டெல்லியில் பிரபல ஓட்டலுக்கு அருகே பலத்த சத்தத்துடன் நிகழ்ந்த வெடிப்பு - மீண்டுமா? என மக்கள் பீதி

தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.போலீசாரும் தீயணைப்பு படையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்ததனர்.
டெல்லியில் பிரபல ஓட்டலுக்கு அருகே பலத்த சத்தத்துடன் நிகழ்ந்த வெடிப்பு - மீண்டுமா? என மக்கள் பீதி
Published on

டெல்லியில் கடந்த திங்கள்கிழமை மாலை செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே ஏற்பட்ட கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை போலீஸ் அவசர எண்ணுக்கு ஒரு பெண் அழைத்தார்.

குருகிராம் சென்று கொண்டிருந்தபோது மஹிபால்பூர் பகுதியில் உள்ள ராடிசன் ஹோட்டலுக்கு அருகில் வெடிப்பு சத்தம் கேட்டதாக அவர் கூறினார்.

போலீசாரும் தீயணைப்பு படையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்ததனர்.

இருப்பினும், அங்கு எந்த சந்தேகத்திற்கிடமான சம்பவமும் நடக்கவில்லை என்று தெரியவந்தது.

உள்ளூர்வாசிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் விசாரித்தபோது டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்து அந்த வழியாகச் சென்றபோது பின்புற டயர் வெடித்து பலத்த சத்தம் ஏற்பட்டது என்று தெரியவந்தது.

பின்னர் சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்து வெடிப்பு எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com