search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் புதிய சராய் காலே கான் மேம்பாலம்- அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார்
    X

    டெல்லியில் புதிய சராய் காலே கான் மேம்பாலம்- அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார்

    • கெஜ்ரிவால் அரசாங்கம் சராய் காலே கான் மற்றும் ஆசிரமம் இடையே உள்ள பகுதியை மாற்றியுள்ளது.
    • சாதனையை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் குறிப்பிட வேண்டும்.

    டெல்லியில் மூன்று வழிச்சாலை கொண்ட சராய் காலே கான் மேம்பாலத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று திறந்து வைத்தார்.

    பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "கடந்த 5 ஆண்டுகளில் 30 மேம்பாலங்கள் கட்டியதில் 557 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த சாதனையை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் குறிப்பிட வேண்டும்" என்றார்.

    நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் அதிஷி கூறுகையில், "கெஜ்ரிவால் அரசாங்கம் சராய் காலே கான் மற்றும் ஆசிரமம் இடையே உள்ள பகுதியை மாற்றியுள்ளது.

    முன்பு, ஆசிரமத்திற்குச் செல்வது என்பது நெரிசலில் சிக்கி மணிக்கணக்கான நேரம் ஆகும். ஆனால் ஆசிரமம் வரையிலான மேம்பாலம் நீட்டிப்பு மற்றும் சுரங்கப்பாதை ஆகியவை அந்த சிக்கலைத் தீர்த்துவிட்டன. இந்த மேம்பாலம் திறப்பது சாராய் காலே கானை நெரிசல் இல்லாத பகுதியாக மாற்றும்" என்றார்.

    Next Story
    ×