என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மத்திய ரெயில்வேயில் 4 மாதத்தில் மட்டும் ஓசிப்பயணம் செய்தவர்களிடம் ரூ.126 கோடி வசூல்
- 4 மாதங்களில் ரெயிலில் டிக்கெட் இல்லாமல் ஓசி பயணம் செய்த 18 லட்சத்து 37 ஆயிரம் சிக்கினர்.
- கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் 180 சதவீதம் அதிக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மும்பை :
மத்திய ரெயில்வேயில் பயணிகள் டிக்கெட் இன்றி பயணம் செய்வதை தடுக்க ரெயில் நிலையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. ரெயில் நிலையங்கள் மட்டுமின்றி டிக்கெட் பரிசோதகர்கள் மின்சார ரெயில்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் ரெயிலில் டிக்கெட் இல்லாமல் ஓசி பயணம் செய்த 18 லட்சத்து 37 ஆயிரம் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.126.18 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இதில் ஜூலை மாதம் மட்டும் ஓசிப்பயணம் செய்த 3.27 லட்சம் பேரிடம் இருந்து ரூ.20 கோடியே 66 லட்சம் கிடைத்து உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதத்தில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 7½ லட்சம் பேர் பிடிபட்டு, அவர்களிடம் இருந்து ரூ.45.06 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு இருந்தது. எனவே கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் 180 சதவீதம் அதிக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்