைத்தொடர்ந்து டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியானது. கோஷம் எழுப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், டெல்லி மாநில அமைச்சர் கபில் மிஸ்ரா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டெல்லி மாநில சட்டத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா கூறுகையில் "பாம்புகள் நசுக்கப்படுகின்றன. பாம்பு குட்டிங்கள் அலறுகின்றன. கிரிமினல்கள், நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர்கள், தற்போது விரக்தியடைந்துள்ளனர்.

    ஏனென்றால், அவர்களுடைய தீய திட்டம் ஒன்றன்பின் ஒன்றாக தகர்க்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற கிரிமினல்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.

    Next Story
    ×