search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: சரத்பவார்
    X

    நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: சரத்பவார்

    • நாட்டில் பா.ஜனதாவுக்கு எதிரான அலை வீசுகிறது.
    • நிதின் கட்காரி கட்சியின் கோணத்தில் சிந்திப்பதில்லை.

    சரத்பவார், பாஜக, பாராளுமன்ற தேர்தல், BJP, Sharad Pawar, parliament election

    மும்பை :

    கர்நாடகாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆளும் பா.ஜனதாவிற்க எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போதைய சூழ்நிலையை பார்க்கும்போது நாட்டில் பா.ஜனதாவுக்கு எதிரான அலை வீசுவதாக நான் கருதுகிறேன். கர்நாடக தேர்தல் முடிவை பார்க்கும்போது மக்கள் மாற்றத்திற்கான மனநிலையில் இருப்பது தெரிகிறது. மக்களின் மனநிலை இதேபோல தொடர்ந்தால் நாட்டில் புதிய மாற்றம் ஏற்படும். இதை கூறுவதற்கு வருங்காலத்தை கணிக்கும் ஜோதிடம் தெரிந்திருக்க அவசியம் இல்லை.

    பாராளுமன்ற தேர்தலுடன் மராட்டிய சட்டமன்ற தேர்தலையும் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று கேட்டதற்கு, "எங்களது கூட்டணி கட்சியை சேர்ந்த பலரும் இதே கருத்தை கொண்டுள்ளனர். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. ஆளும் கட்சியினர் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகளை கவனத்தில் கொள்வார்கள். எனவே சட்டசபை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தி குழப்பத்திற்கு ஆளாக ஆட்சியாளர்கள் கருதமாட்டார்கள். அவர்கள் பாராளுமன்ற தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்" என்று பதிலளித்தார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு ஆட்சியில் பிடித்த மத்திய மந்திரி யார் என்ற கேள்விக்கு பதில் அளித்த சரத்பவார், " சிலரின் சீரிய பணிகளை ஒருபோதும் மறுத்துவிட முடியாது. உதாரணத்திற்கு நிதின் கட்காரி கட்சியின் கோணத்தில் சிந்திப்பதில்லை. நாம் ஒரு பிரச்சினையை அவரிடம் கொண்டு சென்றால் அவர் அதன் முக்கியத்துவத்தை மட்டுமே பார்ப்பார்" என்றார்.

    மராட்டியத்தில் சமீப காலமாக சட்டம்- ஒழுங்கு நிலை மற்றும் வன்முறைகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உள்ளது. ஆனால் ஆளும் கட்சியினரும் சாலையில் இறங்கி இரு மதத்தினரிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் அது நல்ல அறிகுறியாக தெரியவில்லை.

    அவுரங்காபாத்தில் ஒரு பேரணியில் சில நபர்களின் படங்களை பயன்படுத்தியதற்கு, புனேயில் வன்முறை நடக்க வேண்டிய தேவை என்ன உள்ளது. ஆனால் அப்படி செய்யப்படுகிறது.

    சமீபத்தில் அவுரங்காபாத்தில் இதுபோன்ற சம்பவத்தை கேள்விப்பட்டோம். இன்று கோலாப்பூரில் இருந்து ஒரு செய்தியை பார்தேன். மக்கள் சாலைக்கு வருவதும், தொலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பும் ஒரு சிறிய சம்பவத்திற்கு மத சாயம் பூசுவதும் நல்ல அறிகுறியாக தெரியவில்லை. ஆளும் கட்சி இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்கிறது" என்றார்.

    Next Story
    ×