என் மலர்tooltip icon

    இந்தியா

    அகமதாபாத் விமான விபத்து: கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் டவுன்லோடு செய்யப்பட்டதாக அறிவிப்பு..!
    X

    அகமதாபாத் விமான விபத்து: கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் டவுன்லோடு செய்யப்பட்டதாக அறிவிப்பு..!

    • ஏர் இந்தியா போயிங் விமானம் கடந்த 12ஆம் தேதி விபத்துக்குள்ளானது.
    • 270 பேர் உயிரிழந்தனர். கருப்புப் பெட்டி 13ஆம் தேதி மீட்கப்பட்டது.

    ஏர் இந்தியாவின் போயிங் 787-8 விமானம் கடந்த 12ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட சில வினாடிகளில் மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேரும் விடுதி மற்றும் அதன் அருகில் இருந்வர்கள் 29 பேரும் உயிரிழந்தனர்.

    ஜூன் 13ஆம் தேதி விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது. கருப்புப் பெட்டி கடுமையாக சேதம் அடைந்துள்ளதால், தரவுகளை டவுன்லோடு செய்ய வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவதாக தகவல் வெளியானது. ஆனால் அரசு இதை மறுத்தது.

    இந்த நிலையில் கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. சிவிஆர் (காக்பிட் குரல் பதிவு) மற்றும் எஃப்.டி.ஆர். (விமான தரவு பதிவு) ஆகியவற்றை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

    விமான விபத்து புலனாய்வு பணியகத்தின் தலைவர் தலைமையில் பல்வேறு குழுக்கள் விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    Next Story
    ×