என் மலர்tooltip icon

    இந்தியா

    வறுமையை ஒழித்தல், வளர்ந்த நாடாக மாறுதல்: இதுதான் இந்தியாவின் இலக்கு..! பிரதமர் மோடி
    X

    வறுமையை ஒழித்தல், வளர்ந்த நாடாக மாறுதல்: இதுதான் இந்தியாவின் இலக்கு..! பிரதமர் மோடி

    • பிரிவினைக்குப் பிறகு உருவான நாடு இந்தியா மீதான வெறுப்பில் வாழ்கிறது.
    • பாகிஸ்தானின் ஒரே நோக்கம் இந்தியாவுடனான பகைமை மற்றும் பாரதத்திற்கு தீங்கு விளைவிக்க வேண்டும் என்பதே.

    பிரதமர் மோடி இன்று குஜராத் மாநிலம் சென்றிருந்தார். அங்குள்ள தாஹோத்தில் நடைபெற்று பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    * கடந்த 2014ஆம் ஆண்டு இதே தினத்தில் (மே26- 2014) ஆம் ஆண்டு முதல் முறையாக பிரதமரானேன்.

    * நாடு முழுவதும் 70 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இப்போது இயக்கப்படுகின்றன.

    * மக்கள் ஹோலி, தீபாவளி மற்றும் வினாயகர் பூஜை போன்ற பண்டிகைகளின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

    * நமது நாட்டின் முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்தும் இந்தியாவில் இங்கேயே செய்யப்பட வேண்டும்

    * பின்தங்கிய பகுதிகளுக்கு வளர்ச்சியை எடுத்துச் செல்வதே எங்கள் அரசாங்கத்தின் கொள்கை

    * நமது சகோதரிகளின் குங்குமத்தை அகற்ற யாராவது துணிந்தால், அவர்களின் முடிவு நெருங்கிவிட்டது.

    * பிரிவினைக்குப் பிறகு உருவான நாடு இந்தியா மீதான வெறுப்பில் வாழ்கிறது

    * பாகிஸ்தானின் ஒரே நோக்கம் இந்தியாவுடனான பகைமை மற்றும் பாரதத்திற்கு தீங்கு விளைவிக்க வேண்டும் என்பதே.

    * இந்தியாவின் இலக்கு வறுமையை ஒழித்தல், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துதல் மற்றும் வளர்ந்த நாடாக மாறுதல்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    Next Story
    ×