என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தலுக்காக டிராமா செய்கிறார் பிரதமர் மோடி: ராகுல் காந்தி விமர்சனம்
    X

    தேர்தலுக்காக டிராமா செய்கிறார் பிரதமர் மோடி: ராகுல் காந்தி விமர்சனம்

    • தேர்தல் வரைக்கும் நீங்கள் கேட்கும் எல்லாத்தையும் செய்வதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.
    • ஆனால் தேர்தலுக்குப் பிறகு பீகாருக்கு வரவும் மாட்டார். உங்களுடைய பேச்சைக் கேட்கவும் மாட்டார்.

    பீகார் மாநிலத்தின் முதற்கட்ட தேர்தல் வருகிற வியாழக்கிழமை 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித் ஷா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்தியா கூட்டணியின் ராகுல் காந்தி பெகுசாராய் என்ற இடத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தேர்தலுக்குப் பின்னர் மக்களின் பேச்சை பிரதமர் மோடி கேட்கமாட்டார் என விமர்சனம் செய்தார்.

    இது தொடர்பாக ராகுல் காந்தி பேசியதாவது:-

    நரேந்திர மோடி உரை நிகழ்த்துகிறார். பீகாருக்கு வருகிறார். வாக்குறுதிகள் தருகிறார். தேர்தல் வரைக்கும் நீங்கள் கேட்கும் எல்லாத்தையும் செய்வதாக சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் தேர்தலுக்குப் பிறகு பீகாருக்கு வரவும் மாட்டார். உங்களுடைய பேச்சைக் கேட்கவும் மாட்டார். வெறுமன வெளியேறிவிடுவார்.

    நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதை இப்பொழுதே செய்யுங்கள் என நான் சொல்கிறேன். பிரதமர் மோடி வாக்குகளுக்காக எது வேண்டுமானாலும் செய்வார். நீங்கள் யோகா செய்யச் சொன்னால் சில ஆசனங்களை அவர் செய்வார். ஆனால் தேர்தலுக்கு பிறகு, அதானி மற்றும் அம்பானியால் அனைத்து பாடல்கள், நடனங்கள் நடத்தப்படும். இந்த எல்லா விசயங்களும் ஜஸ்ட் டிராமாதான்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×