என் மலர்tooltip icon

    இந்தியா

    பொங்கல் விழாவில் விளைச்சலை குறிக்கும் திருக்குறளை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் மோடி
    X

    பொங்கல் விழாவில் விளைச்சலை குறிக்கும் திருக்குறளை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் மோடி

    • டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
    • அப்போது அவர், அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என தமிழில் கூறினார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது, அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார். பிரதமர் மோடி பேசியதாவது:

    விளைவித்த நெல்மணிகளை பொங்கலின் போது இறைவனுக்கு படைப்பது பாரம்பரியமானது. நமது ஒவ்வொரு பண்டிகைகளும் விவசாயிகளுடன் தொடர்புடையவை. தமிழ் பெண்கள் வீடுகளில் போடும் வண்ணக் கோலங்களில் பெரிய மகத்துவம் மறைந்துள்ளது. பல புள்ளிகள் இணைந்து கோலமாவது போல் பல தரப்பினர் இணைந்தால் நாடு அழகாகிறது.

    பலதரப்பட்ட மக்களை இணைக்கும் பணியைத் தான் காசி தமிழ்ச்சங்கம் செய்கின்றது. சிறுதானியங்களை கொண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இளைஞர்கள் உருவாக்குகின்றனர்.

    2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க உறுதி பூண்டுள்ளோம் என தெரிவித்தார்.

    தள்ளா விளையும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு என்ற திருக்குறளை பிரதமர் மோடி தனது பேச்சின் இடையே மேற்கோள் காட்டினார்.

    Next Story
    ×