search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கிழிந்த ஆடையில் உள்ள ஏழை குழந்தைகளை தெரியவில்லையா? - ராகுல் காந்தி ஆவேசம்
    X

    ராகுல் காந்தி

    கிழிந்த ஆடையில் உள்ள ஏழை குழந்தைகளை தெரியவில்லையா? - ராகுல் காந்தி ஆவேசம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஊடகங்கள் தனது டீ-ஷர்ட் குறித்து கேள்வி எழுப்புவது ஏன் என்றார் ராகுல் காந்தி.
    • விவசாயிகளின் கிழிந்த ஆடை குறித்து அவை ஏன் கேள்வி எழுப்புவதில்லை என்றார்.

    லக்னோ:

    காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3, 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அரியானா, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்கள் வழியாக தற்போது உத்தர பிரதேசத்தைச் சென்றடைந்துள்ளது.

    இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் பேசிய ராகுல் காந்தி, தனது டீ -ஷர்ட் குறித்து சர்ச்சைகள் பரப்புவதாக தெரிவித்தார்.

    குளிர்காலத்தில் ஏழை குழந்தைகளும், விவசாயிகளும், கூலி தொழிலாளிகளும் போர்வைகூட இல்லாமல், கிழிந்த ஆடையுடன் இருக்கின்றனர். பிரதமர் மோடியின் அரசு மக்கள் குறித்து சிந்திப்பதில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதில்லை என குற்றம்சாட்டினார்.

    Next Story
    ×