என் மலர்
இந்தியா
மக்களவை தேர்தல்: 102 தொகுதிகளில் 5 மணி நிலவரப்படி 59.7 சதவீத வாக்குகள் பதிவு
- வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.
- தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் இன்று (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.
அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.
அதன்படி, வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், பொது மக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
Live Updates
- 19 April 2024 12:17 PM IST
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு வாக்களித்தார்.
#WATCH | Comedian & Actor Yogi Babu casts his vote at a polling booth in Chennai, Tamil Nadu#LokSabhaElections2024 pic.twitter.com/h0Vbi7BKUZ
— ANI (@ANI) April 19, 2024 - 19 April 2024 12:07 PM IST
விழுப்புரத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் 102 வயது மூதாட்டி ஜெய்துன்பீ தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
- 19 April 2024 12:03 PM IST
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகிட் வாக்களித்தார்.
- 19 April 2024 11:56 AM IST
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இயக்குநர் ஹரி தனது மனைவி பிரீத்தாவுடன் வந்து வாக்களித்தார்.
- 19 April 2024 11:49 AM IST
மக்களவை தேர்தல் - காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 23.72% வாக்குகள் பதிவாகியுள்ளன
- 19 April 2024 11:48 AM IST
சிவகங்கை மாவட்டம் சிதூரணி. கல்லூரணி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு. 2 கிராமங்களை சேர்ந்த சுமார் 1000 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை.
- 19 April 2024 11:40 AM IST
திருச்சியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த நளினி என்ற பெண் முதல் முறையாக வாக்களித்தார்.














