search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜனநாயகத்திற்கு இன்று கருப்பு நாள் - ராகுல் காந்தி மனு நிராகரிப்பு குறித்து மெகபூபா முப்தி கண்டனம்
    X

    மெகபூபா முப்தி

    ஜனநாயகத்திற்கு இன்று கருப்பு நாள் - ராகுல் காந்தி மனு நிராகரிப்பு குறித்து மெகபூபா முப்தி கண்டனம்

    • பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    • நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல் முறையீடு செய்த மனுவும் இன்று சூரத் கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டது.

    ஸ்ரீநகர்:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலத்தின் கோலாரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களின் பெயர்களுக்கு பின்னேயும் மோடி என வந்தது எப்படி? என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் மாநில முன்னாள் மந்திரி மற்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான புர்னேஷ் மோடி, சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்ததில், ராகுல் குற்றவாளி என தீர்மானித்து, 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா கடந்த மாதம் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பால் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிபோனது.

    இதற்கிடையே, நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி, சூரத் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவும் இன்று நிராகரிக்கப்பட்டது.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் மேல் முறையீடு மனு நிராகரிக்கப்பட்டது குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி கூறுகையில், ஜனநாயகத்திற்கு இன்று கருப்பு நாள். நீதித்துறை என்பது மக்களின் கடைசி நம்பிக்கை, ஆனால் தாமதமான அதன் பங்கு கேள்விகளை எழுப்பியுள்ளது. இங்குள்ள அரசியல் அமைப்பை ஒழித்துவிட்டு இந்த தேசத்தை அவர்கள் கொள்கைப்படி வழிநடத்த பா.ஜ.க. நினைக்கிறது என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×