என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவில் தனியார் பேருந்தில் தீவிபத்து- 17 பேர் உயிரிழப்பு
    X

    கர்நாடகாவில் தனியார் பேருந்தில் தீவிபத்து- 17 பேர் உயிரிழப்பு

    • லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
    • மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    கர்நாடகா மாநிலத்தில் சொகுசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.

    பெங்களூருவில் இருந்து கோகர்ணா நோக்கி தனியார் பேருந்து சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கோர்லத்து கிராமம் அருகே சென்ற போது லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் தனியார் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

    இதில் படுக்கை வசதி கொண்ட பேருந்தில் பயணித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.




    Next Story
    ×