search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பணமோசடி வழக்கு - பரூக் அப்துல்லா மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
    X

    பரூக் அப்துல்லா

    பணமோசடி வழக்கு - பரூக் அப்துல்லா மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

    • ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
    • இதில் பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்தியது.

    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா. இவர் 2001 முதல் 2011 வரை ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தார். அப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.112 கோடி அளவிற்கு மோசடி செய்ததாக பரூக் அப்துல்லா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, இந்த வழக்கில் பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே கையகப்படுத்தியது.

    இந்நிலையில், ஸ்ரீநகர் கோர்ட்டில் பரூக் அப்துல்லாவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அமலாக்க இயக்குனரகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

    இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பணமோசடி வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 27-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    பரூக் அப்துல்லா ஏற்கனவே கடந்த மே மாதம் 31-ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×