என் மலர்
இந்தியா

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
- இந்தியாவை பாதுகாப்பில் தன்னிறைவு பெறச் செய்வதற்கும் நமது ஆயுதப் படைகளை வலுப்படுத்துவதற்கும் ராஜ்நாத் சிங் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை.
- ராஜ்நாத் சிங் நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.
பிரதமர் மோடி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் தனது இயல்பான கடின உழைப்பால் தன்னை வேறுபடுத்திக் கொண்டவர். இந்தியாவை பாதுகாப்பில் தன்னிறைவு பெறச் செய்வதற்கும் நமது ஆயுதப் படைகளை வலுப்படுத்துவதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை.
ராஜ்நாத் சிங் நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






