என் மலர்
இந்தியா

சத்தீஸ்கரில் 26-க்கும் அதிகமான நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
- இரண்டு மாவட்டங்களுக்கு இடையிலாக அடர்ந்த காட்டில் துப்பாக்கிச்சூடு.
- போலீஸ் தரப்பில் ஒருவர் காயம் அடைந்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீசாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 26-க்கும் அதிகமான நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர்- பிஜபூர் மாவட்டங்களுக்கு இடையிலான அடர்ந்த காட்டுப்பகுதியில், நான்கு மாவட்டத்தின் மாவட்ட ரிசர்வ் கார்டு (DRG) போலீசார் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அபூஜ்மாத் மற்றும் இந்திராவாதி தேசிய பூங்கா இடையில் உள்ள அடர்ந்த காட்டில் இருதரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இதில் 26-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த சண்டையின்போது போலீசாருக்கு உதவி புரிந்த ஒருவர் உயிரிழந்தார். போலீஸ்காரர் ஒருவர் காயம் அடைந்தார். இந்த தகவலை சத்தீஸ்கர் மாநில துணை முதல்வர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நக்சலைட்டுகளை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் காரணமாக சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.






