search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மோடி மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டார்: நிதிஷ் குமார்
    X

    மோடி மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டார்: நிதிஷ் குமார்

    • 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும்.
    • நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளுக்கு புத்துயிரூட்டுவேன்.

    8-வது முறையாக பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ்குமார் நேற்று மீண்டும் பதவியேற்றார். பதவி ஏற்புக்கு பிறகு, கவர்னர் மாளிகையில் நிதிஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிடாமல் அவரை கடுமையாக விமர்சித்தார்.அவர் கூறியதாவது:-

    எதிர்காலம் பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால், 2014-ம் ஆண்டு பதவிக்கு வந்தவர் (மோடி), 2024-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டார்.

    நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளுக்கு புத்துயிரூட்டுவேன். எதிர்க்கட்சிகளே இருக்காது என்று சொன்னவர்கள், நிதிஷ்குமார் இப்போது எதிர்க்கட்சியில் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும்.

    2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுடன் சேர்ந்து போட்டியிட்டபோது, எங்கள் கட்சியின் பலம் குறைந்தது. ஆனால், 2015-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் சேர்ந்து போட்டியிட்டபோது, எங்கள் பலம் நன்றாக இருந்தது.

    கடந்த இரண்டரை மாதங்களில் நடந்த அரசியல் நிகழ்வுகள் அனைவருக்கும் தெரியும். உரிய நேரத்தில் உண்மைகளை அம்பலப்படுத்துவேன். விரைவில் சட்டசபையை கூட்டுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×