என் மலர்tooltip icon

    இந்தியா

    ம.பி.யில் 6 குழந்தைகள் உயிரிழப்பு: கேரளாவில் கோல்ட்ரிஃப் இருமல் மருந்துக்கு தடை
    X

    ம.பி.யில் 6 குழந்தைகள் உயிரிழப்பு: கேரளாவில் 'கோல்ட்ரிஃப்' இருமல் மருந்துக்கு தடை

    • ஸ்ரீசென் பாா்மா என்ற நிறுவனத்தில் 'கோல்ட் ரிப்' மருந்து தயாரிக்கப்பட்டது.
    • மத்திய பிரதேசம், தமிழ்நாட்டில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது.

    மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 முதல் 7 வயது வரை உள்ள 6 குழந்தைகள் கடந்த 15 நாட்களுக்குள் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன. திடீரென ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு அதற்கு காரணம் என்பது தெரியவந்தது.

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 'கோல்ட் ரிப்' மருந்து மற்றும் வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட நெக்ஸ்ட்ரோ டிஎஸ் மருந்து ஆகிய இரு வேறு இருமல் மருந்துகளை அந்தக் குழந்தைகள் உட்கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.

    அந்தக் குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைசால் எனப்படும் ரசாயன வேதிப்பொருள் இருந்ததாக அறிக்கை வெளியானது. பெயிண்ட், மை போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படும் அந்த ரசாயனம், சம்பந்தப்பட்ட இருமல் மருந்துகளில் கலந்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.

    இதையடுத்து மத்திய பிரதேசம், தமிழ்நாட்டில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், கோல்ட்ரிப் இருமல் மருந்தை பயன்படுத்த கேரள மாநில அரசு.தடை விதித்துள்ளது.

    Next Story
    ×