search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தானேயில் கல்லூரி மாணவியை மானபங்கம் செய்து ஆட்டோவில் இழுத்து சென்ற டிரைவர்
    X

    மாணவி ஆட்டோவில் இழுத்து செல்லப்படும் காட்சி.

    தானேயில் கல்லூரி மாணவியை மானபங்கம் செய்து ஆட்டோவில் இழுத்து சென்ற டிரைவர்

    • தானே ரெயில் நிலையம் அருகே ஆட்டோ டிரைவர், மாணவியை மானபங்கம் செய்தார்.
    • போலீசார் தப்பியோடிய ஆட்டோ டிரைவரை தேடி வந்தனர்.

    தானே :

    தானே ரெயில் நிலையம் அருகே நேற்று அதிகாலை 6.45 மணியளவில் 21 வயது கல்லூரி மாணவி சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆட்டோ டிரைவர், மாணவியை மானபங்கம் செய்தார். அதிர்ச்சி அடைந்த மாணவி உதவி கேட்டு சத்தம் போட்டார். அப்போது அருகில் யாரும் இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ஆட்டோ டிரைவர் அங்கு இருந்து தப்பி ஓட முயன்றார்.

    எனினும் மாணவி டிரைவரின் சட்டை காலரை பிடித்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த டிரைவர் மாணவியை தர, தர வென இழுத்து கொண்டு ஆட்டோவுக்கு சென்றார். ஆனாலும் மாணவி டிரைவரை விடவில்லை.

    இதையடுத்து அவர் ஆட்டோவை ஸ்டார்ட் செய்து, மாணவியை இழுத்து கொண்டே சிறிது தூரம் ஓட்டினார். ஒரு கட்டத்தில் அவர் மாணவியை கீழே தள்ளிவிட்டு தப்பியோடினார். இந்தநிலையில் அந்த பகுதியில் சென்றவர்கள் ஓடிச்சென்று மாணவிக்கு உதவினர்.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய ஆட்டோ டிரைவரை தேடி வந்தனர். இந்தநிலையில் ஆட்டோ டிரைவர் கல்லூரி மாணவியை மானபங்கம் செய்து, ஆட்டோவில் இழுத்து சென்ற சி.சி.டி.வி. காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து மாணவியை மானபங்கம் செய்து ஆட்டோவில் இழுத்து சென்ற டிரைவருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

    Next Story
    ×