search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரசியலமைப்பு எங்களுக்கு கீதை, பைபிள், குரான் போன்றது: நிதின் கட்காரி
    X

    அரசியலமைப்பு எங்களுக்கு கீதை, பைபிள், குரான் போன்றது: நிதின் கட்காரி

    • பா.ஜனதா மூன்று முக்கிய பணிகளை வரையறுத்துள்ளது.
    • இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது.

    நாக்பூர் :

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது:-

    பா.ஜனதா மூன்று முக்கிய பணிகளை வரையறுத்துள்ளது. அதில் முதலாவது தேசியவாதம். இது எங்கள் கட்சியின் ஆன்மா. நாட்டின் எல்லை பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் நாடு பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வலுபெற வேண்டும். இரண்டாவது நல்லாட்சி மற்றும் வளர்ச்சியுடன் முன்னேறி சுயசார்புடைய நாடாக மாற வேண்டும் என்பது பா.ஜனதாவின் விருப்பம்.

    அதேபோல சமூக, பொருளாதார மற்றும் கல்வியில் பின்தங்கிய மற்றும் தலித்துகளுக்கு சேவை செய்வதே கட்சியின் 3-வது நோக்கம்.இந்த நாடு தனி நபருக்கோ, ஒரு சமூகத்திற்கோ, ஒரு மதத்திற்கோ சொந்தமானது அல்ல. இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது. நீதித்துறை, நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் ஊடகம் ஆகிய 4 தூண்களில் நிற்கும் ஜனநாயகத்தின் தாய் நாங்கள்.

    எங்களுக்கு அரசியலமைப்பு என்பது பகவத் கீதை, பைபிள் மற்றும் குரான் போன்றதுபோன்றது. அதன் கொள்கைப்படி நமது சமுதாயத்தை வடிவமைத்தால், அனைவரும் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்க முடியும். ஒவ்வொரு தரப்பினரையும் மகிழ்ச்சியடைய செய்ய நாங்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×