என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பீகாரில் புதிய தேர்தல் களத்தை உருவாக்கிய பா.ஜனதா: நிதிஷ் குமார் கட்சியை விட ஒரு இடம் அதிகம்
- கடந்த முறை பா.ஜனதா- ஐக்கிய ஜனதா தளம் தலா 17 இடங்களில் போட்டி.
- இந்த முறை பா.ஜனதா அதே 17 இடங்களில் போட்டியிடுகிறது. நிதிஷ் குமார் கட்சிக்கு ஒரு இடம் குறைக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் செல்வாக்கு மிக்க கட்சியாக திகழ்ந்து வருகிறது. மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுடன் தேசிய கட்சிகள் நிதிஷ் குமார் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்ள விரும்பும்.
கடந்த 2019 மக்களவை தேர்தலில் பா.ஜனதா நிதிஷ் குமார் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. மறைந்த ராம் விலாஸ் பஸ்வான் கட்சியும் கூட்டணியில் அங்கம் வகித்தது.
மக்களவை தேர்தலுக்குப் பிறகு பா.ஜனதாவுடன் நிதிஷ் குமாருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகி, லாலு கட்சியுடன் இணைந்து முதல்வராக இருந்தார்.
பா.ஜனதாவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்த நிதிஷ் குமார், 2024 மக்களை தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க இந்தியா கூட்டணியை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டார். இந்தியா கூட்டணி உருவாகி தொகுதி பங்கீடு நடைபெறும் நேரத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பா.ஜனதா உடன் கூட்டணி அமைத்தார். மோடி முன்னிலையில் இனிமேல் ஒருபோதும் என்டிஏ கூட்டணியில் இருந்து விலக மாட்டேன் எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் 40 இடங்களை கொண்ட பீகாரில் மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையில் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
பா.ஜனதாவுக்கு 17 இடங்களும், ஐக்கிய ஜனதா தளத்திற்கு 16 இடங்களும், சிராக் பஸ்வானின் (மறைந்த ராம் விலாஸ் பஸ்வான்) எல்ஜேபி கட்சிக்கு ஐந்து இடங்களும், உபேந்த்ரா குஷ்வாஹா மற்றும் ஜித்தன் ராம் மஞ்ஜி ஆகியோருக்கு தலா ஒரு இடங்களும் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை பீகாரில் நிதிஷ் குமார் கட்சி பா.ஜனதாவை விட குறைவான இடங்களில் போட்டியிட்டதில்லை. முதன்முறையாக ஒரு இடம் குறைவாக பெற்றுள்ளது. இதன்மூலம் அரசியல் களத்தை பா.ஜனதா மாற்றி அமைத்துள்ளதாக கருதப்படுகிறது.
கடந்த 2019-ல் பாஜனதா, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தலா 17 இடங்களில் போட்டியிட்டன. சிராக் பஸ்வானின் தந்தை ராம் விலாஸ் பஸ்வான் கட்சி 6 இடங்களில் போட்டியிட்டது. அந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 40-ல் 39 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்