என் மலர்
இந்தியா

அசாமில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
- உத்தர பிரதேசத்தில் இருந்து வந்த லாரியில் ரகசிய அறை இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
- 4.899 கி.கி. மார்பின் போதைப்பொருளின் சந்தை மதிப்பு 5 கோடி ரூபாய் ஆகும்.
அசாம் மாநிலம் கார்பி அங்லாங்க் மாவட்டம் அருகே உத்தர பிரதேசத்தில் இருந்து வந்த லாரியில் இருந்து 4.899 கி.கி. மார்பின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் ஆகும்.
உத்தர பிரதேசத்தில் இருந்து அசாம் மாநிலம் நோக்கி வந்த லாரி ஒன்றை போலீசார் கத்காதி பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் வழிமறித்து சோதனை நடத்தினர். அப்போது லாரியில் ரகசிய அறை ஒன்று இருந்ததை கண்டுபிடித்தனர்.
அதை திறந்து பார்த்தபோது, ஏழு பாக்கெட்டுகளில் 4.899 கி.கி. மார்பின் போதைப்பொருள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதை பறிமுதல் செய்ததுடன், ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






