search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொட்டும் மழையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த ஐயப்ப பக்தர்கள்
    X

    கொட்டும் மழையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த ஐயப்ப பக்தர்கள்

    • ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செயய அனுமதிக்கப்படுகின்றனர்.
    • விடுமுறை நாட்கள் மட்டுமின்றி சபரிமலையில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    திருவனந்தபுரம்:

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. மறுநாள் (கார்த்திகை 1-ந்தேதி) முதல் விரதமிருக்கும் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செயய அனுமதிக்கப்படுகின்றனர். தினமும் 60ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் விடுமுறை நாட்கள் மட்டுமின்றி சபரிமலையில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருவதால், சாமி தரிசனம் செய்ய வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய தேவசம்போர்டு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் சபரிமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. கனமழையை பொருட்படுத்தாமல் ஐயப்ப பக்தர்கள் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தார்கள். இன்றும் அவ்வப்போது மழை பெய்தபடி இருந்தது. இருந்தபோதிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தபடி இருந்தனர்.

    Next Story
    ×