search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஓட்டு கேட்டு வந்த எம்.பி.-க்கு கத்திக் குத்து.. தெலுங்கானாவில் பரபரப்பு
    X

    ஓட்டு கேட்டு வந்த எம்.பி.-க்கு கத்திக் குத்து.. தெலுங்கானாவில் பரபரப்பு

    • தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாத இறுதியில் நடைபெறுகிறது.
    • பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் கோத்தா பிரபாகர் ரெட்டி வாக்கு சேகரித்து வந்தார்.

    தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி சார்பில் துபாக்கா தொகுதியில் போட்டியிடும் எம்.பி. கோத்தா பிரபாகர் ரெட்டி சித்திப்பெட் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் அங்கமாக மாநிலத்தில் உள்ள பாஸ்டர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, அவரை நோக்கி வந்த மர்ம நபர் அவரிடம் கை குலுக்குவது போன்றே அருகில் சென்றார். பிறகு, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பிரபாகர் ரெட்டியின் வயிற்றில் குத்தினார். கத்தியால் குத்திய மர்ம நபரை பி.ஆர்.எஸ். தொண்டர்கள் மடக்கி பிடித்து, அங்கேயே வைத்து அடித்தனர். பிறகு மர்ம நபரை காவல் துறை கைது செய்தது.

    கத்தியால் குத்தப்பட்டதும், பிரபாகர் ரெட்டி கஜ்வெல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

    "திடீரென தாக்குதல் நடத்திய மர்ம நபரை கைது செய்திருக்கிறோம். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது," என சித்திப்பெட் காவல் துறை ஆணையர் ஸ்வேதா தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×