என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா

ராகுல் காந்தி
கிழிந்த ஆடையில் உள்ள ஏழை குழந்தைகளை தெரியவில்லையா? - ராகுல் காந்தி ஆவேசம்

- ஊடகங்கள் தனது டீ-ஷர்ட் குறித்து கேள்வி எழுப்புவது ஏன் என்றார் ராகுல் காந்தி.
- விவசாயிகளின் கிழிந்த ஆடை குறித்து அவை ஏன் கேள்வி எழுப்புவதில்லை என்றார்.
லக்னோ:
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3, 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அரியானா, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்கள் வழியாக தற்போது உத்தர பிரதேசத்தைச் சென்றடைந்துள்ளது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் பேசிய ராகுல் காந்தி, தனது டீ -ஷர்ட் குறித்து சர்ச்சைகள் பரப்புவதாக தெரிவித்தார்.
குளிர்காலத்தில் ஏழை குழந்தைகளும், விவசாயிகளும், கூலி தொழிலாளிகளும் போர்வைகூட இல்லாமல், கிழிந்த ஆடையுடன் இருக்கின்றனர். பிரதமர் மோடியின் அரசு மக்கள் குறித்து சிந்திப்பதில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதில்லை என குற்றம்சாட்டினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
