என் மலர்tooltip icon

    இந்தியா

    கேபினட் கூட்டத்தை புறக்கணித்த சித்தராமையா
    X

    கேபினட் கூட்டத்தை புறக்கணித்த சித்தராமையா

    • முடா முறைகேடு தொடர்பாக சித்தராமையா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.
    • விசாரணை நடத்த ஏன் உத்தரவிடக்கூடாது? பதில் அளிக்கும்படி கவர்னர் நோட்டீஸ்.

    மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் (MUDA) மனைகள் ஒதுக்கியது தொடர்பான மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என அம்மாநில பாஜக-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இருந்த போதிலும் சித்தராமையா குற்றச்சாட்டை மறுத்து வருகிறார்.

    இதற்கிடையே முடா முறைகேடு தொடர்பாக உங்கள் மீது விசாரணை நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது?. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி கர்நாடக மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    இந்த நோட்டீஸ் தொடர்பாக ஆலோசனை நடத்த மந்திரிசபை கூட்டம் (Cabinet meeting) இன்று கூடியது. ஆனால் இந்த கூட்டத்தில் கர்நாடக மாநில முதல் சித்தராமையா கலந்து கொள்ளவில்லை.

    துணை முதல்வரான டி.கே. சிவக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    ஆளுநர் நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக ஆலோசிக்க திட்டமிட்டது. மந்திரிகள் சித்தராமையா (முதல்வர்) இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தனர். இதனால் மந்திரிசபை கூட்டம் சித்தராமையா இல்லாமல் நடைபெற்றது என கர்நாடக மாநில மந்திரி பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

    ஆளுநர் அனுப்பிய நோட்டீஸ் தொடர்பான ஆலோசனையில் முதலமைச்சர் இருக்கக் கூடாது என்பதால், கலந்து கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுகொண்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×