என் மலர்
இந்தியா

பாராளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு பேசுகிறார்
- பழைய கட்டிடத்தில் இன்று சிறப்பு கூட்டத்தொடர் தொடங்குகிறது
- 22-ந்தேதி வரை ஐந்து நாட்கள் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற இருக்கிறது.
முதல்நாளான இன்று 75 ஆண்டுகால பாராளுமன்றத்தின் சாதனை, நினைவுகள் போன்ற முக்கியம்சங்கள் குறித்து விவாதம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்றை கூட்டத்தில் காலை 11 மணிக்கு மக்களவையில் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாராளுமன்ற அவை புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படுகிறது. இந்த சிறப்பு கூட்டத்தொடரின்போது நான்கு மசோதாக்களை நிறைவேற்ற பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
Next Story






