என் மலர்tooltip icon

    இந்தியா

    காலக்கெடுவை விட இந்தியாவின் நலனே முக்கியம்: வர்த்தக ஒப்பந்தம் குறித்து மந்திரி பியூஷ் கோயல்
    X

    காலக்கெடுவை விட இந்தியாவின் நலனே முக்கியம்: வர்த்தக ஒப்பந்தம் குறித்து மந்திரி பியூஷ் கோயல்

    • பரஸ்பரம் நலன் பயக்கும் வகையில் இருந்தால் மட்டுமே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகும்.
    • இரு நாடுகளும் பலன்பெறும் வகையில் முடிவுகள் இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என்றார்.

    புதுடெல்லி:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என தெரிவித்திருந்தார். ஆனாலும், இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இழுபறி நீடித்து வருகிறது.

    அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப் போவதாக டிரம்ப் தெரிவித்தார். வரும் 9-ம் தேதி வரை வரி விதிப்பை நிறுத்திவைப்பதாக அவர் அறிவித்திருந்தார். இந்தக் காலக்கெடு நெருங்குவதால் பேச்சுவார்த்தை அதற்குள் முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில், மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியதாவது:

    வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், இந்தியாவின் நலனை உறுதிசெய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

    நாட்டின் நலனே எப்போதும் முக்கியம். அதனை மனதில் வைத்துக் கொண்டு, சிறந்த ஒப்பந்தத்தை தயார் செய்தால் வளர்ந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்தியா தயாராக உள்ளது.

    பரஸ்பரம் நலன் பயக்கும் வகையில் இருந்தால் மட்டுமே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகும். குறிப்பிட்ட காலக்கெடு அல்லது அழுத்தங்களின் அடிப்படையில் வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட மாட்டோம்.

    நன்கு முதிர்ச்சி அடைந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, நாட்டின் நலன் உறுதி செய்யப்படும்போது மட்டுமே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வோம் என தெரிவித்தார்.

    Next Story
    ×