வரலாற்று சிறப்பு முடிவுகளை எடுக்கக்கூடிய பாராளுமன்ற கூட்டம்: பிரதமர் மோடி பேச்சு

அதிக நேரம் விவாதத்தில் பங்கேற்று கூட்டத்தை சிறப்பானதாக மாற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள்முக்கியம்சம் என்னவென்றால் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் இருந்து பயணத்தை தொடரப் போகின்றோம்
வரலாற்று சிறப்பு முடிவுகளை எடுக்கக்கூடிய பாராளுமன்ற கூட்டம்: பிரதமர் மோடி பேச்சு
Published on

இந்திய பாராளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது. முன்னதாக பிரதமர் மோடி பாராளுமன்ற வளாகத்தில் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

1. சந்திரயான்-3 நிலவில் நமது மூவர்ணக்கொடியை பறக்க விட்டிருக்கிறது

2. சிவசக்தி புள்ளி புதிய உற்சாகத்திற்கு வழிகோரியுள்ளது

3. உலகம் முழுவதும் இதுபோன்று வெற்றி கிடைக்கும்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. இத்தகைய செயல்பாடுகளில் பல வெற்றிகள், செயல்பாடுகள் நமது நாட்டின் வாசல்களில் வந்து நிற்கின்றன.

4. ஜி20 கூட்டத்திற்கு அனைத்து தலைவர்களையும், அழைத்து கூட்டத்தை நடத்தி கூட்டாட்சி தத்துவத்தை வெளிப்படுத்திய விதம், தெற்கு உலகின் ஒரு குரலாக மாறினோம். ஆப்பிரிக்க யூனியனுக்கு உறுப்பினர் அந்தஸ்து வழங்கினோம். அனைவருடைய ஒத்துழைப்புடன் பிரகடனம் வெளியிட்டிருக்கிறோம். இது உலகிற்கு இந்தியா ஒரு செய்தியை தெரிவித்துள்ளது.

5. நேற்று மிகப்பெரிய மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

6. இந்த நேரத்தில் புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு நாம் செல்ல இருக்கிறோம். இந்த விசயங்களை தெரிவிப்பதற்காகத்தான் இந்த கூட்டம் கூட்டப்படுகிறது. இது சிறிய காலக்கட்டத்திற்கான கூட்டம்.

7. இது வரலாற்று சிறப்பு முடிவுகளை எடுக்கக்கூடிய பாராளுமன்ற கூட்டம்

8. முக்கியம்சம் என்னவென்றால் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் இருந்து பயணத்தை தொடரப் போகின்றோம்.

9. அதிக நேரம் விவாதத்தில் பங்கேற்று கூட்டத்தை சிறப்பானதாக மாற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

10. வளர்ச்சி அடைந்த நாடாக நமது பாரதத்தை மாற்றுவதே நமது கடமை

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com