என் மலர்
இந்தியா

சுயசார்பு உற்பத்தியை கொண்டாடுங்கள்: பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து
- தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை தொடர்ந்து மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
சுயசார்பு உற்பத்தியை கொண்டாடுங்கள்.
140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பை கொண்டாடுவோம்.
தீபாவளி நாளில் இந்தியர்களின் படைப்பாற்றலைக் கொண்டாடுவோம்
இந்தியப் பொருட்களை வாங்குவதை உறுதி செய்யுங்கள்
நீங்கள் வாங்கியதை சமூக ஊடகங்களில் பகிருங்கள். இப்படி செய்வதன் மூலம் மற்றவர்களும் உள்நாட்டு பொருட்களை வாங்க ஊக்குவியுங்கள் என பதிவிட்டுள்ளார்.
Next Story






