என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் தலைவர் மகளுடன் ராகுலுக்கு விரைவில் திருமணம்?- சமூக வலைதளங்களில் வைரல்
    X

    காங்கிரஸ் தலைவர் மகளுடன் ராகுலுக்கு விரைவில் திருமணம்?- சமூக வலைதளங்களில் வைரல்

    • பிரியங்கா தனது அண்ணணை திருமணம் செய்து கொள்ளும்படி பல முறை கூறியிருந்தார்.
    • ராகுலின் திருமணம் பற்றிய ரகசியம் உடையவில்லை.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல்காந்தி 50 வயதை கடந்து விட்டார். ஆனால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

    தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க தாய் சோனியா முயற்சித்தும் முடியவில்லை. இது ஒரு விவசாயிகளுடன் நடந்த உரையாடலின்போது வெளிப்பட்டது.

    அதாவது சோனிப்பட்டை சேர்ந்த விவசாய பெண்களை தங்கள் இல்லத்துக்கு அழைத்து சோனியா குடும்பம் விருந்து கொடுத்தது. அந்த விருந்து நிகழ்ச்சியில் சோனியாவுடன் ராகுல், பிரியங்கா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

    சாதாரணமாக உரையாடிய அந்த பெண்கள் சோனியாவிடம் 'ராகுலை திருமணம் செய்து கொள்ள சொல்லுங்கள்' என்றனர். அதை கேட்டதும், நான் சொல்லாமல் இல்லை. நீங்கள் பெண்ணை தேடி சொல்லுங்கள் என்றார்.

    அப்போது இதுபற்றி பதிலளித்த ராகுல் 'அது நடக்கும்' என்றார். பிரியங்காவும் தனது அண்ணணை திருமணம் செய்து கொள்ளும்படி பல முறை கூறியிருந்தார். ஆனாலும் ராகுலின் திருமணம் பற்றிய ரகசியம் உடையவில்லை.

    உண்மையிலேயே அவர் திருமணம் செய்து கொள்வாரா? பிரம்மச்சாரியாகவே இருந்து விடுவாரா? ஒரு வேளை திருமணம் செய்தால் மணப்பெண் யார்? என்ற கேள்வி கட்சியினர் மட்டுமின்றி எல்லா தரப்பிலும் இருக்கிறது.

    இந்த சூழ்நிலையில் ராகுல் திருமணம் செய்து கொள்ளப்போகும் தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

    மணப்பெண் பெயர் பிரணிதி ஷிண்டே. மகாராஷ்ட்ரா மாநில முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேவின் மகள்.

    மகாராஷ்ட்ராவில் தேர்தல் முடிந்து யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி. ராகுல்-பிரணிதி திருமணம் உறுதி என சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

    பிரணிதி தற்போது எம்.பி.யாக இருக்கிறார். ராகுல் நடைபயணத்தின்போது இருவரும் கைகளை பற்றியபடி நடந்து சென்ற புகைப்படம். அதன்பிறகு பாராளுமன்ற வளாகத்தில் இருவரும் பேசிக்கொண்டு சென்ற படம் ஆகியவை வைரலாக பரவுகிறது.

    இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருவதும் காங்கிரசார் தான். விரைவில் ராகுல் புது மாப்பிள்ளை ஆகப்போகிறார் என்ற தகவல் காங்கிரசாரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. பலர் வாழ்த்து சொல்லவும் தொடங்கி விட்டார்கள்.

    Next Story
    ×