என் மலர்tooltip icon

    இந்தியா

    Fact Check..பயங்கரவாத தாக்குதலால் 7 நாளில் பிரிந்த தம்பதி- கடைசியாக எடுத்த வீடியோ வைரல்
    X

    Fact Check..பயங்கரவாத தாக்குதலால் 7 நாளில் பிரிந்த தம்பதி- கடைசியாக எடுத்த வீடியோ வைரல்

    • அரியானாவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் நர்வால் உயிரிழந்தார்.
    • 7 நாட்களுக்கு முன்புதான் இவருக்கு திருமணமானது.

    காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலில் அரியானாவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் நர்வால் என்பவரும் உயிரிழந்தார். 7 நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணமான நிலையில், தேனிலவு கொண்டாட ஜம்மு காஷ்மீர் வந்தபோது மனைவி கண்முன்னே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டின் கணவனை இழந்த மனைவி அவர் அருகே செய்வதறியாது அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் உலுக்கியது.

    இந்நிலையில் பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னர் இருவரும் ஜோடியாக ஒரு ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். இருவரும் ஹீரோ ஹீரோயின் போல நடனமாடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் அது போலியான வீடியோ என்று அந்த வீடியோவில் இருந்த உண்மையான தம்பதி வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.



    Next Story
    ×