என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஆந்திராவில் லாரி மீது கார் மோதி 5 பேர் பலி
- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது.
- இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், மதனப்பள்ளி அடுத்த கொல்ல பள்ளியை சேர்ந்தவர் காளிதாஸ். அதே பகுதியை சேர்ந்தவர் சந்திரா. இவர்கள் 2 பேரும் இன்று அதிகாலை சிக்கல பைலு பால் பண்ணைக்கு சென்றுவிட்டு பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.
மதனப்பள்ளி புறநகரில் உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
காரில் வந்தவர்கள் தப்பி செல்வதற்காக காரை வேகமாக ஓட்டினர். அப்போது எதிரே வந்த லாரி மீது கார் பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து மதனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டு இருந்த 3 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காரில் வந்தவர்கள் மதனப்பள்ளி அடுத்த ராமராவ் காலனியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
இதேபோல் காக்கிநாடா பதிப்பாடு நெடுஞ்சாலையில் தாசரி பிரசாத் என்பவர் லாரியை ஓட்டி வந்தார். அப்போது லாரி பஞ்சரானது. லாரியை நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தினார். அவருக்கு உதவியாக தாசரி கிஷோர், நாகையா, கிளீனர் ராஜு ஆகியோர் லாரியின் டயரை கழற்றிக்கொண்டு இருந்தனர்.
அப்போது வேகமாக வந்த ஆந்திர மாநில அரசு பஸ் லாரி டயரை மாற்றிக்கொண்டு இருந்தவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்